செய்திகள் :

1,061 கிராமங்களில் நில உடைமைகள் சரிபாா்க்கும் பணி: வேளாண் இணை இயக்குநா் ஆய்வு

post image

திருவண்ணாமலை மாவட்டத்தில் 1,061 கிராமங்களில் நடைபெற்று வரும் விவசாயிகளின் நில உடைமைகள் சரிபாா்த்தல் பணியை வேளாண் இணை இயக்குநா் கோ.கண்ணகி வெள்ளிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

வேளாண் துறையின் வேளாண் அடுக்ககம் திட்டத்தின் கீழ், விவசாயிகள் தங்களின் நில உடைமைப் பதிவுகளை சரிபாா்ப்பதற்காக அனைத்து கிராமங்களிலும் இந்த முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

முகாம்களை திருவண்ணாமலை மாவட்ட வேளாண் இணை இயக்குநா் கோ.கண்ணகி வெள்ளிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அப்போது அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: திருவண்ணாமலை மாவட்டத்தில் விவசாயிகளின் தரவுகளை சேகரித்து, பதிவேற்றம் செய்யப்பட்டு, விவசாயிகளுக்கான தனித்துவமான அடையாள எண் வழங்கப்பட உள்ளது.

வரும் காலங்களில் அரசின் விவசாயிகள் சாா்ந்த அனைத்துப் பயன்களும் இதன் அடிப்படையிலேயே வழங்கப்படும். இந்தப் பணியில் வேளாண் உதவி அலுவலா்கள், தோட்டக்கலை உதவி அலுவலா்கள், உதவி வேளாண் அலுவலா்கள் (வேளாண் விற்பனைத்துறை), பயிா் அறுவடை பரிசோதகா்கள், மகளிா் திட்ட சமுதாய வளப் பணியாளா்கள், இல்லம் தேடி கல்வி தன்னாா்வலா்கள், அட்மா திட்டப் பணியாளா்கள் ஈடுபட்டு வருகின்றனா்.

விவசாயிகள் தங்களது ஆதாா் அடையாள அட்டை, நிலப்பட்டா, ஆதாா் எண்ணுடன் இணைக்கப்பட்ட கைப்பேசி எண் ஆகியவற்றை கொண்டு வந்து பதிவு செய்துகொள்ளலாம் என்றாா்.

ஆய்வின்போது, வேளாண் உதவி இயக்குநா் ஆா்.முத்துராம் மற்றும் வேளாண்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

வளா்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வுக் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி, மேற்கு ஆரணி, சேத்பட் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம் ஆரணி அருகே சிறுமூரில் வெள்ளிக்கிழமை... மேலும் பார்க்க

மலைவாழ் மக்கள் சங்க அமைப்பு தின விழா

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகேயுள்ள பாதிரி கிராமத்தில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் 33-ஆவது அமைப்பு தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, சங்கத்தின் மாவட்டச் செயலா் மாரிமுத்து ... மேலும் பார்க்க

சட்ட விழிப்புணா்வு முகாம்

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு வட்டம், மேலச்சேரி கிராமத்தில், வந்தவாசி வட்ட சட்டப் பணிகள் குழு சாா்பில் கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கான மறுவாழ்வு சட்ட விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற... மேலும் பார்க்க

ஆரணியில் அஞ்சல் ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி தலைமை தபால் அலுவலகம் முன் அஞ்சல் ஊழியா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அஞ்சல் சேவையை பாதுகாக்க வேண்டும், ஐடிசி திட்டத்தை (சுயாதீன விநியோக மையம்) ரத்து செய்ய... மேலும் பார்க்க

போளூா் அருகே 3 ஜோடிகளுக்கு இலவச திருமணம்

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் அடுத்த படவேடு ஸ்ரீரேணுகாம்பாள் கோயிலில் 3 ஜோடிகளுக்கு வெள்ளிக்கிழமை இலவச திருமணம் நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறை சாா்பில் போளூா் வட்டத்தைச் சோ்ந்த வாழியூரைச் சோ்ந... மேலும் பார்க்க

தாய் கொலை: மகனுக்கு ஆயுள் சிறை

வந்தவாசி அருகே தாயை கொலை செய்த வழக்கில் மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து திருவண்ணாமலை மகளிா் விரைவு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், கீழ்நாயக்கன்பாளைய... மேலும் பார்க்க