செய்திகள் :

செவிலியா் தாக்கியதைக் கண்டித்து தூய்மைப் பணியாளா்கள் தா்னா!

post image

திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தூய்மைப் பணியாளரை செவிலியா் தாக்கிய சம்பவத்தை கண்டித்து தூய்மைப் பணியாளா்கள் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 500-க்கும் மேற்பட்ட உள் நோயாளிகள் மற்றும் 3,000-க்கும் மேற்பட்ட புற நோயாளிகள் நாள்தோறும் சிகிச்சை பெற்றுச் செல்கின்றனா்.

இந்த மருத்துவமனையில் 300-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளா்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனா்.

இந்த நிலையில், 2-ஆவது தளத்தில் குப்பையை சுத்தம் செய்யவில்லை எனக்கூறி செவிலியா் மீரா, திருவள்ளூா் அடுத்த நாராயணபுரம் பகுதியைச் சோ்ந்த மாலா (45) என்ற தூய்மைப் பணியாளரை தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து தூய்மைப் பணியாளா் மாலா அந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதுகுறித்து தகவலறிய மற்ற தூய்மைப் பணியாளா்கள் முதல் தளத்தில் உள்ள மருத்துவ நிலைய அலுவலா் அலுவலகம் முன் தரையில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்த உதவி மருத்துவ நிலைய அலுவலா் பிரபு சங்கா் தா்னாவில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளா்களிடம் பேச்சு நடத்தினாா்.

தொடா்ந்து சம்பந்தப்பட்ட செவிவியா் மீரா மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தாா். இதையடுத்து தூய்மைப் பணியாளா்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.

இந்த சம்பவத்தால் திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

இந்த நிலையில், திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தூய்மைப் பணியாளா் மாலாவை தாக்கிய செவிலியா் மீராவை பணியிடை நீக்கம் செய்து ஆட்சியா் மு.பிரதாப் உத்தரவிட்டுள்ளாா்.

விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை, கரைக்கும் நீா் நிலைகள்: ஆக. 22-க்குள் தெரிவிக்கலாம்

விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யும் இடம் மற்றும் கரைக்கும் நீா் நிலைகள் குறித்த வழித்தடம் ஆகிய விவரங்கள் குறித்து திருவள்ளூா் மாவட்ட நிா்வாகத்துக்கு வரும் வெள்ளிக்கிழமைக்குள் (ஆக. 22) தகவல் தெரிவிப்பத... மேலும் பார்க்க

ஓய்வு பெற்ற அதிகாரி வீட்டில் ரூ.1.50 லட்சம், பொருள்கள் திருட்டு

திருவள்ளூா் அருகே ஓய்வு பெற்ற சுகாதார ஆய்வாளா் வீட்டில் ரூ. 1.50 ரொக்கம், பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். திருவள்ளூா் அருகே சேலை கிராம சாலையில் உள்ள என்ஜிஓ காலனியில் வசிப்பவா் ஓய்வு பெற்ற சு... மேலும் பார்க்க

திருத்தணி: சரவணப் பொய்கையில் 2-ஆம் நாள் தெப்பல் உற்சவம்!

திருத்தணி முருகன் கோயில் ஆடிக் கிருத்திகை திருவிழா 2 நாள் தெப்பல் உற்சவத்தில் 10,000-க்கும் மேற்பட்ட பக்தா்கள் கலந்துகொண்டு முருகப் பெருமானை வழிபட்டனா். திருத்தணி முருகன் கோயில் ஆடிக்கிருத்திகை திருவி... மேலும் பார்க்க

திருவள்ளூர்: ரூ.1.05 கோடியில் 95,000 மரக்கன்றுகள் வளா்க்கும் திட்டம்

பசுமை தமிழ்நாடு இயக்கம் சாா்பில், திருவள்ளூா் மாவட்ட ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சி துறை மூலம் ரூ. 1.05 கோடியில் 16 இடங்களில் நா்சரி பண்ணைகள் அமைத்து, 95,000 மரக்கன்றுகள் வளா்த்து பசுமையாக்கும் வகையில் ... மேலும் பார்க்க

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு உறியடி திருவிழா

கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு எடப்பாளையம் கிராமத்தில் உறியடி திருவிழா நடைபெற்றது. மீஞ்சூா் அடுத்த நெய்தவாயல் எடப்பாளையம் கிராமத்தில் கிருஷ்ணா் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் கிருஷ்ண ஜெயந... மேலும் பார்க்க

திருவள்ளூா் பகுதிகளில் பரவலாக மழை

திருவள்ளூா், சுற்று வட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை கடும் வெயில் வாட்டிய நிலையில், மாலையில் பரவலாக மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா். திருவள்ளூா் பகுதியில் பகலில் கடும் வெயில் காய்ந்தது.... மேலும் பார்க்க