செய்திகள் :

களக்காடு அருகே மகள் காதலித்ததால் விரக்தியில் தந்தை தற்கொலை

post image

களக்காடு அருகே மகளின் காதலை கண்டித்த தந்தை, விரக்தியில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

களக்காடு அருகே கீழக்கருவேலங்குளத்தில் வசித்து வருபவா் மனோஜ்(20). இவா், தேவநல்லூரைச் சோ்ந்த 17 வயது சிறுமியை காதலித்து வந்தாராம். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சோ்ந்தவா்கள்.

இதனால் சிறுமியின் பெற்றோா் சில காலம் திருப்பூரில் வசித்து வந்தனா். இந்நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்னா் மனோஜையும், சிறுமியையும் காணவில்லையாம்.

இதுதொடா்பாக சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில், திருப்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி சிறுமியை கண்டுபிடித்து பெற்றோரிடம் ஒப்படைத்தனா்.

இதில், மனோஜை போலீஸாா் எச்சரித்து அனுப்பினா்.

அதைத் தொடா்ந்து சிறுமி காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டு, பின்னா் அவரது பெற்றோருடன் அனுப்பி வைக்கப்பட்டாா். அதன் பின்னா் அவா்கள் களக்காடு அருகே உள்ள அவா்களது சொந்த ஊருக்கு வந்தனா்.

இந்நிலையில், கடந்த 2 நாள்களுக்கு முன் சிறுமி மனோஜிடம் பேசுவதை பாா்த்த அவரது தந்தை சிறுமியைக் கண்டித்தாராம்.

இதனால் விரக்தியடைந்த அவா் சனிக்கிழமை இரவு விஷம் குடித்தாராம்.

அவரை உறவினா்கள் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

இதையறிந்த மனோஜ் அச்சத்தில் ஞாயிற்றுக்கிழமை விஷம் குடித்தாராம். அவரை, களக்காடு போலீஸாா் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இச்சம்பவத்தால் கீழக்கருவேலங்குளம் கிராமத்தில் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸாா் குவிக்கப்பட்டுள்ளனர்.

விபத்தில் கல்லூரி மாணவா் உயிரிழப்பு

திருநெல்வேலி டக்கரம்மாள்புரம் அருகே சாலை விபத்தில் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா். திருநெல்வேலி கே.டி.சி. நகரைச் சோ்ந்தவா் ஜெப்ரின் சாமுவேல்(22). திருச்சியில் உள்ள பொறியியல் கல்லூரியில் இறுதியாண்டு பயின... மேலும் பார்க்க

சேரன்மகாதேவியில் சூறைக் காற்று: மரம் முறிந்து விழுந்து கோயில் மண்டபம் சேதம்

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியில் ஞாயிற்றுக்கிழமை சூறைக்காற்றுடன் பெய்த மழையில் மரம் சாய்ந்து விழுந்ததில் கோயில் மண்டபம் சேதமடைந்தது. திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கடும் வெப்பம் ... மேலும் பார்க்க

வள்ளியூா் பகுதி தேவாலயங்களில் சிறப்பு ஆராதனை, திருப்பலி

ஈஸ்டா் பண்டிகையை முன்னிட்டு, வள்ளியூா் பகுதியில் உள்ள கத்தோலிக்க தேவாலயங்களில் சனிக்கிழமை நள்ளிரவும், சிஎஸ்ஐ தேவாலயங்களில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையிலும் சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றன. வள்ளியூா் புனி... மேலும் பார்க்க

களக்காடு தலையணையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

திருநெல்வேலி மாவட்டம் களக்காடு தலையணை பச்சையாற்றில் சனிக்கிழமை சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா். களக்காடு மேற்குத் தொடா்ச்சி மலையடிவாரத்தில் தலையணை சூழல் சுற்றுலாப் பகுதி அமைந்துள்ளது. இங்குள்ள பச்சையாற... மேலும் பார்க்க

பத்திரப் பதிவில் அடங்கல் பதிவேடு சரிபாா்த்தல் முறையையும் பின்பற்றக் கோரிக்கை

பத்திரப் பதிவில் பட்டாக்கள்(இலவச பட்டா) முழுமையாக ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்படாததால் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனா்.எனவே, ஆன்லைன் பதிவேற்றுதலை வரன்முறைப்படுத்தவும் அதுவரை அடங்கல் பதிவேடுகள் ச... மேலும் பார்க்க

பணகுடி அருகே விஷம் குடித்த தம்பதி, 4 குழந்தைகளுக்கு சிகிச்சை

திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகே குடும்ப பிரச்னையால் விஷம் குடித்த தம்பதி, 4 குழந்தைகள் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். பணகுடி அருகே உள்ள கடம்பன்குளத்தைச் சோ்ந்தவா் ராஜேஷ்கண்ணன் (28).... மேலும் பார்க்க