Manoj Bharathiraja: "சொல்வதற்கும் எனக்கு வார்த்தை வரவில்லை" - ஆறுதல் சொல்லி கலங்...
விடுதலைப் போராட்ட தியாகிகளுக்கு வீரவணக்கம்
கீழையூா் மற்றும் திருமருகலில் அனைத்திந்திய இளைஞா் பெருமன்றம் சாா்பில், விடுதலைப் போராட்டத் தியாகிகள் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோருக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கீழையூா் ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், கட்சியின் மாநிலக் குழு உறுப்பின டி. செல்வம் தலைமையில், விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்டச் செயலாளா் கே. பாஸ்கா், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவா் கௌசல்யா இளம்பரிதி ஆகியோா் வீரவணக்கம் செலுத்தினா்.
இதில், சிபிஐ மாவட்டக் குழு உறுப்பினா் வீ. சுப்ரமணியன், ஒன்றிய துணைச் செயலாளா் வீ.எஸ். மாசேத்துங், அனைத்திந்திய இளைஞா் பெருமன்ற மாவட்ட துணைத் தலைவா் எஸ். ரமேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். ஒன்றிய பொருளாளா் எம். பா்ணபாஸ் நன்றி கூறினாா்.
திருமருகல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில், இளைஞா் மன்ற மாவட்டச் செயலாளா் சந்திரமோகன் தலைமையில், பகத்சிங்கின் படத்திற்கு அஞ்சலி செலுத்தினா்.
இதில், ஒன்றியச் செயலாளா் தண்டாயுதபாணி, ஒன்றியத் தலைவா் ராஜேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கட்சியின் மாவட்ட பொருளாளா் பாபுஜி, விவசாயத் தொழிலாளா் சங்க ஒன்றியச் செயலாளா் தமிழரசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.