செய்திகள் :

`வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு; தமிழ்நாடு போராடும்,வெல்லும்’ - சட்டப்பேரவையில் உற்சாகமான ஸ்டாலின்

post image

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிப்பதில்லை என்றும் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் விவகாரத்தில் ஆளுநர் இடையூறு செய்வதாகவும் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் இருமனுக்களை தாக்கல் செய்திருந்தது. இந்த மனுவை நீதிபதிகள் பரிதிவாலா மற்றும் மகாதேவன் அமர்வு விசாரித்து வந்தனர்.

இந்த வழக்கு விசாரணையில் தமிழ்நாடு அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் ராகேஷ் திவேதி ஆஜராகியிருந்தார். ஆளுநர் ரவி தரப்பில் அட்டார்னி ஜெனரல் வெங்கடரமணி ஆஜராகியிருந்தார்.

ஆளுநர் ரவி - முதல்வர் ஸ்டாலின்

இந்த வழக்கில், "2வது முறையாக நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பி வைத்தது சட்டவிரோதம்" என்றும் "மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் மதிப்பளிக்க வேண்டும். அரசியலமைப்பு படியே ஆளுநர் செயல்பட வேண்டுமே தவிர அரசியல் சார்போடு செயல்படக்கூடாது" என உச்ச நீதிமன்றம் ஆளுநரை கண்டித்திருக்கிறது.

மேலும், "தமிழ்நாடு அரசின் மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒரு மாத காலத்துக்குள் ஒப்புதல் தர வேண்டும். ஆளுநருக்கு அரசியல் சாசனத்தின் 200-வது பிரிவின் படி சுயேட்சையாக செயல்பட அதிகாரம் உள்ளதா? அல்லது மாநில அமைச்சரவையின் முடிவுக்கு கட்டுப்பட்டவரா? என்பது குறித்து முடிவு எடுக்க வேண்டும். மாநில அரசின் ஆலோசனைப்படியே ஆளுநர் செயல்பட வேண்டும்." என்று அழுத்தமாகத் தீர்ப்பு வழங்கியிருக்கிறது.

"எங்களுக்கு இதை விட்டால் வேறு வழி தெரியவில்லை” என குறிப்பிட்டு தமிழ்நாடு அரசு அனுப்பிய 10 மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளித்ததுள்ளது உச்ச நீதிமன்றம். உச்ச நீதிமன்றத்திற்கு சிறப்பு அதிகாரங்கள் வழங்கும் சட்டப்பிரிவு 142ன் படி உச்ச நீதிமன்றம் இதை அறிவித்திருக்கிறது.
ஆளுநர் ரவி | RN Ravi | supreme Court

இதுகுறித்து இன்று சட்டபேரவையில் பேசியிருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின், "ஆளுநருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசுக்கு வெற்றி கிடைத்துள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை தமிழக அரசு பெற்றுள்ளது. உச்ச நீதிமன்றம் இன்று வழங்கிய தீர்ப்பு தமிழகம் மட்டுமின்றி பிற மாநில அரசுகளுக்கும் கிடைத்த வெற்றி. தமிழக அரசின் வாதத்தையும் நியாயத்தையும் ஏற்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பு வழங்கியிருக்கிறார்கள். மாநில சுயாட்சி, மத்திய கூட்டாட்சி தத்துவத்தை நிலைநாட்ட தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்" என்று பேசியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

நாங்குநேரி சின்னதுரை மீது மீண்டும் கொடூர தாக்குதல் - 5 பேர் கொண்ட மர்மக் கும்பல் யார்?

நெல்லை மாவட்டம் நாங்குநேரி பகுதியைச் சேர்ந்த சின்னத்துரை, 2023-ம் ஆண்டு பிளஸ் டூ படித்துக் கொண்டிருந்த போது சாதிய பாகுபாடு காரணமாக சக மாணவர்களால் வீடு புகுந்து கொடூரமாக அரிவாளால் வெட்டப்பட்டார். அதில்... மேலும் பார்க்க

`திமுக நீர் மோர் பந்தலுக்காக குப்பை வண்டியில் சென்ற குடிநீர்' - அதிர்ச்சி வீடியோ, வலுக்கும் கண்டனம்

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே சாமளாபுரம் பேரூராட்சித் தலைவராக உள்ளவர் திமுக-வைச் சேர்ந்த விநாயகா பழனிசாமி. இவரது ஏற்பாட்டில் முதல்வர் ஸ்டாலினின் பிறந்தநாளையொட்டி, சாமளாபுரத்தில் நீர் மோர் பந்தல் ... மேலும் பார்க்க

``நீங்க வசிப்பது வக்ஃப் நிலம்; வாடகை கொடுங்க...’’ - ஒரு கிராமமே அதிர்ச்சி; என்ன நடக்கிறது வேலூரில்?

வேலூர் மாவட்டம், இறைவன்காடு ஊராட்சிக்குட்பட்ட காட்டுக்கொல்லை கிராமத்தில் வீடுகள் கட்டி வசித்து வரும் 150 குடும்பங்களிடம் திடீரென மாதாந்திர தரை வாடகை கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது விரிஞ்சிபுரம் பக... மேலும் பார்க்க

Palm Sunday: டெல்லியில் ஈஸ்டர் குருத்தோலை ஊர்வலத்திற்குத் தடை; பாஜக அரசுக்கு வலுக்கும் கண்டனம்!

இயேசு கிறிஸ்து உயிர்த்தெழும் ஈஸ்டர் பெருவிழா கொண்டாடப்படும் ஞாயிற்றுக்கிழமைக்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமையின்போதுதான் குருத்தோலை ஞாயிறு கொண்டாடப்படுகிறது. அவ்வகையில் கடந்த 15 ஆண்டுகளாக தலைநகர் டெல்லியில... மேலும் பார்க்க

மாதாந்திர நிதியுதவி: 8 லட்சம் பெண்களின் பெயர்களை பட்டியலில் இருந்து நீக்கிய மகாராஷ்டிரா அரசு!

மகாராஷ்டிராவில் 65 வயது வரையிலான பெண்களுக்கு மாதம் ரூ.1500 வழங்கும் முக்கிய மந்திரி லட்ஹி பெஹின் யோஜனா திட்டத்தை மாநில அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டம் அமலுக்கு வந்த பிறகு மாநிலத்தில் கடுமையான ந... மேலும் பார்க்க

TN Assembly: சட்டப்பேரவையில் மாநில சுயாட்சி தீர்மானம் - முதல்வர் ஸ்டாலினின் முழு உரை

இன்று (ஏப்ரல் 15) தமிழ்நாடு சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் மாநில சுயாட்சி - தீர்மானத்தைத் தாக்கல் செய்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின். மாநில உரிமைகளைக் காப்பதன் தேவை குறித்தும் மத்திய அரசின் செயல்ப... மேலும் பார்க்க