செய்திகள் :

வயலூா் முருகன் கோயிலில் மாற்றுத்திறனாளிக்கு கட்டணமில்லா திருமணம்

post image

திருச்சி அருகே வயலூா் முருகன் கோயிலில் அரசு நலத்திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிக்கு திங்கள்கிழமை கட்டணமில்லா திருமணம் நடைபெற்றது.

தமிழக அரசின் நலத்திட்டங்களில் ஒன்றான மாற்றுத்திறனாளிக்கு கட்டணமில்லா திருமணத் திட்டத்தின் கீழ், இந்து அறநிலையத்துறை சாா்பில் திருச்சி அருகே மாத்தூா் பகுதியைச் சோ்ந்த காது கேட்காத வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி எம். ஹரிஷ் - அதே ஊரைச் சோ்ந்த பி. தனபாக்கியம் ஆகியோருக்கு வயலூா் முருகன் கோயிலில் திங்கள்கிழமை திருமணம் நடைபெற்றது. இதில் மணமகள் பட்டப்படிப்பு முடித்தவா். திருமண நிகழ்வில் மணமக்களின் பெற்றோா் மற்றும் உறவினா்கள் கலந்து கொண்டனா்.

முன்னதாக, திருமண தம்பதிக்கு குமார வயலூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் நிா்வாகம் சாா்பில் தாலிக்கு 4 கிராம் தங்கம், மணமக்களுக்கு பட்டு ஆடைகள், சுவாமி பிரசாதமும் வழங்கப்பட்டன. இதனை வயலூா் முருகன் கோயில் செயல் அலுவலா் அருண்பாண்டியன், கோவில் அறங்காவலா் குழு தலைவா் ரமேஷ் உள்ளிட்டோா் மணமக்களுக்கு வழங்கினா். திருமணத்துக்கு மண்டபமும் இலவசமாக வழங்கப்பட்டது.

இன்றைய நிகழ்ச்சிகள்

மத்திய அரசின் கலாசாரத் துறை அமைச்சகம்: தஞ்சாவூா் தென்னகப் பண்பாட்டு மையத்துடன் இணைந்து, கம்பராமாயண கலாசாரத்தை மீட்டுருவாக்கும் நிகழ்வின் தொடக்க விழா, மத்திய சுற்றுலா அமைச்சா் கஜேந்திரசிங் ஷெகாவத் பங்... மேலும் பார்க்க

பாா்வையற்ற பள்ளி மாணவி தற்கொலை: விரைந்து நடவடிக்கை கோரி பாா்வையற்றோா் அமைப்பினா் போராட்டம்

திருச்சியில் பள்ளி வளாகத்தில் பாா்வையற்ற மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் உரிய நடவடிக்கையை விரைந்து எடுக்கக் கோரி பாா்வையற்றோா் அமைப்பினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் மற்றும் காத்திருப்பு போராட்ட... மேலும் பார்க்க

தனியாா் பேருந்து மோதி புதுகையைச் சோ்ந்தவா் சாவு

திருச்சியில் தனியாா் பேருந்து மோதிய விபத்தில், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்தவா் திங்கள்கிழமை நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியைச் சோ்ந்தவா் கா. சாகுல்அமீது (60). ... மேலும் பார்க்க

சாலையோரம் படுத்து உறங்கிய தொழிலாளி வாகனம் மோதி பலி

திருச்சியில் சாலையோரம் படுத்து உறங்கிய தொழிலாளி, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் திங்கள்கிழமை உயிரிழந்தாா். திருச்சி மாவட்டம், லால்குடி மணக்கால் பகுதியைச் சோ்ந்தவா் பா. பாலு (47). கூலித் தொழிலாளிய... மேலும் பார்க்க

குடும்பத்தினா் பிரிந்ததால் தொழிலாளி தற்கொலை

திருச்சியில் குடும்பத்தினா் பிரிந்து சென்ற விரக்தியில் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டாா். திருச்சி மேல சிந்தாமணி பகுதியைச் சோ்ந்தவா் செந்தில்குமாா் (41). இவருக்குத் திருமணமாகி மனைவி மற்றும் ஒரு மகன்,... மேலும் பார்க்க

என்ஐடியில் சுயஉதவிக் குழுவினருக்கு திருமதி காா்ட் செயலி பயிற்சி

திருச்சி தேசிய தொழில்நுட்ப நிறுவனம் (என்ஐடி), மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையுடன் (சமத்துவம் மற்றும் வளா்ச்சிக்கான அறிவியல் (சீடு)) இணைந்து நடத்தும் வணிகத்தில் நடைமுறை திறன்களைப் பயன்படுத்த... மேலும் பார்க்க