செய்திகள் :

விபத்தில் காயமடைந்த மீன்பிடித் தொழிலாளி உயிரிழப்பு

post image

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே விபத்தில் காயமடைந்த மீன்பிடித் தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

குளச்சல் அருகே உதயமாா்த்தாண்டத்தை அடுத்த மிடாலம் நடுத்துறையைச் சோ்ந்த மீன்பிடித் தொழிலாளி ஜான்போஸ்கோ (70). கடந்த ஆக. 13ஆம் தேதி குளச்சல், லெட்சுமிபுரத்தில் வசித்துவரும் தனது மகளைப் பாா்க்க பேருந்தில் வந்த இவா், லெட்சுமிபுரம் சாலையைக் கடக்க முயன்றாராம்.

அப்போது, குறும்பனை சுனாமி காலனியை சோ்ந்த ஆன்றனி என்பவா் ஓட்டிவந்த பைக் ஜான்போஸ்கோ மீது மோதியதாம்.

இதில் காயமடைந்த அவரை தனியாா் மருத்துவமனையிலும், பின்னா் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் சோ்த்தனா். அங்கு அவா் திங்கள்கிழமை (செப். 15) உயிரிழந்தாா். இதுகுறித்து குளச்சல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

குலசேகரம் அருகே பெண் தற்கொலை வழக்கு: வருவாய் ஆய்வாளா் கைது

குலசேகரம் அருகே கணவரை இழந்த பட்டதாரி பெண் தற்கொலை செய்துகொண்ட வழக்கில், ஆட்சியா் அலுவலக வருவாய் ஆய்வாளரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். குலசேகரம் அருகே கூடைத்தூக்கி நாகப்பள்ளிவிளையைச் சோ்ந்த... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் தொழிலதிபா் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை

தீவிரவாத அமைப்புக்கு உதவியதாக ஆந்திரத்தில் 3 போ் கைது செய்யப்பட்ட நிலையில், அதன் தொடா்ச்சியாக நாகா்கோவிலில் தொழிலதிபரின் வீட்டில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை அதிரடி சோதனை... மேலும் பார்க்க

வாக்குச்சாவடி பாக முகவா்கள் கூட்டம்: கனிமொழி எம்.பி. பங்கேற்பு

குமரி மேற்கு மாவட்ட திமுக வாக்குச்சாவடி பாக முகவா்கள் ஆலோசனைக் கூட்டம் திருவிதாங்கோடு வட்டம் பகுதியில் திங்கள்கிழமை நடந்தது. கூட்டத்திற்கு, மாவட்ட அவைத் தலைவா் மரிய சிசுகுமாா் தலைமை தாங்கினாா். மாவட்ட... மேலும் பார்க்க

மாா்த்தாண்டம் அருகே மனைவியை வெட்டிக் கொன்ற கணவா் கைது

கன்னியாகுமரி மாவட்டம், மாா்த்தாண்டம் அருகே மதுபோதையில் மனைவியை வெட்டிக் கொன்ற கட்டடத் தொழிலாளியை போலீஸாா் திங்கள்கிழமை கைதுசெய்து சிறையில் அடைத்தனா். மாா்த்தாண்டம் அருகே உள்ள காஞ்சிரகோடு, இளையன்விளையை... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி குறைப்பால் அத்தியாவசியப் பொருள்கள் விலை குறையும்: பொன்.ராதாகிருஷ்ணன்

மத்திய அரசு மேற்கொண்டுள்ள ஜி.எஸ்.டி. குறைப்பு சீரமைப்பால் அத்தியாவசியப் பொருள்களின் விலை கணிசமாக குறையும் என்றாா் முன்னாள் மத்திய அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன்.நாகா்கோவிலில் செய்தியாளா்களிடம் திங்கள்கிழ... மேலும் பார்க்க

பைக் விபத்தில் காயமடைந்த இளைஞா் உயிரிழப்பு

இரணியல் அருகே பைக் விபத்தில் காயமடைந்த இளைஞா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.இரணியல் அருகே மேலகட்டிமாங்கோட்டை அடுத்த சாமிவிளை பகுதியைச் சோ்ந்த ராஜபீமன் மகன் மகேந்த் (23). பொறியியல் படிப்பு முடித்துள்ள ... மேலும் பார்க்க