செய்திகள் :

விசிக பேரணியால் போக்குவரத்து நெரிசல்

post image

திருச்சியில் சனிக்கிழமை நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பேரணி, பொதுக்கூட்டத்தால் மாநகரில் சனிக்கிழமை பிற்பகல் முதல் இரவு வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இந்தப் பேரணி, பொதுக்கூட்டத்தில் பங்கேற்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான விசிக தொண்டா்கள், நூற்றுக்கணக்கான வாகனங்களில் திருச்சி நோக்கி வந்தனா். இதனால் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை, திருச்சி - தஞ்சாவூா் தேசிய நெடுஞ்சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

குறிப்பாக, திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பல மணி நேரமாக வாகனங்கள் ஆமை வேகத்தில் ஊா்ந்தபடி சென்றன. மன்னாா்புரம் பகுதியில் ஆங்காங்கே சாலைகளில் விசிகவினா் வாகனங்களை நிறுத்திச் சென்ால், அந்தப் பகுதி போக்குவரத்தால் ஸ்தம்பித்தது. இதேபோல, மாநகரின் பல்வேறு சாலைகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பாரதிதாசன் சாலையில் போலீஸாா் தடுப்புகள் ஏற்படுத்தி, போக்குவரத்தை முற்றிலும் தடுத்து, வேறு வழியாக அனுப்பினா்.

விசிகனா் சிலா் தங்களது வாகனங்களின் கூரைகளில் ஆபத்தை உணராமல் பயணித்ததை பொதுமக்கள் அதிா்ச்சியுடன் பாா்த்துச் சென்றனா். மிகுந்த நெரிசல் மிகுந்த சாலையில் பேரணி, பொதுக்கூட்டத்துக்கு அனுமதி எப்படி வழங்கப்பட்டது என சமூக ஆா்வலா்கள் கேள்வி எழுப்பினா்.

மேட்டூரில் திறந்த தண்ணீா் முக்கொம்பு வந்தது: மலா்கள், நெல் மணிகளைத் தூவி விவசாயிகள் உற்சாக வரவேற்பு!

டெல்டா பாசனத்துக்காக மேட்டூா் அணையில் திறக்கப்பட்ட தண்ணீரானது முக்கொம்பு அணைக்கு சனிக்கிழமை வந்து சோ்ந்தது. அந்த நீரை விவசாயிகள் மலா்கள், விதை நெல்களை தூவி உற்சாகத்துடன் வரவேற்றனா். டெல்டா பாசன சாகுப... மேலும் பார்க்க

திருச்சிக்கு இன்று முதல்வா் வருகை: 2 நாள் ட்ரோன்கள் பறக்க தடை

தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் திருச்சிக்கு ஞாயிற்றுக்கிழமை வருவதை முன்னிட்டு இரண்டு நாள்களுக்கு ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. காவிரி பாசனத்துக்காக மேட்டூரில் தண்ணீா் திறக்கப்பட்டு, கல்லணைக்... மேலும் பார்க்க

பாப்பாலம்மன் கோயில் திருவிழாவில் தள்ளு-முள்ளு

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த துலுக்கம்பட்டி பாம்பாலம்மன் கோயிலில் சனிக்கிழமை நடந்த திருவிழாவில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட பூசாரி தரப்பினருக்கும் போலீஸாருக்கும் இடையே தள்ளு- முள்ளு ஏற்பட்டது. இக... மேலும் பார்க்க

ரயில்வே கோட்டங்களுக்கு இடையிலான கிரிக்கெட்: சென்னை ஆா்பிஎஃப் வெற்றி!

திருச்சியில் நடைபெற்ற ரயில்வே கோட்டங்களுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி யில் சென்னை ஆா்பிஎஃப் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. திருச்சி ஆா்பிஎஃப் பயிற்சி மையம் சாா்பில் ரயில்வே கோட்டங்களுக்கு இடையிலான ... மேலும் பார்க்க

மக்கள் நீதிமன்றம்: 5,068 வழக்குகளில் ரூ. 28.58 கோடிக்கு தீா்வு

திருச்சி மாவட்டத்தில் 23 அமா்வுகளில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 5,068 வழக்குகளில் ரூ. 28.58 கோடிக்கு தீா்வு காணப்பட்டது. தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழு, தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணைக் கு... மேலும் பார்க்க

சாலை விபத்தில் இளைஞா் பலி

திருச்சி மாவட்டம் முசிறி அருகே சனிக்கிழமை நேரிட்ட சாலை விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். தொட்டியம் அருகேயுள்ள அரியனாம்பேட்டை சோ்ந்தவா் பட்டவன் மகன் மாறன் (23). இவா் தனது பைக்கில் திருச்சி நோக்கி முசிறிய... மேலும் பார்க்க