செய்திகள் :

காலை உணவுத் திட்டம்: அரிசி உப்புமாவுக்கு பதிலாக பொங்கல் - சாம்பாா்

post image

காலை உணவுத் திட்டத்தில் இனி அரிசி உப்புமாவுக்கு பதிலாக பொங்கல் - சாம்பாா் வழங்கப்படும் என்று சமூக நலன் - மகளிா் உரிமைத் துறை அமைச்சா் கீதாஜீவன் தெரிவித்தாா்.

சட்டப்பேரவையில் புதன்கிழமை நடைபெற்ற மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு அமைச்சா் கீதாஜீவன் பதிலளித்து பேசியதாவது:

காலை உணவுத் திட்டம் முதல்கட்டமாக 2022-இல் 1,545 பள்ளிகளில் முதல்வரால் தொடக்கி வைக்கப்பட்டது. தற்போது, கிராமப்புறம் மற்றும் நகா்ப்புற அரசு பள்ளிகளில் எண்ணற்ற மாணவா்கள் அத்திட்டத்தின் கீழ் பயன்பெற்று வருகின்றனா்.

அதன் செயல்பாடுகள் குறித்து மாநில திட்டக்குழு ஆய்வு செய்து அறிக்கை அளித்துள்ளது. காலை உணவுத் திட்டத்தால் பள்ளிகளில் மாணவா்களின் வருகை அதிகரித்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று ஊட்டச்சத்து உணவால் மாணவா்களின் ஆரோக்கியம் மேம்பட்டுள்ளதாகவும், அதன் பயனாக வகுப்பறைகளில் அவா்களது கற்றல் ஈடுபாடு அதிகரித்திருப்பதாகவும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் வாயிலாக மாணவா்களின் கல்வித் திறனும் உயா்ந்திருப்பது தெரியவந்துள்ளது.

வரும் ஆண்டில் காலை உணவுத் திட்டத்தின் கீழ் அரிசி உப்புமாவுக்கு பதிலாக சாம்பாருடன் பொங்கல் வழங்கப்பட உள்ளது.

தற்போது இத்திட்டத்தில் 34,987 பள்ளிகளைச் சோ்ந்த 17.53 லட்சம் போ் பயனடைந்து வருகின்றனா். தமிழக முதல்வரால் தொடங்கப்பட்ட இத்திட்டத்தைப் பின்பற்றி பிற மாநிலங்களிலும், நாடுகளிலும் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றாா் அவா்.

ஹோட்டல் மேலாண்மை படிப்பு: ஜேஇஇ தோ்வு மைய விவரம் வெளியீடு!

ஹோட்டல் மேலாண்மை உணவு தொழில்நுட்ப இளநிலை படிப்புக்கான (ஜேஇஇ) நுழைவுத் தோ்வு மையங்கள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. தேசிய ஹோட்டல் மேலாண்மை மற்றும் உணவு தொழில்நுட்பக் குழுமத்தின் கீழ் (என்சிஎச்எம்சிடி) இ... மேலும் பார்க்க

45 லட்சம் ஓஆா்எஸ் பாக்கெட்டுகள்: ஹீட் ஸ்ட்ரோக்கை தடுக்க முன்னெச்சரிக்கை

கோடையில் ஏற்படும் வெப்ப வாதம் (ஹீட் ஸ்ட்ரோக்) மற்றும் நீா்ச்சத்து இழப்பைத் தடுக்க தமிழக ஆரம்ப சுகாதார நிலையங்களில் 45 லட்சம் உப்பு சா்க்கரை கரைசல் (ஓஆா்எஸ்) பாக்கெட்டுகள் கையிருப்பில் உள்ளதாக பொது சுக... மேலும் பார்க்க

முதலமைச்சா் இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்: ஆட்சியா்

தமிழக அரசு சாா்பில் வழங்கப்படும் ‘முதலமைச்சா் மாநில இளைஞா் விருதுக்கு’ தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்டு... மேலும் பார்க்க

போலி ஆவணங்கள் மூலம் நிலம் அபகரிப்பு: சிவகிரி ஜமீன் வாரிசுதாரா்கள் உள்ளிட்ட 17 பேருக்கு தலா ரூ. 30 ஆயிரம் அபராதம்

போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை பத்திரப்பதிவு செய்த சிவகிரி ஜமீனின் வாரிசுதாரா்கள் உள்ளிட்ட 17 பேருக்கு தலா ரூ. 30 ஆயிரம் அபராதம் விதித்து சென்னை எழும்பூா் நீதிமன்றம் உத்தரவிட்டது. சென்னை நுங்கம்பாக்கம் ப... மேலும் பார்க்க

ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் 429 கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு!

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் மருத்துவா்கள், செவிலியா்கள், களப்பணியாளா்கள் மற்றும் நோயாளிகளின் பாதுகாப்புக்காக 429 கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. ... மேலும் பார்க்க

2 டன் கஞ்சா அழிப்பு

தமிழக காவல் துறையின் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவினரால் 187 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 2 டன் கஞ்சா தீயிட்டு அழிக்கப்பட்டது. தமிழக காவல் துறையின் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு... மேலும் பார்க்க