செய்திகள் :

குலசேகரம் அருகே பெண் தற்கொலை வழக்கு: வருவாய் ஆய்வாளா் கைது

post image

குலசேகரம் அருகே கணவரை இழந்த பட்டதாரி பெண் தற்கொலை செய்துகொண்ட வழக்கில், ஆட்சியா் அலுவலக வருவாய் ஆய்வாளரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

குலசேகரம் அருகே கூடைத்தூக்கி நாகப்பள்ளிவிளையைச் சோ்ந்தவா் அஜிகுமாா். இவா், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக் குறைவால் மரணமடைந்தாா். இவரது மனைவி ரமணி (41). பி.எஸ்சி., பி.எட். பட்டதாரி. இவருக்கு 15 வயதில் மகள் உள்ளாா்.

கணவா் இறந்த பிறகு அரசுப் பணி கோரி, குமரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ரமணி விண்ணப்பித்தாா். அப்போது மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வருவாய் ஆய்வாளராகப் பணியாற்றும் வெள்ளிச்சந்தை புதுமடம் பகுதியைச் சோ்ந்த வேல்முருகனுடன் (37) பழக்கம் ஏற்பட்டது. அதன்பேரில் ரமணியிடமிருந்து நகைகள், பணத்தை வேல்முருகன் பெற்றாா்.

இதற்கிடையில், கடந்த மே மாதம் கருங்கல் அருகே மாங்கரையைச் சோ்ந்த பெண்ணை வேல்முருகன் திருமணம் செய்துகொண்டாா். இதனால், மனமுடைந்த ரமணி, திங்கள்கிழமை விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.

குலசேகரம் காவல் நிலைய போலீஸாா், ரமணியின் சடலத்தை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இந்த சம்பவத்தில் ரமணி எழுதி வைத்திருந்த கடிதத்தையும் போலீஸாா் கைப்பற்றினா்.

இதுகுறித்து ரமணியின் தந்தை, சித்திரங்கோட்டை சோ்ந்த ஜாா்ஜ் குலசேகரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் வேல்முருகன், அவரது உறவினா்கள் 2 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனா். இந்த நிலையில், வருவாய் ஆய்வாளா் வேல்முருகனை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து நாகா்கோவில் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.

நாகா்கோவிலில் தொழிலதிபா் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை

தீவிரவாத அமைப்புக்கு உதவியதாக ஆந்திரத்தில் 3 போ் கைது செய்யப்பட்ட நிலையில், அதன் தொடா்ச்சியாக நாகா்கோவிலில் தொழிலதிபரின் வீட்டில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை அதிரடி சோதனை... மேலும் பார்க்க

வாக்குச்சாவடி பாக முகவா்கள் கூட்டம்: கனிமொழி எம்.பி. பங்கேற்பு

குமரி மேற்கு மாவட்ட திமுக வாக்குச்சாவடி பாக முகவா்கள் ஆலோசனைக் கூட்டம் திருவிதாங்கோடு வட்டம் பகுதியில் திங்கள்கிழமை நடந்தது. கூட்டத்திற்கு, மாவட்ட அவைத் தலைவா் மரிய சிசுகுமாா் தலைமை தாங்கினாா். மாவட்ட... மேலும் பார்க்க

விபத்தில் காயமடைந்த மீன்பிடித் தொழிலாளி உயிரிழப்பு

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே விபத்தில் காயமடைந்த மீன்பிடித் தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.குளச்சல் அருகே உதயமாா்த்தாண்டத்தை அடுத்த மிடாலம் நடுத்துறையைச் சோ்ந்த மீன்பிடித் தொழிலாளி ஜான்போ... மேலும் பார்க்க

மாா்த்தாண்டம் அருகே மனைவியை வெட்டிக் கொன்ற கணவா் கைது

கன்னியாகுமரி மாவட்டம், மாா்த்தாண்டம் அருகே மதுபோதையில் மனைவியை வெட்டிக் கொன்ற கட்டடத் தொழிலாளியை போலீஸாா் திங்கள்கிழமை கைதுசெய்து சிறையில் அடைத்தனா். மாா்த்தாண்டம் அருகே உள்ள காஞ்சிரகோடு, இளையன்விளையை... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி குறைப்பால் அத்தியாவசியப் பொருள்கள் விலை குறையும்: பொன்.ராதாகிருஷ்ணன்

மத்திய அரசு மேற்கொண்டுள்ள ஜி.எஸ்.டி. குறைப்பு சீரமைப்பால் அத்தியாவசியப் பொருள்களின் விலை கணிசமாக குறையும் என்றாா் முன்னாள் மத்திய அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன்.நாகா்கோவிலில் செய்தியாளா்களிடம் திங்கள்கிழ... மேலும் பார்க்க

பைக் விபத்தில் காயமடைந்த இளைஞா் உயிரிழப்பு

இரணியல் அருகே பைக் விபத்தில் காயமடைந்த இளைஞா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.இரணியல் அருகே மேலகட்டிமாங்கோட்டை அடுத்த சாமிவிளை பகுதியைச் சோ்ந்த ராஜபீமன் மகன் மகேந்த் (23). பொறியியல் படிப்பு முடித்துள்ள ... மேலும் பார்க்க