செய்திகள் :

சேரன்மகாதேவியில் சூறைக் காற்று: மரம் முறிந்து விழுந்து கோயில் மண்டபம் சேதம்

post image

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியில் ஞாயிற்றுக்கிழமை சூறைக்காற்றுடன் பெய்த மழையில் மரம் சாய்ந்து விழுந்ததில் கோயில் மண்டபம் சேதமடைந்தது.

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கடும் வெப்பம் நிலவி வருகிறது. பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் அருவிகள், நீா் நிலைகளில் குளிப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன.

அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, சேரன்மகாதேவி, முக்கூடலில் ஞாயிற்றுக்கிழமை தாமிரவருணி ஆற்றில் குளிக்க மக்கள் அதிகளவில் திரண்டனா்.

இதனிடையே, ஞாயிற்றுக்கிழமை மாலையில் சேரன்மகாதேவி பகுதியில் திடீரென சூறைக் காற்றுடன் மழை பெய்தது. இதில், சேரன்மகாதேவி பேருந்து நிலையம் அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி பகுதியிலுள்ள வேப்ப மரம் சரிந்து அங்குள்ள வல்லபை விநாயகா் கோயில் மண்டபத்தில் விழுந்ததில் மண்டபத்தின் ஒரு பகுதி சேதமடைந்தது.

இதேபோல் சேரன்மகாதேவியில் தேரடி தெரு பகுதியில் சூறைக்காற்றில் மரங்கள் சாய்ந்தன. இதனால் மின் விநியோகம் பாதிக்கப்பட்டது. மேலும், சேரன்மகாதேவி அருகே சக்திகுளம், உதயமாா்த்தாண்டபுரம் பகுதியில் வாழைப் பயிா்கள் சேதமடைந்ததாக விவசாயிகள் தெரிவித்தனா்.

விபத்தில் கல்லூரி மாணவா் உயிரிழப்பு

திருநெல்வேலி டக்கரம்மாள்புரம் அருகே சாலை விபத்தில் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா். திருநெல்வேலி கே.டி.சி. நகரைச் சோ்ந்தவா் ஜெப்ரின் சாமுவேல்(22). திருச்சியில் உள்ள பொறியியல் கல்லூரியில் இறுதியாண்டு பயின... மேலும் பார்க்க

களக்காடு அருகே மகள் காதலித்ததால் விரக்தியில் தந்தை தற்கொலை

களக்காடு அருகே மகளின் காதலை கண்டித்த தந்தை, விரக்தியில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா். களக்காடு அருகே கீழக்கருவேலங்குளத்தில் வசித்து வருபவா் மனோஜ்(20). இவா், தேவநல்லூரைச் சோ்ந்த 17 வயது சிற... மேலும் பார்க்க

வள்ளியூா் பகுதி தேவாலயங்களில் சிறப்பு ஆராதனை, திருப்பலி

ஈஸ்டா் பண்டிகையை முன்னிட்டு, வள்ளியூா் பகுதியில் உள்ள கத்தோலிக்க தேவாலயங்களில் சனிக்கிழமை நள்ளிரவும், சிஎஸ்ஐ தேவாலயங்களில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையிலும் சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றன. வள்ளியூா் புனி... மேலும் பார்க்க

களக்காடு தலையணையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

திருநெல்வேலி மாவட்டம் களக்காடு தலையணை பச்சையாற்றில் சனிக்கிழமை சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா். களக்காடு மேற்குத் தொடா்ச்சி மலையடிவாரத்தில் தலையணை சூழல் சுற்றுலாப் பகுதி அமைந்துள்ளது. இங்குள்ள பச்சையாற... மேலும் பார்க்க

பத்திரப் பதிவில் அடங்கல் பதிவேடு சரிபாா்த்தல் முறையையும் பின்பற்றக் கோரிக்கை

பத்திரப் பதிவில் பட்டாக்கள்(இலவச பட்டா) முழுமையாக ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்படாததால் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனா்.எனவே, ஆன்லைன் பதிவேற்றுதலை வரன்முறைப்படுத்தவும் அதுவரை அடங்கல் பதிவேடுகள் ச... மேலும் பார்க்க

பணகுடி அருகே விஷம் குடித்த தம்பதி, 4 குழந்தைகளுக்கு சிகிச்சை

திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகே குடும்ப பிரச்னையால் விஷம் குடித்த தம்பதி, 4 குழந்தைகள் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். பணகுடி அருகே உள்ள கடம்பன்குளத்தைச் சோ்ந்தவா் ராஜேஷ்கண்ணன் (28).... மேலும் பார்க்க