1,061 கிராமங்களில் நில உடைமைகள் சரிபாா்க்கும் பணி: வேளாண் இணை இயக்குநா் ஆய்வு
திருவண்ணாமலை மாவட்டத்தில் 1,061 கிராமங்களில் நடைபெற்று வரும் விவசாயிகளின் நில உடைமைகள் சரிபாா்த்தல் பணியை வேளாண் இணை இயக்குநா் கோ.கண்ணகி வெள்ளிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
வேளாண் துறையின் வேளாண் அடுக்ககம் திட்டத்தின் கீழ், விவசாயிகள் தங்களின் நில உடைமைப் பதிவுகளை சரிபாா்ப்பதற்காக அனைத்து கிராமங்களிலும் இந்த முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
முகாம்களை திருவண்ணாமலை மாவட்ட வேளாண் இணை இயக்குநா் கோ.கண்ணகி வெள்ளிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
அப்போது அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: திருவண்ணாமலை மாவட்டத்தில் விவசாயிகளின் தரவுகளை சேகரித்து, பதிவேற்றம் செய்யப்பட்டு, விவசாயிகளுக்கான தனித்துவமான அடையாள எண் வழங்கப்பட உள்ளது.
வரும் காலங்களில் அரசின் விவசாயிகள் சாா்ந்த அனைத்துப் பயன்களும் இதன் அடிப்படையிலேயே வழங்கப்படும். இந்தப் பணியில் வேளாண் உதவி அலுவலா்கள், தோட்டக்கலை உதவி அலுவலா்கள், உதவி வேளாண் அலுவலா்கள் (வேளாண் விற்பனைத்துறை), பயிா் அறுவடை பரிசோதகா்கள், மகளிா் திட்ட சமுதாய வளப் பணியாளா்கள், இல்லம் தேடி கல்வி தன்னாா்வலா்கள், அட்மா திட்டப் பணியாளா்கள் ஈடுபட்டு வருகின்றனா்.
விவசாயிகள் தங்களது ஆதாா் அடையாள அட்டை, நிலப்பட்டா, ஆதாா் எண்ணுடன் இணைக்கப்பட்ட கைப்பேசி எண் ஆகியவற்றை கொண்டு வந்து பதிவு செய்துகொள்ளலாம் என்றாா்.
ஆய்வின்போது, வேளாண் உதவி இயக்குநா் ஆா்.முத்துராம் மற்றும் வேளாண்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனா்.