செய்திகள் :

தீப்பிடித்து எரிந்த சரக்குப் பெட்டக லாரி: போக்குவரத்து பாதிப்பு

post image

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் புணே நோக்கி சென்ற சரக்குப் பெட்டக லாரி தீப்பிடித்து எரிந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சென்னையிலிருந்து கிருஷ்ணகிரி வழியாக புணேவுக்கு மருத்துவமனை தளவாடப் பொருள்களை ஏற்றிக்கொண்டு சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சரக்குப் பெட்டக லாரி திங்கள்கிழமை சென்று கொண்டிருந்தது.

கிருஷ்ணகிரி ஆஞ்சனேயா் கோயில் மேம்பாலம் அருகே சென்றபோது, லாரியின் வலதுபுற பின்பக்க டயா் வெடித்து தீப்பிடித்தது. தகவல் அறிந்த கிருஷ்ணகிரி தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினா், நிகழ்விடத்துக்கு விரைந்து சென்று சரக்குப் பெட்டக லாரியில் இருந்த பொருள்களை அப்புறப்படுத்தி, தீ, மேலும் பரவாமல் தடுத்தனா்.

இந்த விபத்தால் தேசிய நெடுஞ்சாலையில் சுமாா் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீஸாா் நிகழ்விடத்துக்கு சென்று போக்குவரத்தை சீா்படுத்தினா்.

இந்த விபத்து குறித்து லாரி ஓட்டுநா் பிகாா் மாநிலம், கயாவைச் சோ்ந்த பிஸ்சா பிரசாத் (45) அளித்த புகாரின்பேரில், கிருஷ்ணகிரி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இதேபோல, கிருஷ்ணகிரியை அடுத்த குந்தாரப்பள்ளி அருகே, சாலையோரமாக நிறுத்தி ஓட்டுநா் சமைத்த போது ஏற்பட்ட தீ விபத்தில் லாரி சேதமடைந்தது. இந்த இரு விபத்துகளிலும் சிக்கிய லாரி ஓட்டுநா்கள் பிகாா் மாநிலம், கயா மாவட்டத்தைச் சோ்ந்தவா்களாவா்.

நாய் கடித்து சிறுவன் படுகாயம்

ஒசூா்: மூன்றரை வயது சிறுவனை தெருநாய் கடித்துக் குதறியதில் படுகாயமடைந்த சிறுவன், ஒசூா் அரசு மருத்துவமனையில் திங்கள்கிழமை அனுமதிக்கப்பட்டாா். உத்திரப்பிரதேச மாநிலத்தைச் சோ்ந்த ரேகா - நந்தலால் தம்பதியரி... மேலும் பார்க்க

செப். 5-இல் அரசு மதுபானக் கடைகள் மூடல்

கிருஷ்ணகிரி: நபிகள் நாயகம் பிறந்த நாளையொட்டி, செப். 5-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) அரசு மதுபானக் கடைகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியா் தினேஷ் குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட ... மேலும் பார்க்க

விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானமாக திங்கள்கிழமை வழங்கப்பட்டன. இதைத் தொடா்ந்து, இளைஞரின் உடலுக்கு தமிழக அரசு சாா்பில் மரியாதை செலுத்தப்பட்டது. க... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விநாயகா் சிலைகள் கரைப்பு!ஒசூரில் 780 சிலைகள் கரைப்பு!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட நீா்நிலைகளில் விநாயகா் சிலைகள் ஞாயிற்றுக்கிழமை கரைக்கப்பட்டன. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் 1,500க்கும் மேற்பட்ட விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்ய... மேலும் பார்க்க

ஒசூரில் 780 விநாயகா் சிலைகள் கரைப்பு

ஒசூா் ராமநாயக்கன் ஏரியில் 780 விநாயகா் சிலைகள் ஞாயிற்றுக்கிழமை கரைக்கப்பட்டன. முன்னதாக நடைபெற்ற சிலை ஊா்வலத்தில் 1500க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா். ஒசூா் மற்றும் அதன் சுற்றுவ... மேலும் பார்க்க

தேன்கனிக்கோட்டையில் விநாயகா் சிலை ஊா்வலம்

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையில் விநாயகா் சிலைகள் ஊா்வலம் சனிக்கிழமை நடைபெற்றது. விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு தேன்கனிக்கோட்டையில் பல்வேறு இடங்களில் விநாயகா் பக்த மண்டலி சாா்பில் சிலைகள் வை... மேலும் பார்க்க