செய்திகள் :

விற்கப்படுகிறதா ஆர்சிபி..? ரூ.16,800 கோடிக்கு கைமாற்ற திட்டமிடும் உரிமையாளர்கள்?!

post image

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் உரிமையை அதன் உரிமையாளர்கள் விற்கப் போவதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கடந்த 3 ஆம் தேதி நடைபெற்ற நடப்பு ஐபிஎல் தொடரின் இறுதி ஆட்டத்தில் பஞ்சாப்பை வீழ்த்தி பெங்களூரு அணி முதல் முறையாக 18 ஆண்டுகளுக்குப் பின்னர் சாம்பியன் பட்டத்தை வென்றது.

முதல் முறை கோப்பையை வென்ற உற்சாகத்தில் கர்நாடக விதான் சௌதாவிலிருந்து பெங்களூரு சின்னசாமி திடல் வரை வெற்றிப் பேரணியில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி ஒன்றுமரியாத அப்பாவி மக்கள் (அதுவும் 30 வயதுக்குள்பட்ட) 11 பேர் பரிதாபமாக பலியாகினர்.

இது கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமின்றி இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதில், தொடர்புடைய காவல்துறை அதிகாரிகள், அணி நிர்வாகத்தினர், மேலாளர் உள்ளிட்டோர் மீது சட்டரீதியிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், சின்னசாமி திடலை மாற்றுவதற்கான முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், ஆர்சிபி அணியின் உரிமையை வேறொருவருக்கு அணி உரிமையாளர்கள் விற்க விரும்புவதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

அணி உரிமையின் மதிப்பீடு விவரம் குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வரவில்லை. இருந்தாலும், உரிமையாளர்கள் 2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (தோராயமாக ரூ.16,834 கோடி) வரை விலை கேட்கக்கூடும் என்று ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது. டியாஜியோ பிஎல்சி மூலம் யுனைடெட் ஸ்பிரிட்ஸ் லிமிடெட் நிறுவனத்தால் ஆர்சிபி அணி வழிநடத்தப்பட்டு வருகிறது.

பிரிட்டிஷ் டிஸ்டில்லர், யுனைடெட் ஸ்பிரிட்ஸ் ஆகிவற்றின் தலைமை நிறுவனமான டியாஜியோ பிஎல்சி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவின் பகுதி அல்லது முழு பங்குகளை விற்பனை செய்ய முன்வந்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆர்சிபி அணி விற்பனைக்கு செய்தி வெளியானதும், யுனைடெட் ஸ்பிரிட்ஸ் அணியின் பங்குகள் விலை உயர்ந்தன. இன்று (ஜூன் 10) காலை பங்குகள் விலை 3.3 சதவிகிதம் வரை உயர்ந்தன.

ஆர்சிபியை டியோஜியோ கைப்பற்றியது எப்படி?

2008 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடங்கப்பட்ட போது கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸின் உரிமையாளராகவும், இந்தியாவின் மதுபானத் துறையில் மிகவும் பிரபலமான நபர்களில் ஒருவராகவும் இருந்த விஜய் மல்லையாவால் ஆர்சிபி அணி முதலில் வாங்கப்பட்டது.

அவர் தனது மதுபானங்களை பிரபலபடுத்துவதற்காக மட்டுமே இந்த அணியை வாங்கியதாக சமீபத்திய நேர்காணலில் தெரிவித்திருந்தார். மல்லையா கடனில் சிக்கிக் கொண்டதால், டியாஜியோவிற்கு, யுனைடெட் ஸ்பிரிட்ஸ் மூலம் ஆர்சிபியை வாங்க வாய்ப்பு கிடைத்ததும் நினைவுகூரத்தக்கது.

இந்தியாவிலேயே அதிகளவிலான ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ள முதன்மை அணியான ஆர்சிபியின் நிலையைக் கண்டு, அந்த அணியின் ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் கவலை தெரிவித்து வருகின்றன.

இதையும் படிக்க: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இந்திய அணி வென்ற பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா?

ஆஸி. பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் எங்களிடம் திட்டங்கள் உள்ளன: ககிசோ ரபாடா

ஆஸ்திரேலிய அணியின் பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தங்களிடம் திட்டங்கள் இருப்பதாக தென்னாப்பிரிக்க வேகப் பந்துவீச்சாளர் ககிசோ ரபாடா தெரிவித்துள்ளார்.ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான ... மேலும் பார்க்க

தொடர்ச்சியாக 2-வது முறை சாம்பியன் பட்டம் வெல்ல அருமையான வாய்ப்பு கிடைத்துள்ளது: மிட்செல் ஸ்டார்க்

உலக டெஸ்ட் சாம்பியன் பட்டத்தை இரண்டாவது முறையாக தொடர்ச்சியாக வெல்வதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளதாக ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் தெரிவித்துள்ளார்.ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க ... மேலும் பார்க்க

அசத்தும் தென்னாப்பிரிக்கா: 4-ஆவது ஓவரில் முதல் ரன் எடுத்த ஆஸி!

டபிள்யூடிசி இறுதிப் போட்டியில் முதல் 3 ஓவர்கள் ரன்கள் இல்லாமல் மெய்டன் ஆனது. ஆஸி.க்கு முதல் ரன் 3.3ஆவது ஓவரில்தான் கிடைத்தது.லண்டனில் நடைபெற்றுவரும் டபிள்யூடிசி இறுதிப் போட்டியில் தெ.ஆ. டாஸ் வென்று பந... மேலும் பார்க்க

டபிள்யூடிசி இறுதிப் போட்டி: தெ.ஆ. பந்துவீச்சு!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தெ.ஆ. டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது. லண்டனில் டபிள்யூடிசி இறுதிப் போட்டி நடைபெறுகிறது. இதில் முதல்முறையாக கோப்பை வெல்லும் முனைப்பில் டெம்பா பவுமா... மேலும் பார்க்க

இங்கிலாந்து லயன்ஸில் விளையாடிய 19 வயது வீரருக்கு தேசிய அணியில் இடம்!

இந்தியா ஏ அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக விளையாடிய 19 வயது இளம் வீரருக்கு தேசிய அணியில் இணைய வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்... மேலும் பார்க்க

நேற்று ஓய்வு.. இன்று நியூயார்க் அணி கேப்டன்..! பூரனின் புதிய பரிமாணம்!

சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்ற அடுத்த நாளே நியூயார்க் அணியின் புதிய கேப்டனாக நிக்கோலஸ் பூரன் நியமிக்கப்பட்டுள்ளார். மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி ஆட்டக்காரரான நிக்கோலஸ் பூரன், தனது 29 வ... மேலும் பார்க்க