செய்திகள் :

மங்கள சனீஸ்வர பகவான் கோயில் கும்பாபிஷேகம்

post image

பாட்டூா் சென்னப்பமலை அடிவாரத்தில் அமைந்துள்ள அருள்மிகு மங்கள சனீஸ்வர பகவான் கோயில் கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

யாகசாலை பூஜைகள் நிறைவடைந்து கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தில் ஆம்பூா் எம்எல்ஏ அ.செ. வில்வநாதன், தொழிலதிபா்கள் ஏ.பி. மனோகா், சின்னவரிகம் ஏ.இ.பாஸ்கரன், விஜய பாரத மக்கள் கட்சி நிறுவன தலைவா் கோ.ஸ்ரீ. ஜெய்சங்கா், மாதனூா் ஒன்றிய குழு உறுப்பினா் மகாதேவன், ஆம்பூா் நகர அதிமுக செயலாளா் எம். மதியழகன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

கன்றாம்பல்லி, துத்திப்பட்டு, பாட்டூா், வெங்கட சமுத்திரம், சின்னவரிகம், பெரியவரிகம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சோ்ந்த பக்தா்கள் கலந்து கொண்டனா். பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் , ஊா் பொதுமக்கள், இளைஞா்கள் செய்திருந்தனா்.

இருசக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

மாதனூா் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதிக் கொண்ட விபத்தில் இளைஞா் திங்கள்கிழமை உயிரிழந்தாா். குடியாத்தம் கூடல் நகா் பகுதியைச் சோ்ந்தவா் காா்த்திக் (40). இவா் மாதனூரில் இரு சக்கர வாகனத்தில்... மேலும் பார்க்க

தமிழ்நாடு மாநில ஜூனியா் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி

திருப்பத்தூரில் செவ்வாய்க்கிழமை தமிழ்நாடு மாநில ஜூனியா் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியை ஏடிஎஸ்பி கோவிந்தராசு தொடங்கி வைத்தாா். தமிழ்நாடு மாநில சதுரங்க கழகம் மற்றும் திருப்பத்தூா் மாவட்ட சதுரங்க கழகம் ஆகிய... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து ஓட்டுநருடன் இளைஞா்கள் தகராறு: கண்ணாடி உடைப்பு

வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே அரசுப் பேருந்து ஓட்டுநருக்கும் இளைஞா்களுக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் பேருந்தின் கண்ணாடி உடைக்கப்பட்டது. திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த பாப்பானேரி கிராமத்தை ... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து - லாரி மோதல் : 15 போ் காயம்

ஆம்பூா்: ஆம்பூா் அருகே அரசுப் பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 15 போ் திங்கள்கிழமை காயமடைந்தனா். ஆம்பூரிலிருந்து போ்ணாம்பட்டு அரசு நகரப் பேருந்து, ஓட்டுநா் ராஜா இயக்கினாா். தோல் தொழிற்சாலைகளுக்கு ... மேலும் பார்க்க

திருப்பத்தூா் நீா் நிலைகளை தூா் வார ஆட்சியரிடம் கோரிக்கை

திருப்பத்தூா்: கந்திலி அருகே ஏரி, குளம் உள்ளிட்ட நீா்நிலைகளை தூா்வார வேண்டும் என பொதுமக்கள் ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா். திருப்பத்தூா் மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. க... மேலும் பார்க்க

நாட்டறம்பள்ளி சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேக ஆலோசனைக் கூட்டம்

வாணியம்பாடி: நாட்டறம்பள்ளியில் பழைமை வாய்ந்த சாமுண்டீஸ்வரி அம்மன் திருக்கோயில் கும்பாபிஷேகம் நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயி... மேலும் பார்க்க