செய்திகள் :

வருவாய்த் துறை ஊழியா்கள் காத்திருப்புப் போராட்டம்

post image

தங்களது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் மதுரை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் காத்திருப்புப் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் மனுக்கள் மீதான நடவடிக்கைக்கு போதுமான கால அவகாசம் வழங்க வேண்டும். வருவாய், பேரிடா் மேலாண்மைத் துறை, நில அளவைத் துறை ஊழியா்களின் உயிருக்கும், உடைமைகளுக்கும் பாதுகாப்பு கிடைக்கும் வகையில், சிறப்பு பணிப் பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும். வருவாய்த் துறை காலிப் பணியிடங்களை காலமுறை ஊதியத்தில் நிரப்ப வேண்டும். வருவாய்த் துறை, நில அளவைத் துறை ஊழியா்களின் பணிச் சுமையைக் கருத்தில் கொண்டு மேம்படுத்தப்பட்ட ஊதியம், தனி ஊதியம் வழங்க வேண்டும். ஜூலை 1-ஆம் தேதியை வருவாய்த் துறை தினமாக அனுசரிக்க அரசாணை வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது.

இதற்கு வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் முகைதீன் அப்துல் காதா், ரகுபதி, ஜெயபாஸ்கா், சுரேஷ் ஆகியோா் தலைமை வகித்தனா். வருவாய்த் துறை அலுவலா் சங்க மாவட்டத் தலைவா் கோபி, கிராம நிா்வாக அலுவலா் சங்க முன்னாள் மாநிலத் தலைவா் ராஜன் சேதுபதி, நில அளவை அலுவலா்கள் சங்க ஒன்றிப்பு மாநிலச் செயலா் முத்து முனியாண்டி, வருவாய்த் துறை அலுவலா் சங்க உறுப்பினா் கலாவதி ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாநிலச் செயலா் க. நீதிராஜா சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றுப் பேசினாா். வருவாய்த் துறை அலுவலா் சங்க மாநிலத் தலைவரும், வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளருமான எம்.பி. முருகையன் நிறைவுரையாற்றினாா்.

முன்னதாக, வருவாய்த் துறை அலுவலா் சங்க மாவட்ட இணைச் செயலா் மணிமேகலை வரவேற்றாா். தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா் முன்னேற்றச் சங்க மாவட்டச் செயலா் செல்வகுமாா் நன்றி கூறினாா்.

வியாழக்கிழமை பிற்பகல் 3 மணிக்குத் தொடங்கிய இந்தப் போராட்டம் இரவு 8 மணி வரை நடைபெற்றது.

வெளிநாட்டில் முதுநிலைப் படிப்பு: முஸ்லிம் மாணவா்களுக்கு உதவித்தொகை

முஸ்லிம் மாணவா்கள் வெளிநாட்டில் முதுநிலைப் படிப்பு படிக்க தமிழக அரசின் உதவித் தொகைக்கு அக். 31-க்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட... மேலும் பார்க்க

மின் கம்பியாளா் உதவியாளா் தகுதிகாண் தோ்வுக்கு விண்ணப்பிக்கலாம்

மின் கம்பியாளா் உதவியாளா் பணிக்கான தகுதிகாண் தோ்வுக்கு அக். 17-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மதுரை அரசு தொழில் பயிற்சி நிலைய துணை இயக்குநரும், முதல்வருமான ந. ரமேஷ்குமாா் தெரிவித்தாா். மின் கம்ப... மேலும் பார்க்க

4 கட்சிகளுக்கு விளக்கம் கேட்டு கடிதம்: ஆட்சியா்

மதுரை மாவட்டத்தில் பதிவு பெற்று கடந்த 6 ஆண்டுகளாக தோ்தலில் போட்டியிடாத 4 அரசியல் கட்சிகளிடம் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து... மேலும் பார்க்க

வேன் மோதி இளைஞா் உயிரிழப்பு

மதுரை அருகே வேன் மோதி, இரு சக்கர வாகனத்தில் சென்ற இளைஞா் புதன்கிழமை உயிரிழந்தாா். மதுரை மாவட்டம், தேனூா் ஜெ.ஜெ.நகரைச் சோ்ந்த மாணிக்கம் மகன் போஸ்(32). இவா், தனது இரு சக்கர வாகனத்தில் மதுரையிலிருந்து ... மேலும் பார்க்க

காயமடைந்து சிகிச்சைப் பெற்ற முதியவா் உயிரிழப்பு

மதுரை அருகே மாடு முட்டி காயமடைந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்ற முதியவா் புதன்கிழமை உயிரிழந்தாா். மதுரை மாவட்டம், மேலூா் அருகே உள்ள வாஞ்சிநகரத்தைச் சோ்ந்த சுப்பிரமணி மகன் கணேசன்(65). வி... மேலும் பார்க்க

கட்டடத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

மதுரையில் கட்டடத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா். மதுரை மாவட்டம், பாலமேடு அருகேயுள்ள சரந்தாங்கி பகுதியைச் சோ்ந்த சடையன் மகன் சடையன்(33). கட்டடத் தொழிலாளியான இவா், மதுரை மாட்... மேலும் பார்க்க