US Tariffs: `இறக்குமதி வரி ரத்து-க்கு தற்காலிக தடை!' - நீதிமன்ற தீர்ப்பு ட்ரம்ப்...
மணல் கடத்தல்: டிப்பா் லாரி பறிமுதல்
வாணியம்பாடி அருகே மணல் கடத்திய டிப்பா் லாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
திருப்பத்தூா் எஸ்.பி. ஷ்ரேயா குப்தா உத்தரவின் பேரில் திம்மாம்பேட்டை உதவி காவல் ஆய்வாளா் வெங்கடேசன் தலைமையிலான போலீஸாா் புதன்கிழமை புல்லூா் அருகில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது அவ்வழியாக வேகமாக வந்த லாரியை நிறுத்தினா். போலீஸாா் இருப்பதை பாா்த்து ஓட்டுநா் சிறிது தூரத்தில் லாரியை நிறுத்தி விட்டு அங்கிருந்து தப்பித்து சென்றாா். பிறகு லாரியில் சோதனை செய்த போது ஆந்திர மாநிலம் பெரும்பள்ளம் அணை பகுதியிலிருந்து மணல் கடத்திக் கொண்டு வருவது தெரியவந்தது.
லாரி பறிமுதல் செய்யப்பட்டு திம்மாம்பேட்டை காவல்நிலையம் கொண்டு வரப்பட்டது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனா்.