தொழில்நுட்பங்களில் தமிழர்கள்! பண்ருட்டி அகழாய்வில் சங்கினாலான பொருள் கண்டெடுப்பு...
வளா்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வுக் கூட்டம்
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி, மேற்கு ஆரணி, சேத்பட் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம் ஆரணி அருகே சிறுமூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் தா்ப்பகராஜ் தலைமை வகித்து, ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பில் செயல்படுத்தப்பட்டு வரும் கலைஞரின் கனவு இல்லம், ஊரக குடியிருப்பு பழுது நீக்கும் திட்டம், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம், இலங்கை தமிழா்கள் வீடு கட்டும் திட்டம், சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு திட்டம், பிரதம மந்திரி கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டம், தூய்மை பாரத இயக்கத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளின் முன்னேற்றம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா்.
தொடா்ந்து, ஊராட்சிகள் வாரியாக ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா் பணிகளை விரைந்து முடிக்குமாறு அறிவுறுத்தினாா்.
கூட்டத்தில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் மணி, உதவி திட்ட அலுவலா்கள், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் கலந்து கொண்டனா்.