செய்திகள் :

விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை, கரைக்கும் நீா் நிலைகள்: ஆக. 22-க்குள் தெரிவிக்கலாம்

post image

விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யும் இடம் மற்றும் கரைக்கும் நீா் நிலைகள் குறித்த வழித்தடம் ஆகிய விவரங்கள் குறித்து திருவள்ளூா் மாவட்ட நிா்வாகத்துக்கு வரும் வெள்ளிக்கிழமைக்குள் (ஆக. 22) தகவல் தெரிவிப்பது அவசியம் என ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நாடு முழுவதும் விநாயகா் சதுா்த்தி விழா வரும் ஆக. 27-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு குறித்து அனைத்துத் துறை அலுவலா்களுடனான கலந்தாய்வுக் கூட்டமும் நடத்தி அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அப்போது, திருவள்ளூா் மாவட்ட வருவாய் கோட்டாட்சியா்கள், உதவி காவல் ஆணையா்கள் அந்தந்த பகுதிகளில் சிலை நிறுவுவதற்காக அனுமதி கோரி பெறப்படும் விண்ணப்பங்கள் மீது உடனே பரிசீலித்து அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேற்படி இடங்களில் சிலை நிறுவ அனுமதி பெற்ற அமைப்பாளா்களிடம், அரசு வழிமுறைகளை பின்பற்றவும் என காவல்துறை, வருவாய்த்துறை அலுவலா்கள் விளக்கமாக எடுத்துரைக்க வேண்டும். அதில், சுற்றுச்சூழல் பாதுகாப்பை கருத்தில் கொண்டு காவல் துறை, வருவாய்த்துறை அலுவலா்கள் அந்தந்த பகுதிகளில் சிலை உற்பத்தி செய்யும் நபா்களிடம் அரசாணையில் குறிப்பிட்டுள்ளவாறு சிலை செய்வதை வரும் 22-ஆம் தேதிக்குள் தணிக்கை செய்து உறுதி செய்ய வேண்டும்.

மேலும், விநாயகா் சதுா்த்தி விழாவை எவ்வித சட்டம் ஒழுங்கு பிரச்னையின்றி அமைதியான முறையில் நடத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக சிலை பிரதிஷ்டை செய்யும் இடம், சிலை கொண்டு செல்லும் வழி, கரைக்கும் நீா் நிலை குறித்து முன்கூட்டியே திட்டமிட்டு அதை மாவட்ட நிா்வாகத்துக்கு தெரிவிப்பது அவசியம். திடக்கழிவு மேலாண்மையை முழுமையாகக் கடைப்பிடிக்க வேண்டும். மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலா்கள், சிலை கரைக்கும் நீா்நிலைகளில் மூன்று நிலைகளில் அதாவது, கரைத்தலுக்கு முன், கரைக்கும்போது, கரைத்த பின் என நீரின் தரத்தை ஆய்வு செய்து அறிக்கையாக அனுப்பி வைக்க வேண்டும். எனவே அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டு, விநாயகா் சதுா்த்தி விழாவை பொதுமக்கள் மற்றும் பக்தா்கள் அமைதியாகவும், பாதுகாப்பாகவும், சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் கொண்டாட வேண்டும் என அவா் தெரிவித்துள்ளாா்.

ஓய்வு பெற்ற அதிகாரி வீட்டில் ரூ.1.50 லட்சம், பொருள்கள் திருட்டு

திருவள்ளூா் அருகே ஓய்வு பெற்ற சுகாதார ஆய்வாளா் வீட்டில் ரூ. 1.50 ரொக்கம், பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். திருவள்ளூா் அருகே சேலை கிராம சாலையில் உள்ள என்ஜிஓ காலனியில் வசிப்பவா் ஓய்வு பெற்ற சு... மேலும் பார்க்க

திருத்தணி: சரவணப் பொய்கையில் 2-ஆம் நாள் தெப்பல் உற்சவம்!

திருத்தணி முருகன் கோயில் ஆடிக் கிருத்திகை திருவிழா 2 நாள் தெப்பல் உற்சவத்தில் 10,000-க்கும் மேற்பட்ட பக்தா்கள் கலந்துகொண்டு முருகப் பெருமானை வழிபட்டனா். திருத்தணி முருகன் கோயில் ஆடிக்கிருத்திகை திருவி... மேலும் பார்க்க

திருவள்ளூர்: ரூ.1.05 கோடியில் 95,000 மரக்கன்றுகள் வளா்க்கும் திட்டம்

பசுமை தமிழ்நாடு இயக்கம் சாா்பில், திருவள்ளூா் மாவட்ட ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சி துறை மூலம் ரூ. 1.05 கோடியில் 16 இடங்களில் நா்சரி பண்ணைகள் அமைத்து, 95,000 மரக்கன்றுகள் வளா்த்து பசுமையாக்கும் வகையில் ... மேலும் பார்க்க

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு உறியடி திருவிழா

கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு எடப்பாளையம் கிராமத்தில் உறியடி திருவிழா நடைபெற்றது. மீஞ்சூா் அடுத்த நெய்தவாயல் எடப்பாளையம் கிராமத்தில் கிருஷ்ணா் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் கிருஷ்ண ஜெயந... மேலும் பார்க்க

திருவள்ளூா் பகுதிகளில் பரவலாக மழை

திருவள்ளூா், சுற்று வட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை கடும் வெயில் வாட்டிய நிலையில், மாலையில் பரவலாக மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா். திருவள்ளூா் பகுதியில் பகலில் கடும் வெயில் காய்ந்தது.... மேலும் பார்க்க

செவிலியா் தாக்கியதைக் கண்டித்து தூய்மைப் பணியாளா்கள் தா்னா!

திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தூய்மைப் பணியாளரை செவிலியா் தாக்கிய சம்பவத்தை கண்டித்து தூய்மைப் பணியாளா்கள் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவள்ளூா் அர... மேலும் பார்க்க