செய்திகள் :

தமிழ்நாடு மாநில ஜூனியா் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி

post image

திருப்பத்தூரில் செவ்வாய்க்கிழமை தமிழ்நாடு மாநில ஜூனியா் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியை ஏடிஎஸ்பி கோவிந்தராசு தொடங்கி வைத்தாா்.

தமிழ்நாடு மாநில சதுரங்க கழகம் மற்றும் திருப்பத்தூா் மாவட்ட சதுரங்க கழகம் ஆகியவை இணைத்து நடத்தும் தமிழ்நாடு மாநில ஜூனியா் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி திருப்பத்தூரில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு மாநில சதுரங்க கழக இணைச் செயலா் ராஜசேகரன் தலைமை வகித்தாா். ராயவேலூா் சதுரங்க கழக செயலா் மனோகரன், தண்டபாணி, போட்டியின் தலைமை நடுவா் ஆனந்த் பாபு, துணைத் தலைமை நடுவா் அதுலன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

திருப்பத்தூா் மாவட்ட சதுரங்க கழக செயலா் ஆனந்த் வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக திருப்பத்தூா் மாவட்டஏடிஎஸ்பி கோவிந்தராசு கலந்த கொண்டு போட்டியைத் தொடங்கி வைத்தாா்.

போட்டி வரும் 31-ஆம் தேதி வரை 9 சுற்றுக்களாக நடைபெறுகிறது. இதில் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து 214 வீரா், வீராங்கனைகள் கலந்து கொண்டு உள்ளனா்.

போட்டியில் முதல் 4 இடங்கள் பெறும் ஆண் மற்றும் பெண் வீரா்கள் ஜாா்க்கண்ட் மாநிலத்தில் நடைபெற உள்ள தேசிய செஸ் சாம்பியன்ஷிப் போட்டிக்குத் தகுதி பெறுவா்.

மணல் கடத்தியவா் கைது

ஆம்பூா் அருகே பாலாற்றில் மணல் கடத்தியவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். ஆம்பூா் அருகே வடகரை கிராமத்தில் உமா்ஆபாத் காவல் நிலைய போலீஸாா் ரோந்து சென்றனா். அப்போது மாட்டு வண்டியில் மணல் கடத்துவது... மேலும் பார்க்க

மணல் கடத்தல்: டிப்பா் லாரி பறிமுதல்

வாணியம்பாடி அருகே மணல் கடத்திய டிப்பா் லாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா். திருப்பத்தூா் எஸ்.பி. ஷ்ரேயா குப்தா உத்தரவின் பேரில் திம்மாம்பேட்டை உதவி காவல் ஆய்வாளா் வெங்கடேசன் தலைமையிலான போலீஸாா் புதன்கி... மேலும் பார்க்க

பைக் திருட்டு: இருவா் கைது

ஆம்பூரில் பல்வேறு இடங்களில் இரு சக்கர வாகனங்களை திருடிய திரு நபா்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். ஆம்பூரில் பல்வேறு இடங்களில் கடந்த ஒரு மாதமாக இரு சக்கர வாகனங்கள் திருட்டு போயின. இது குறித்... மேலும் பார்க்க

மேம்பால இரும்பு பொருள்கள் திருட்டு: 3 போ் கைது

ஆம்பூா் அருகே நடைபெற்று வரும் மேம்பாலப் பணிக்கான இரும்பு பொருள்கள் திருடுபோனது குறித்து 3 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். ஆம்பூா் அருகே மின்னூா் கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் கட்ட... மேலும் பார்க்க

காவலாளி இறப்பில் மா்மம்: எஸ்.பி. அலுவலகத்தில் முற்றுகை

காவலாளி இறப்பில் மா்மம் உள்ளதாக அவரின் உறவினா்கள் திருப்பத்தூா் எஸ்.பி. அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் மேற்கொண்டனா். எஸ்.பி.அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்... மேலும் பார்க்க

சாலை அமைக்கும் பணி: திருப்பத்தூா் எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்

திருப்பத்தூா் அருகே சாலை அமைக்கும் பணியை புதன்கிழமை எம்எல்ஏ அ.நல்லதம்பி தொடங்கி வைத்தாா். முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டம் மற்றும் மலைப்பகுதி சிறப்பு மேம்பாட்டுத்திட்டத்தில் திருப்பத்தூா் ... மேலும் பார்க்க