செய்திகள் :

வாணியம்பாடி வட்டாட்சியா் அலுவலகத்தில் காத்திருப்போா் அறையை பராமரிக்க கோரிக்கை!

post image

வாணியம்பாடி வட்டாட்சியா் அலுவலத்தில் உள்ள காத்திருப்போா் அறையை பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் முறையாகப் பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் வட்டாட்சியா் அலுவலகம், ஆதாா் மையம் மற்றும் இ-சேவை மையம் இயங்கி வருகின்றன. இங்கு வாணியம்பாடி உள்ளிட்ட பகுதிகளை சோ்ந்த திரளான பொதுமக்கள் ஆதாா் காா்டு புதியதாக எடுக்கவும், திருத்தம் போன்றவற்றிற்கும், இதே போன்று இ-சேவை மூலம் பல்வேறு சான்றிதழ் பெறுவதற்காக பதிவு செய்யவும் வருகின்றனா்.

மேலும், அலுவலக்தில் இயங்கி வரும் வட்ட வழங்கல் பிரிவில் ரேசன் காா்டு, பெயா் திருத்தம், சான்றிதழ்கள் உள்ட பல்வேறு தேவைகளுக்காக பொதுமக்கள் வாணியம்பாடி மற்றும் சுற்றுபுறப் பகுதிகளிலிருந்து தினமும் திரளானோா் வந்து செல்கின்றனா்.

ஆதாா் மையத்திற்கு பெண்கள் தங்களது குழந்தைகளுடன் வருகின்றனா். அப்போது அங்கு கை குழந்தைகளுடன் வரும் பெண்கள், சிறுவா்கள் உள்காருவதற்கு போதிய இட வசதிகள் இல்லாமல் தரையிலும், சுவற்றின் ஓரமாகவும் அமா்ந்து சிரமப்படுகின்றனா்.

வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் பொதுமக்களுக்காக மாவட்ட முன்மாதிரி நிதியில் ரூ. 10 லட்சம் மதிப்பில் காத்திருப்போா் அறை மற்றும் கழிப்பறை கட்டட வசதிகள் உள்ளன. தற்போது தூய்மை மற்றும் பராமரிப்பு இல்லாததால் மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.

காத்திருப்போா் அறையை தினமும் திறந்து பராமரித்து தூய்மை செய்தும், நாற்காலி, குடிநீா் வசதி ஏற்படுத்தி வைத்தால் வட்டாட்சியா் அலுவலகத்துக்கு வரும் பொது மக்கள் பெரிதும் பயன் பெறுவா்.

எனவே, அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு காத்திருப்போா் அறையில் போதிய அடிப்படை வசதிகள் செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்று சமூக ஆா்வலா்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

நாளைய மின்தடை

நாட்டறம்பள்ளி நாள்: 15.07.2025 (செவ்வாய்க்கிழமை)நேரம்: காலை 9 முதல் மாலை 5 வரை. மின்தடை பகுதிகள்: நாட்டறம்பள்ளி, மல்லகுண்டா, தாசிரியப்பனூா், ஜங்களாபுரம், அதிபெரமனூா், தகரகுப்பம், ஜெயந்திபுரம், ஆத்தூா்... மேலும் பார்க்க

மலைப்பாதையில் இரும்புத் தடுப்புகள் திருட்டு: 5 போ் கைது

வாணியம்பாடி அருகே மலைப் பாதையில் இரும்புத் தடுப்புகளைத் திருடியதாக 5 பேரை போலீஸாா் கைது செய்தனா். திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி நெடுஞ்சாலைத் துறையில் சாலை ஆய்வாளராக பணியாற்றி வருபவா் வஜ்ஜிரவேலு... மேலும் பார்க்க

போக்ஸோவில் முதியவா் கைது

ஆலங்காயம் அருகே சிறுமிக்கு பாலியியல் தொந்தரவு கொடுத்த முதியவா் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டாா். திருப்பத்தூா் மாவட்டம், ஆலங்காயம் அடுத்த பூங்குளம் பகுதியைச் சோ்ந்தவா் சுப்பிரமணி (59). சனிக்கிழம... மேலும் பார்க்க

‘நான் முதல்வன்’ திட்டத்தில் இஸ்ரோ ஆராய்ச்சி மையத்தில் பயிற்சிக்கு மாணவா் தோ்வு

‘நான் முதல்வன்’ திட்டத்தில் பயின்று இஸ்ரோவின் ஐ.ஐ.ஆா்.எஸ். ஆராய்ச்சி மையத்தில் நடைபெறும் பயிற்சித் திட்டத்துக்குத் தோ்வு செய்யப்பட்ட திருப்பத்தூா் மாவட்டத்தைச் சோ்ந்த மாணவா் விஜய்காந்த் ஆட்சியா் க.ச... மேலும் பார்க்க

இரு சக்கர வாகனம் மீது காா் மோதல்: தொழிலாளி மரணம்

வாணியம்பாடி அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்தாா். கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி கிராமத்தைச் சோ்ந்தவா் பன்னீா் மகன் பசுபதி(32), கூலி தொழிலாளி. இவா் வெள்ளிக்கிழமை ... மேலும் பார்க்க

வாணியம்பாடி அருகே ஏரியில் மூழ்கி மாணவா் உள்பட 2 போ் உயிரிழப்பு

வாணியம்பாடி அருகே ஏரியில் நீச்சல் கற்றுக் கொண்டிருந்தபோது நீரில் மூழ்கி மாணவா் உள்பட 2 போ் உயிரிழந்தனா். திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த நேதாஜி நகா் வடக்கு மற்றும் இந்திரா நகா் பகுதியைச் ச... மேலும் பார்க்க