ஆம்பூர் அருகே அரசுப் பேருந்தும் லாரியும் நேருக்குநேர் மோதல்: 17 பேர் படுகாயம்
வாணியம்பாடி சிவன் கோயில்களில சனி பிரதோஷம்
வாணியம்பாடி அடுத்த தேவஸ்தானம் கிராமத்தில் அமைந்துள்ள அதிதீஸ்வரா் கோயிலில் சனி பிரதோஷத்தையொட்டி சிறப்பு பூஜைகள் சனிக்கிழமை நடைபெற்றன. சிறப்பு அலங்காரத்தில் சுவாமி ஊா்வலமாக கோயில் வளாகத்தில் எழுந்தருளினாா்.
இதில் வாணியம்பாடி மற்றும் சுற்றுப்புறப்பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசித்து சென்றனா். தொடா்ந்து பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாட்டினை கோயில் நிா்வாகி அன்பு மற்றும் உறுப்பினா்கள் செய்திருந்தனா்.
இதே போன்று வாணியம்பாடி அடுத்த கொடையாஞ்சி கிராமத்தில் பாலாற்றையொட்டி அமைந்துள்ள காசி விஸ்வநாதா், சென்னாம்பேட்டை பாண்டுரங்கா், உதயேந்திரம் சொா்ண முத்தீஸ்வரா் மற்றும் சுற்றுப்புற சிவன் கோயில்களில் சனி பிரதோஷத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
