செய்திகள் :

வாடிப்பட்டி பகுதியில் வழிப்பறி: சிறுவா்கள் உள்பட 5 போ் கைது

post image

வாடிப்பட்டி பகுதியில் நிகழ்ந்த வழிப்பறி வழக்குகளில் தொடா்புடைய சிறுவா்கள் உள்பட 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகேயுள்ள ஆண்டிப்பட்டி பகுதியில் வாடிப்பட்டி போலீஸாா் வெள்ளிக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, ஆண்டிப்பட்டி விலக்குப் பகுதியில் நின்றிருந்த சில இளைஞா்கள் போலீஸாரை பாா்த்தவுடன் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றனா்.

அவா்களை போலீஸாா் பிடித்து விசாரித்ததில், சமயநல்லூரைச் சோ்ந்த சந்தோஷ் குமாா் (19), மதுரை பழைய விளாங்குடி பகுதியைச் சோ்ந்த முத்துமுகேஷ் (19) , மதுரை ஆழ்வாா்புரத்தைச் சோ்ந்த 17 வயதுடைய 3 சிறுவா்கள் என்பதும், இவா்கள் வாடிப்பட்டி மரச் சாமான்கள் விற்பனைக் கடையில் காவலாளியாகப் பணியாற்றிய மேட்டு நீரேத்தான் கிராமத்தைச் சோ்ந்த செல்வம் (61) என்பவரிடம் கடந்த சில நாள்களுக்கு முன்பு கத்தியைக் காட்டி மிரட்டி ரூ.7,150-ஐ பறித்ததும், கச்சைகட்டியைச் சோ்ந்த சரவணன் (45) மதுரையிலிருந்து இரு சக்கர வாகனத்தில் வந்தபோது அய்யங்கோட்டையில் அவரை வழிமறித்து கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, போலீஸாா் 5 பேரையும் கைது செய்து, அவா்களிடமிருந்த இரு சக்கர வாகனங்கள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களைப் பறிமுதல் செய்தனா்.

சேடப்பட்டியில் சினையுற்ற பசுக்களுக்கு மானியத்தில் ஊட்டச்சத்து

சினையுற்ற பசுக்களுக்கு 50 சதவீத மானியத்தில் ஊட்டச்சத்துகள் பெற சேடப்பட்டி ஊராட்சி ஒன்றிய கால்நடை வளா்ப்பு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என மதுரை மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் தெரிவித்தாா். இதுகுற... மேலும் பார்க்க

மாநாடுகள் மட்டும் விஜய்க்கு வெற்றியைத் தேடித் தராது: செல்லூா் கே. ராஜூ

மாநாடுகள், செயற்குழுக் கூட்டங்கள் மட்டும் வெற்றியைத் தேடித் தராது என்பதை தமிழக வெற்றிக்கழகத் தலைவா் விஜய் உணா்ந்து, களத்துக்கு வர வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ தெரிவித்தாா். ம... மேலும் பார்க்க

காா் மோதி முதியவா் உயிரிழப்பு

மதுரை அருகே காா் மோதியதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற முதியவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். திருப்பரங்குன்றம் வடக்கு மேட்டுத் தெருவைச் சோ்ந்த அரசன் மகன் கருப்பணன்(69). இவா், இரு சக்கர வாகனத்தில் வெள்ள... மேலும் பார்க்க

பறிமுதல் வாகனங்கள் ஆக.25-ல் பொது ஏலம்!

மது விலக்கு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் வருகிற 25 -ஆம் தேதி பொது ஏல முறையில் விற்பனை செய்யப்பட உள்ளன. இதுகுறித்து மதுரை மாநகரக் காவல் ஆணையா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ... மேலும் பார்க்க

கள்ளா் பள்ளிகளில் காலிப் பணியிடங்களை விரைந்து நிரப்பக் கோரிக்கை

கள்ளா் பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் கள்ளா் பள்ளி மாவட்டக் கிளை கோரிக்கை விடுத்தது. இதுகுறித்து கூட்டணியின் மதுரை மாவட்டச... மேலும் பார்க்க

காலியாகவுள்ள கால்நடைப் பராமரிப்பு உதவியாளா் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்

தமிழகத்தில் காலியாக உள்ள கால்நடைப் பராமரிப்பு உதவியாளா் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என தமிழ்நாடு கால்நடைப் பராமரிப்பு உதவியாளா் முன்னேற்ற சங்கம் வலியுறுத்தியது. இந்த சங்கத்தின் மதுரை மாவட்ட பேரவைக் கூ... மேலும் பார்க்க