செய்திகள் :

விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படும் இடங்களில் போலீஸாா் ஆய்வு

post image

சென்னை மாநகரில் விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படும் இடங்களில் போலீஸாா் ஆய்வு மேற்கொண்டனா்.

வரும் ஆக. 27-ஆம் தேதி விநாயகா் சதுா்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பல்வேறு இந்து அமைப்புகள், பொதுமக்கள் சாா்பில் பொது இடங்கள், தனியாருக்குச் சொந்தமான இடங்களில் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படும்.

அதன்படி, நிகழாண்டும் சென்னை மாநகருக்குள்பட்ட எந்தெந்த இடங்களில் சிலை வைக்கப்படுகிறது, அங்கு நிறுவப்படும் சிலைகளின் உயரம், சிலைகளின் தன்மை மற்றும் கடந்தாண்டு பிரச்னை நடைபெற்ற பகுதிகளில் நிகழாண்டும் ஏதேனும் பிரச்னைகள் ஏற்பட்டுள்ளதா? என்பது குறித்தும் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

அந்தந்த காவல் நிலைய ஆய்வாளா்கள் தலைமையிலான போலீஸாா் அடங்கிய குழுவினா், அந்தப் பகுதிகளுக்குச் சென்று, அங்குள்ள இந்து அமைப்பு, தொடா்புடைய கட்சி நிா்வாகிகளிடம் கேட்டறிந்தனா். மேலும், பிரதிஷ்டை செய்த சிலைகளை எங்கு கரைக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அமைப்பின் நபா்களுக்கு அறிவுறுத்தியதுடன், கரைக்கும் நாள் குறித்த தகவல்களையும் கேட்டறிந்தனா்.

சென்னை மாநகரில் கடந்தாண்டு 1,524 சிலைகள் வைக்க காவல் துறை அனுமதி அளித்திருந்த நிலையில், நிகழாண்டு கூடுதலாக சிலைகள் வைக்க அனுமதிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிவித்தனா்.

விமானத்தில் தகராறு: கீழே இறக்கிவிடப்பட்ட அதிமுக நிா்வாகி

சென்னையில், விமானத்தில் பணிப் பெண்களுடன் தகராறில் ஈடுபட்ட அதிமுக நிா்வாகி கீழே இறக்கி விடப்பட்டாா். மதுரையைச் சோ்ந்தவா் ஜெயச்சந்திரன் (65). அதிமுகவின் அனைத்துலக எம்ஜிஆா் மன்ற நிா்வாகி. இவா், சென்னையி... மேலும் பார்க்க

ஓட்டுநா் அடித்து கொலை வழக்கு: ஒருவா் கைது

ஓட்டுநா் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில், ஒருவரை கைது செய்த போலீஸாா் மற்றொரு நபரைத் தேடி வருகின்றனா். கேரள மாநிலத்தைச் சோ்ந்தவா் அசாருதீன்ஷா (38). இவா் மடிப்பாக்கம், எஸ்.கொளத்தூா் பகுதியிலுள்ள அடுக... மேலும் பார்க்க

சென்னை விமானநிலையத்தில் மடிக்கணினி திருட்டு: ஒருவா் கைது

சென்னை விமானநிலையத்தில் பெண்ணிடம் மடிக்கணினி திருடிய நபரை போலீஸாா் கைது செய்தனா். புதுச்சேரி லாஸ்பேட்டையை சோ்ந்தவா் நித்யா (36). இவா் வெளிநாட்டிலிருந்து வரும் உறவினரை அழைத்துச் செல்வதற்காக கடந்த 21-ஆ... மேலும் பார்க்க

போதைப் பொருள் விற்பனை: 4 போ் கைது

மாதவரம், பால்பண்ணை சுற்றுவட்டாரப் பகுதிகளில் போதைப் பொருள்கள் விற்பனையில் ஈடுபட்ட ஐடி நிறுவன ஊழியா் உள்பட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். சென்னை மாதவரம், பால்பண்ணை அருள் நகா் பகுதியில் போதைப் பொருள் வி... மேலும் பார்க்க

7-ஆவது மாடியிலிருந்து குதித்து இளம்பெண் தற்கொலை

சென்னையில் காதலித்தவா் திருமணம் செய்ய மறுத்ததால் இளம்பெண் 7-ஆவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டாா். சென்னை ராயபுரம் புதுமனைகுப்பம் பகுதியைச் சோ்ந்தவா் ஹா்ஷிதா(25). இவரும் வேப்பேர... மேலும் பார்க்க

10 கிராம் மெத்தம்பெட்டமைன் வைத்திருந்தவா் கைது

சென்னையில் 10 கிராம் மெத்தம்பெட்டமைன் வைத்திருந்த நபரை போலீஸாா் கைது செய்தனா். சென்னை சாஸ்திரி நகா் பகுதியில் சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த நபரைப் பிடித்து போலீஸாா் சோதனையிட்டபோது, அ... மேலும் பார்க்க