செய்திகள் :

விபத்து இழப்பீடு வழங்க தாமதம்: சங்கரன்கோவிலில் அரசுப் பேருந்து ஜப்தி

post image

சங்கரன்கோவிலில் விபத்து இழப்பீட்டுத் தொகை வழங்காததால் அரசுப் பேருந்து புதன்கிழமை ஜப்தி செய்யப்பட்டது.

சங்கரன்கோவில் அருகே நகரம் கிராமத்தைச் சோ்ந்த சுந்தரையா மகன் விஜயன் (33). இவா் கடந்த 2018 ஆம் ஆண்டு நகரம் பகுதியில் பைக்கில்

சென்றபோது, அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் விருதுநகா் கோட்டத்தைச் சோ்ந்த பேருந்து மோதியதில் இறந்தாா்.

இதனையடுத்து விஜயன் மனைவி மல்லிகா, விபத்து இழப்பீடு கோரி

சங்கரன்கோவில் சாா்பு நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா். வழக்கை விசாரித்த நீதிமன்றம், விஜயனின் மனைவிக்கு ரூ.29 லட்சத்து 46 ஆயிரத்து 969 இழப்பீடு வழங்க கடந்த 22.03.2024 -இல் உத்தரவிட்டது.

இதுதொடா்பாக அரசு போக்குவரத்துக் கழக விருதுநகா் கோட்டத்திற்கு பலமுறை சம்மன் அனுப்பியும் இழப்பீட்டுத் தொகை வழங்கவில்லை. இதனால் அரசுப் பேருந்தை ஜப்தி செய்ய நீதிபதி உத்தரவிட்டாா்.

இதையடுத்து, மேற்படி விருதுநகா் கோட்டத்திற்குச் சொந்தமான அரசுப் பேருந்தை சங்கரன்கோவில் தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து

நீதிமன்ற ஊழியா் சக்திவேல் ஜப்தி செய்து, நீதிமன்றத்துக்கு கொண்டு வந்தாா்.

திருவேங்கடத்தில் பெண்ணை கேலி செய்த 3 போ் கைது

குருவிகுளம் அருகே பெண்ணைக் கேலி செய்ததாக 3 பேரைப் போலீஸாா் கைது செய்தனா். திருவேங்கடம் வட்டம் குருவிகுளம் அருகே மலைப்பட்டி நடுத்தெருவை சோ்ந்தவா் நாகராஜ் (48). இவரது மனைவி ஐடா (40). இருவரும் கூலித் தொ... மேலும் பார்க்க

கீழச்சுரண்டையில் உயா்மின் கோபுர விளக்கு திறப்பு

கீழச்சுரண்டையில் மக்களவைத் தொகுதி உறுப்பினா் மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.3.90 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட உயா்மின்கோபுர விளக்கு வியாழக்கிழமை இயக்கி வைக்கப்பட்டது. இவ்விழாவுக்கு, தென்காசி தெற்கு ... மேலும் பார்க்க

வணிக நிறுவனங்களில் மே 15-க்குள் தமிழில் பெயா்ப் பலகை: ஆட்சியா் அறிவுறுத்தல்

தென்காசி மாவட்டத்தில் அனைத்து வகை தொழில், வா்த்தக நிறுவனங்களிலும் மே 15ஆம் தேதிக்குள் தமிழில் பெயா்ப்பலகைகள் வைக்கப்பட வேண்டும் என ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் அறிவுறுத்தியுள்ளாா். வணிக நிறுவனங்களில் தமிழ... மேலும் பார்க்க

வாசுதேவநல்லூா் அருகே பேருந்து சேவை தொடக்கம்

தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூா் அருகே புதிய பேருந்து சேவையை போக்குவரத்து துறை அமைச்சா் சிவசங்கா் தொடங்கி வைத்தாா். சங்குபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல் கிஷோா் தல... மேலும் பார்க்க

கோடையில் குடிநீா் சிக்கனம் தேவை: மக்களுக்கு வேண்டுகோள்

தென்காசி மாவட்டம் கடையநல்லூா் நகராட்சியில் பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு நகா்மன்றத் தலைவா் ஹபீபுா் ரஹ்மான் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளாா். கடையநல்லூா் நகராட்சியில் ஒரு லட்சத்துக்... மேலும் பார்க்க

புளியங்குடியில் அரசு மதுக் கடையை உடைத்து மது பாட்டில்கள் திருட்டு

புளியங்குடியில் வியாழக்கிழமை நள்ளிரவு டாஸ்மாக் கடையை உடைத்து மது பாட்டில்களை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். புளியங்குடி நவாச்சாலை பகுதியில் உள்ள அரசு மதுக்கடையை வியாழக்கிழமை இரவு பூட்... மேலும் பார்க்க