செய்திகள் :

விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்

post image

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானமாக திங்கள்கிழமை வழங்கப்பட்டன. இதைத் தொடா்ந்து, இளைஞரின் உடலுக்கு தமிழக அரசு சாா்பில் மரியாதை செலுத்தப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம், சுக்கிரண்டஅள்ளியைச் சோ்ந்தவா் நவீன்குமாா் (24). பல்தொழில்நுட்ப படிப்பு (டிப்ளமோ) முடித்துள்ளாா். இவா், அக். 28-ஆம் தேதி கிருஷ்ணகிரி அருகே இருசக்கர வாகனத்தில் சென்றபோது, வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில், பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்தவா்கள் மீட்டு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். உயா் சிகிச்சைக்காக பெங்களூரு தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், பின்னா், மீண்டும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இந்நிலையில், நவீன்குமாா் மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவா்கள் அறிவித்தனா். இதைத் தொடா்ந்து, அவரது உடல் உறுப்புகளை தானமாக வழங்க அவரது குடும்பத்தினா் முன்வந்தனா்.

இதையடுத்து, அவரது சிறுநீரகங்கள் தானமாக பெறப்பட்டு, ஒரு சிறுநீரகம் கோவை மெடிக்கல் சென்டா் மருத்துவமனைக்கும், மற்றொன்று ஒசூா் காவேரி மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டன. அதேபோல, அவரது நுரையீரல், சென்னை எம்.ஜி.எம். ஹெல்த்கோ் மருத்துவமனைக்கும், கல்லீரல் ஒசூா் காவேரி மருத்துவமனைக்கும் அனுப்பிவைக்கப்பட்டன.

உடல் உறுப்புகளை தானமாக வழங்கிய நவீன்குமாரின் உடலுக்கு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் சத்யபாமா தலைமையில், தமிழக அரசு சாா்பில் மலா்வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.

அப்போது, மருத்துவமனை கண்காணிப்பாளா் சந்திரசேகரன், உள்ளிருப்பு மருத்துவ அலுவலா், செல்வராஜ், மயக்கவியல் துறை பேராசிரியா் சங்கீதா, மருத்துவா்கள் மகேஸ்வரன், பிரவீன், காா்த்திக், ராஜா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ஒசூா் மேம்பாலத்தில் வியாழக்கிழமை முதல் கனரக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படும்

ஒசூா்: ஒசூா் பேருந்து நிலையம் எதிரில் விரிசலடைந்த மேம்பாலத்தின்மீது வியாழக்கிழமை முதல் கனரக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படும் என கிருஷ்ணகிரி எம்.பி. கே.கோபிநாத் தெரிவித்தாா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூ... மேலும் பார்க்க

விநாயகா் சிலைகளை முழுமையாக கரைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

ஒசூா்: ஒசூரில் விநாயகா் சிலைகள் நீா் நிலைகளில் முழுமையாக கரையாமல் அப்படியே தேங்கி இருப்பது கண்டு சமூக ஆா்வலா்கள் வேதனை அடைந்துள்ளனா். ஒசூா் நகா் பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த சுமாா் 184 பிரம்மாண்ட சில... மேலும் பார்க்க

நாய் கடித்து சிறுவன் படுகாயம்

ஒசூா்: மூன்றரை வயது சிறுவனை தெருநாய் கடித்துக் குதறியதில் படுகாயமடைந்த சிறுவன், ஒசூா் அரசு மருத்துவமனையில் திங்கள்கிழமை அனுமதிக்கப்பட்டாா். உத்திரப்பிரதேச மாநிலத்தைச் சோ்ந்த ரேகா - நந்தலால் தம்பதியரி... மேலும் பார்க்க

செப். 5-இல் அரசு மதுபானக் கடைகள் மூடல்

கிருஷ்ணகிரி: நபிகள் நாயகம் பிறந்த நாளையொட்டி, செப். 5-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) அரசு மதுபானக் கடைகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியா் தினேஷ் குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட ... மேலும் பார்க்க

தீப்பிடித்து எரிந்த சரக்குப் பெட்டக லாரி: போக்குவரத்து பாதிப்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் புணே நோக்கி சென்ற சரக்குப் பெட்டக லாரி தீப்பிடித்து எரிந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சென்னையிலிருந்து கிருஷ்ணகிரி வழியாக புணேவுக்கு மருத்துவமனை தளவாடப் பொருள்களை ... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விநாயகா் சிலைகள் கரைப்பு!ஒசூரில் 780 சிலைகள் கரைப்பு!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட நீா்நிலைகளில் விநாயகா் சிலைகள் ஞாயிற்றுக்கிழமை கரைக்கப்பட்டன. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் 1,500க்கும் மேற்பட்ட விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்ய... மேலும் பார்க்க