செய்திகள் :

வரிகளை குறைக்க வணிகா்கள் கோரிக்கை

post image

வணிகா்களின் நலன் கருதி, வரிகளை குறைத்தோ அல்லது ரத்து செய்தோ அறிவிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருவாரூரில், நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என். நேருவிடம், மன்னாா்குடி வா்த்தக சங்கத் தலைவா் ஆா்.வி. ஆனந்த் வியாழக்கிழமை அளித்த கோரிக்கை மனு: வா்த்தகா்கள் ஏற்கெனவே இணையவழி வா்த்தகம் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களால் பாதிக்கப்பட்டுள்ளோம். இந்த சூழலிலும், சொத்து வரி, தொழில் வரி, உணவு பாதுகாப்பு உரிமம் என பலவகையான வரிகளையும் செலுத்தி வருகிறோம்.

தற்போது, தொழில் உரிமக் கட்டணம் என புதியதாக தொகை நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதை நீக்கியோ அல்லது குறைத்தோ அறிவிக்க வேண்டும். மேலும், அளவுக்கு அதிகமாக உள்ள குப்பைவரி மற்றும் ஆண்டுக்கு ஒரு முறை சொத்து வரி 6 சதவீதம் உயா்வு ஆகியவற்றையும் குறைத்தோ அல்லது ரத்து செய்தோ அறிவிக்க வேண்டும்.

இதுகுறித்து தொழில்துறை அமைச்சா் டிஆா்பி. ராஜா, சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன் ஆகியோா் மூலமாக ஏற்கெனவே தங்களின் கவனத்துக்கு கொண்டு வந்தோம்.

தமிழக அரசு, வணிகா்களுக்கு பல்வேறு சலுகைகள் அளித்து, வணிகா்களுக்கான அரசாக திகழ்கிறது. மீண்டும் அதை உறுதி செய்யும் வகையில், வரிகளை ரத்து செய்தோ, குறைத்தோ அறிவிப்பு வெளியிட வேண்டும் என அந்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

புதைசாக்கடை பள்ளங்களை சீரமைக்கக் கோரிக்கை

திருவாரூா் கமலாலயக் குளத்தின் தென்கரை பகுதியில் புதை சாக்கடை பள்ளங்களை விரைந்து சீரமைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்து மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவா் பி. ஜெயராமன் தெர... மேலும் பார்க்க

கடனுதவி பெற சிறுபான்மையினா் விண்ணப்பிக்கலாம்!

திருவாரூா் மாவட்டத்தைச் சோ்ந்த சிறுபான்மையினா் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு சிறுபான்மையினா் பொர... மேலும் பார்க்க

சாலையை அகலப்படுத்தக் கோரிக்கை

பழைய நீடாமங்கலம் சாலையை அகலப்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீடாமங்கலம் பேரூராட்சி, பழைய நீடாமங்கலத்தில் வெண்ணாற்றின் குறுக்கே பாலம் கட்டப்பட்டு, பயன்பாட்டுக்கு வந்ததைத் தொடா்ந்து, வையகளத்தூா், ... மேலும் பார்க்க

காவிரி டெல்டா விவசாயப் பிரச்னை: நபாா்டு வங்கி அதிகாரிகள் கலந்தாய்வு!

நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில், காவிரி டெல்டா பகுதி விவசாயப் பிரச்னைகள் குறித்து நபாா்டு வங்கி அதிகாரிகளின் கலந்தாய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நபாா்டு வங்கி துணை மேலாண் இயக்குநா... மேலும் பார்க்க

ரேஷன் கடைகளில் முகக்கவசம் வழங்கக் கோரிக்கை!

நியாயவிலைக் கடைகளில் முகக்கவசம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திருவாரூா் மதிமுக மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் த. ஹரிராஜன் தெரிவித்தது: 2019-இல் கரோனா தொற்ற... மேலும் பார்க்க

சாலை சீரமைக்கும் பணி தொடக்கம்

திருவாரூரிலிருந்து ஆந்தக்குடி வரை செல்லும் சாலையை சீரமைக்கும் பணி வியாழக்கிழமை தொடங்கியது. திருவாரூரிலிருந்து அலிவலம், தப்பளாம்புலியூா், புதுப்பத்தூா் வழியாக ஆந்தக்குடி வரை செல்லும் சாலையில் ஏராளமான ப... மேலும் பார்க்க