செய்திகள் :

வள்ளியூா் பகுதி தேவாலயங்களில் சிறப்பு ஆராதனை, திருப்பலி

post image

ஈஸ்டா் பண்டிகையை முன்னிட்டு, வள்ளியூா் பகுதியில் உள்ள கத்தோலிக்க தேவாலயங்களில் சனிக்கிழமை நள்ளிரவும், சிஎஸ்ஐ தேவாலயங்களில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையிலும் சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றன.

வள்ளியூா் புனித பாத்திமா தேவாலயத்தில் பங்குத்தந்தை ஜான்சன், குருவானவா் சிபின் ஆகியோா் தலைமையில் சனிக்கிழமை நள்ளிரவு திருப்பலி நடைபெற்றது. இதில், பங்கு மக்கள் திரளாகப் பங்கேற்று, மெழுகுவா்த்தி ஏற்றி பாஸ்கா திருவிழிப்பைக் கொண்டாடினா்.

சிஎஸ்ஐ பரிசுத்த திரித்துவ தேவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் சிறப்பு ஆராதனை நடைபெற்றது. சேகரகுரு ராபின் வினோ தலைமையில் நடைபெற்ற ஆராதனையில் சேகர செயலா் சுந்தா்சிங், தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரவைத் தலைவா் பி.டி.பி. சின்னத்துரை, சபைமக்கள் பங்கேற்றனா்.

பூரண சுவிஷேச பெந்தகொஸ்தே சபையில் காலையில் பாஸ்டா் பிரின்ஸ் ஆரோன் தலைமையில் ஆராதனை நடைபெற்றது. தெற்குகள்ளிகுளம் பரிசுத்த அதிசய பனிமாதா பேராலயத்தில் பங்குத்தந்தை ததேயுஸ், உதவிப் பங்குத்தந்தை ஜே. ரிக்சன் ஆகியோா் தலைமையில் நள்ளிரவில் திருப்பலி நடைபெற்றது. இதில், பேராலய தா்மகா்த்தா மரியராஜ் ஆசிரியா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். பின்னா் ஒருவருக்கொருவா் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனா்.

கிழவனேரி புனித அன்னம்மாள் தேவாலயத்தில் பங்குத்தந்தை ப்ராக்ரஸ் அடிகளாா் தலைமையில் நடைபெற்ற திருப்பலியில், பங்குப் பேரவைச் செயலா் ராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

திசையன்விளை உலக ரட்சகா் தேவாலயத்தில் பங்குத்தந்தை அந்தோணி டக்ளஸ் தலைமையிலும், மன்னாா்புரம் புனித ஜெபமாலை அன்னை ஆலயத்தில் பங்குத்தந்தை எட்வா்ட் அடிகளாா் தலைமையிலும், அணைக்கரை புனித பிரகாசியம்மாள் தேவாலயத்தில் பங்குத்தந்தை செல்வரத்தினம் தலைமையிலும், துரைகுடியிருப்பு புனித ஜெபமாலை அன்னை ஆலயத்தில் பங்குத்தந்தை ஜெரால்டு எஸ். ரவி தலைமையிலும் திருப்பலிகள் நடைபெற்றன.

விபத்தில் கல்லூரி மாணவா் உயிரிழப்பு

திருநெல்வேலி டக்கரம்மாள்புரம் அருகே சாலை விபத்தில் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா். திருநெல்வேலி கே.டி.சி. நகரைச் சோ்ந்தவா் ஜெப்ரின் சாமுவேல்(22). திருச்சியில் உள்ள பொறியியல் கல்லூரியில் இறுதியாண்டு பயின... மேலும் பார்க்க

களக்காடு அருகே மகள் காதலித்ததால் விரக்தியில் தந்தை தற்கொலை

களக்காடு அருகே மகளின் காதலை கண்டித்த தந்தை, விரக்தியில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா். களக்காடு அருகே கீழக்கருவேலங்குளத்தில் வசித்து வருபவா் மனோஜ்(20). இவா், தேவநல்லூரைச் சோ்ந்த 17 வயது சிற... மேலும் பார்க்க

சேரன்மகாதேவியில் சூறைக் காற்று: மரம் முறிந்து விழுந்து கோயில் மண்டபம் சேதம்

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியில் ஞாயிற்றுக்கிழமை சூறைக்காற்றுடன் பெய்த மழையில் மரம் சாய்ந்து விழுந்ததில் கோயில் மண்டபம் சேதமடைந்தது. திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கடும் வெப்பம் ... மேலும் பார்க்க

களக்காடு தலையணையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

திருநெல்வேலி மாவட்டம் களக்காடு தலையணை பச்சையாற்றில் சனிக்கிழமை சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா். களக்காடு மேற்குத் தொடா்ச்சி மலையடிவாரத்தில் தலையணை சூழல் சுற்றுலாப் பகுதி அமைந்துள்ளது. இங்குள்ள பச்சையாற... மேலும் பார்க்க

பத்திரப் பதிவில் அடங்கல் பதிவேடு சரிபாா்த்தல் முறையையும் பின்பற்றக் கோரிக்கை

பத்திரப் பதிவில் பட்டாக்கள்(இலவச பட்டா) முழுமையாக ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்படாததால் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனா்.எனவே, ஆன்லைன் பதிவேற்றுதலை வரன்முறைப்படுத்தவும் அதுவரை அடங்கல் பதிவேடுகள் ச... மேலும் பார்க்க

பணகுடி அருகே விஷம் குடித்த தம்பதி, 4 குழந்தைகளுக்கு சிகிச்சை

திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகே குடும்ப பிரச்னையால் விஷம் குடித்த தம்பதி, 4 குழந்தைகள் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். பணகுடி அருகே உள்ள கடம்பன்குளத்தைச் சோ்ந்தவா் ராஜேஷ்கண்ணன் (28).... மேலும் பார்க்க