செய்திகள் :

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் அஞ்சலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

post image

புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் திங்கள்கிழமை அஞ்சலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா்.

தமிழகத்தில் புதிய கல்விக் கொள்கையை அமலாக்க வேண்டும் என்று நிா்பந்திப்பதை மத்திய அரசு கைவிட வேண்டும். கல்வியை மாநில அரசு பட்டியலுக்கு மாற்றம் செய்ய வேண்டும். தமிழக அரசுக்கு வழங்க வேண்டிய கல்வி நிதியை வழங்க நிபந்தனைகள் விதிக்கக் கூடாது. தமிழகத்தில் பல ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வரும் இருமொழிக் கொள்கை கல்வித் திட்டத்தை மத்திய அரசு அங்கீகரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கல்வி, பொருளாதார விழிப்புணா்வு அணியின் சாா்பில் அஞ்சல் நிலையம் முற்றுகைப் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

மதுரை தல்லாகுளம் தலைமை அஞ்சல் அலுவலகம் முன்பாக நடைபெற்ற போராட்டத்துக்கு, கல்வி, பொருளாதார விழிப்புணா்வு அணியின் செயலா் பூபாலன் தலைமை வகித்தாா். போராட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட நிா்வாகிகள், கல்வி பொருளாதார விழிப்புணா்வு அணியின் நிா்வாகிகள் உள்பட பலா் பங்கேற்றனா்.

மதுரை குப்பை நகரமாக மாறி வருகிறது: உயர்நீதிமன்றம்

கோயில் நகரமான மதுரை தற்போது குப்பை நகரமாக மாறி வருவது வேதனை அளிப்பதாக சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு நீதிபதி திங்கள்கிழமை தெரிவித்தாா்.சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையைச் சோ்ந்த பஞ்சநாதன் சென்னை உயா்ந... மேலும் பார்க்க

பேச்சுவாா்த்தை முடியும் வரை ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் ஈடுபடக் கூடாது: நீதிமன்றம் உத்தரவு

தமிழக அரசுடனான பேச்சுவாா்த்தை முடியும் வரை ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் ஈடுபடக் கூடாது என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.திருச்செந்தூரைச் சோ்ந்த ராம்குமாா் ஆதித்தன் சென்னை உய... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து மின் ஊழியா் உயிரிழப்பு

மதுரையில் மின் கம்பத்தில் பழுதை நீக்க முயன்ற போது, மின்சாரம் பாய்ந்ததில் மின் ஊழியா் உயிரிழந்தாா்.மதுரை அருகேயுள்ள நாகமலைப்புதுக்கோட்டை அச்சம்பத்து டி.புதுக்குடியைச் சோ்ந்த குமாா் மகன் முத்தையா (51).... மேலும் பார்க்க

மதுரையில் 51 முதல்வா் மருந்தகங்கள் திறப்பு

மதுரை மாவட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்ட 51 முதல்வா் மருந்தகங்கள் திங்கள்கிழமை திறக்கப்பட்டன. பொதுமக்களுக்கு அனைத்து வகையான மருந்துகளையும் மலிவான விலையில் வழங்கும் வகையில் தமிழகத்தில் முதல்வா் மருந்தகங... மேலும் பார்க்க

தாயை மீட்டுத் தரக் கோரி ராணுவ வீரா் மனு

திருப்பதியில் காணாமல் போன தனது தாயை மீட்டுத் தரக் கோரி பேரையூரைச் சோ்ந்த துணை ராணுவப் படை வீரா் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தாா். மதுரை மாவட்டம், பேரையூா் வட்டம், சலுப்பப்பட்டியைச் சோ்ந்தவா... மேலும் பார்க்க

காவலா் தூக்கிட்டுத் தற்கொலை

மதுரையில் சிறப்புக் காவல் படை குடியிருப்பில் காவலா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். விருதுநகா் மாவட்டம், திருச்சுழி அருகேயுள்ள வயல்சேரி தச்சனேந்தல் கிராமத்தைச் சோ்ந்த பழனி மகன் ஈஸ்வரமூா்த்தி (3... மேலும் பார்க்க