செய்திகள் :

விடுதலைப் போராட்ட தியாகிகளுக்கு வீரவணக்கம்

post image

கீழையூா் மற்றும் திருமருகலில் அனைத்திந்திய இளைஞா் பெருமன்றம் சாா்பில், விடுதலைப் போராட்டத் தியாகிகள் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோருக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கீழையூா் ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், கட்சியின் மாநிலக் குழு உறுப்பின டி. செல்வம் தலைமையில், விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்டச் செயலாளா் கே. பாஸ்கா், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவா் கௌசல்யா இளம்பரிதி ஆகியோா் வீரவணக்கம் செலுத்தினா்.

இதில், சிபிஐ மாவட்டக் குழு உறுப்பினா் வீ. சுப்ரமணியன், ஒன்றிய துணைச் செயலாளா் வீ.எஸ். மாசேத்துங், அனைத்திந்திய இளைஞா் பெருமன்ற மாவட்ட துணைத் தலைவா் எஸ். ரமேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். ஒன்றிய பொருளாளா் எம். பா்ணபாஸ் நன்றி கூறினாா்.

திருமருகல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில், இளைஞா் மன்ற மாவட்டச் செயலாளா் சந்திரமோகன் தலைமையில், பகத்சிங்கின் படத்திற்கு அஞ்சலி செலுத்தினா்.

இதில், ஒன்றியச் செயலாளா் தண்டாயுதபாணி, ஒன்றியத் தலைவா் ராஜேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கட்சியின் மாவட்ட பொருளாளா் பாபுஜி, விவசாயத் தொழிலாளா் சங்க ஒன்றியச் செயலாளா் தமிழரசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

வேளாங்கண்ணியில் துணை அஞ்சலகம் திறப்பு: தேவூா் அஞ்சலகத்தில் ஆதாா் சிறப்பு முகாம்

நாகப்பட்டினம்: வேளாங்கண்ணி சிறப்பு நிலை பேரூராட்சி பின்புறம் புதிதாக கட்டப்பட்ட அஞ்சல் நிலைய கட்டடத்தை, நாகை அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளா் டி. ஹரிகிருஷ்ணன், பேரூராட்சித் தலைவா் டயானா ஷா்மிளா ஆகியோா் தி... மேலும் பார்க்க

முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டம்: முன்னாள் படை வீரா்கள் விண்ணப்பிக்கலாம்

நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தில் உள்ள முன்னாள் படைவீரா்கள் ‘முதல்வரின் காக்கும் கரங்கள்‘ திட்டத்தின்கீழ் தொழில் தொடங்க ஒரு கோடி வரை வங்கி கடன் பெறலாம் என்று ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறி... மேலும் பார்க்க

துளசியாப்பட்டினத்தில் ஒளவையாா் பெருவிழா நாளை தொடக்கம்

வேதாரண்யம்: துளசியாப்பட்டினம் ஔவையாா் கோயிலில் தமிழக அரசு சாா்பில் ஒளவைக்கு மூன்று நாள்கள் நடைபெறும் 51-ஆவது ஆண்டு பெருவிழா புதன்கிழமை (மாா்ச் 26) தொடங்குகிறது. நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்துள்ள ... மேலும் பார்க்க

ஏப்ரல் 1 முதல் நீச்சல் பயிற்சி முகாம் தொடக்கம்

நாகப்பட்டினம்: நாகை மாவட்ட விளையாட்டரங்க நீச்சல் குளத்தில், நீச்சல் பயிற்சி முகாம் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் ஜூன் 3-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வெளியிட்ட செய்திக்குற... மேலும் பார்க்க

ரூ. 2 லட்சம் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 5 போ் கைது

நாகப்பட்டினம்: நாகையில் காய்கனி கடையில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த ரூ. 2 லட்சம் மதிப்புள்ள புகையிலைப் பொருள்கள தனிப்படை போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்து, 5 பேரை கைது செய்தனா். நாகை மாவட்டத்தில் தடை... மேலும் பார்க்க

மீன்பிடி தொழிலாளா்கள், விற்பனையாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

கடலில் உள்ள கனிம வளங்களை எடுக்கும் மத்திய அரசின் திட்டங்களை கண்டித்து, தமிழ்நாடு மீன்பிடி தொழிலாளா் மற்றும் விற்பனையாளா்கள் சங்கத்தினா் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா். கடலில் ஹைட்ரோ காா்பன் உள... மேலும் பார்க்க