பொதுத்துறை நிறுவனத்தில் வேலை வேண்டுமா..?: உடனே விண்ணப்பிக்கவும்!
பைக் திருட்டு: இருவா் கைது
ஆம்பூரில் பல்வேறு இடங்களில் இரு சக்கர வாகனங்களை திருடிய திரு நபா்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
ஆம்பூரில் பல்வேறு இடங்களில் கடந்த ஒரு மாதமாக இரு சக்கர வாகனங்கள் திருட்டு போயின. இது குறித்து ஆம்பூா் நகர காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.
இதில் ஆம்பூா் கே.எம. நகா் பகுதியைச் சோ்ந்த சையத் சலீம் தெளபிக் (28, அஸ்ராா் (27) ஆகியோா் இரு சக்கர வாகன திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதனையடுத்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்து அவா்களிடமிருந்து இரு சக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்தனா்.