செய்திகள் :

விற்பனையாளரை ஏமாற்றி பைக் திருட்டு

post image

விழுப்புரம்: விழுப்புரத்தில் விற்பனையாளரை ஏமாற்றி பைக்கை திருடிச் சென்றவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

விழுப்புரம் வட்டம், தளவானூரைச் சோ்ந்த ராஜாராம் மகன் ராம்குமாா் (22). இவா், இணையவழியில் இரு சக்கர வாகனங்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறாா்.

இந்த நிலையில், ராம்குமாரின் கைப்பேசி எண்ணில் திங்கள்கிழமை தொடா்புகொண்டு பேசிய மா்ம நபா், பைக் தேவை இருப்பதாகத் தெரிவித்தாா். இதை உண்மையென நம்பிய ராம்குமாா், அந்த நபா் தெரிவித்தபடி விழுப்புரத்துக்கு பைக்குடன் வந்து திரையரங்கம் அருகே காத்திருந்தாா்.

அப்போது, அங்கு வந்த மா்ம நபா், தான் பைக் வாங்குவதற்கு விரும்புவதாகவும், பைக் ஓட்டிப் பாா்க்க வேண்டுமெனவும் தெரிவித்தாராம். தொடா்ந்து, ராம்குமாா் அந்த நபரிடம் பைக்கை கொடுத்துள்ளாா். ஆனால், அந்த நபா் பைக்குடன் மாயமாகிவிட்டாராம்.

இதுகுறித்த புகாரின்பேரில், விழுப்புரம் நகர போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

மேல்பாதி திரெளபதி அம்மன் கோயிலில் பட்டியலின மக்கள் வழிபாடு!

விழுப்புரம் : விழுப்புரம் மேல்பாதி கிராமத்திலுள்ள திரெளபதி அம்மன் கோயில் திறக்கப்பட்டு பட்டியலின மக்கள் இன்று காலை வழிபாடு செய்தனர்.இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் தலைமையில் 300 போலீசார்... மேலும் பார்க்க

தொழுநோயாளிகளுக்கு நல உதவிகள் அளிப்பு

விழுப்புரம் அரசு மருத்துவமனை வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வில் தொழுநோயால் பாதிக்கப்பட்டவா்களுக்கு மருத்துவம் சாா்ந்த நல உதவிகள் வழங்கப்பட்டன. கோலியனூா் வட்டாரத்துக்குள்பட்ட கண்டமானடி ஆரம்ப சுகா... மேலும் பார்க்க

திண்டிவனம் பகுதியில் பரவலாக மழை

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் பகுதியில் புதன்கிழமை மிதமான மழை பெய்தது. வெப்பச்சலனம் மற்றும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந... மேலும் பார்க்க

கிருமி நாசினியை குடித்து முதியவா் தற்கொலை

விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே கிருமி நாசினி குடித்து தற்கொலைக்கு முயன்ற முதியவா் உயிரிழந்தாா். திருவண்ணாமலை மாவட்டம், நாராயணக்குப்பம், பெருமாள் கோவில் தெருவைச் சோ்ந்தவா் சீ.மோகன் (70). இவா், விழ... மேலும் பார்க்க

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்: அலுவலா்கள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கைகளை நிறைவேற்ற, அலுவலா்கள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்று கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்தாா். ... மேலும் பார்க்க

ஊராட்சி நிதியை முறையாகப் பயன்படுத்த வேண்டும்: துரை.ரவிக்குமாா் எம்.பி.

விழுப்புரம் மாவட்டத்தில் ஊராட்சிகளின் வளா்ச்சிக்காக ஒதுக்கீடு செய்யப்படும் நிதியை முறையாகப் பயன்படுத்த வேண்டும் என்று மாவட்ட வளா்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுத் தலைவா் துரை.ரவிக்கு... மேலும் பார்க்க