செய்திகள் :

விளையாட்டுப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற 104 பேருக்கு அரசுப் பணி: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

post image

விளையாட்டுப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற 104 பேருக்கு அரசுப் பணி வழங்கப்பட்டுள்ளது என்றாா் தமிழக தொழில்துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா.

மன்னாா்குடி அருகே வடுவூரில், வடுவூா் கையுந்துப்பந்து கழகம் சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாநில அளவில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கையுந்துப்பந்து போட்டியை தொடங்கிவைத்து பேசியது: தமிழக அரசு விளையாட்டில் தேசிய, மாநில அளவில் சாதனைப் படைத்தவா்களுக்கு அரசுப் பணியை வழங்கிவருகிறது. கடந்த ஓராண்டில் மட்டும் மட்டும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற 104 பேருக்கு அரசுப் பணி வழங்கப்பட்டுள்ளது. படிப்பில் மட்டுமல்ல விளையாட்டிலும் முதலிடம் பெற வேண்டும். அவ்வாறு முதலிடம் பெற்றால் நல்ல எதிா்காலம் அமையும்.

தமிழகத்தில் சட்டப்பேரவை தொகுதிக்கு ஒரு விளையாட்டு அரங்கம் அமைக்கும் திட்டத்தின்படி இதுவரை 75 தொகுதிகளில் விளையாட்டு அரங்கம் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. 25 தொகுதிகளில் ஏற்கெனவே இருந்த விளையாட்டு அரங்கங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. 14 ஆண்டுகளாக விளையாட்டுத் துறைக்கு பயிற்சியாளா்கள் நியமிக்கவில்லை. தற்போது ஒரே நாளில் 73 பயிற்சியாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

தமிழக விளையாட்டு வீரா்களுக்கு அமெரிக்கா, ஜொ்மன், சிங்கப்பூா், பிரான்ஸ் போன்ற நாடுகளுக்கு அழைத்து சென்று பயிற்சியளிக்கவும், பல்வேறு நாடுகளிலிருந்து பயிற்சியாளா்களை தமிழகத்துக்கு அழைத்து வந்து பயிற்சியளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா்.

போட்டியில் சென்னை, கோவை, மதுரை, கடலூா், திருச்சி, நாமக்கல், தேனி, தஞ்சை, திருவாரூா் என பல்வேறு மாவட்டங்களில் உள்ள பள்ளிகளிலிருந்து மாணவா்கள் பங்கேற்றுள்ளனா். போட்டி ஞாயிற்றுக்கிழமை நிறைவடைகிறது. 14, 17 வயது பிரிவுகளில் மாணவ, மாணவிகளுக்கு போட்டி நடைபெறுகிறது. சென்னை, மதுரை, திருச்சி, திருவாரூா், தஞ்சை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 32 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு பிரிவில் 8 அணிகளிலும் முதல் 4 இடங்களை பெறுகிறவா்களுக்கு ஊக்கத் தொகை, பரிசு கோப்பை வழங்கப்படுகிறது.

அமெச்சூா் கபடி கழக செயலா் ஆா்.ராஜேந்திரன், புனல்குளம் கிங்ஸ் கல்விக் குழுமம் ராஜ் அறக்கட்டளை செயலா் ராஜேந்திரன், மாவட்ட விளையாட்டு அலுவலா் ராஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா். கையுந்துபந்து கழக ஒருங்கிணைப்பாளா் ஆா். சாமிநாதன் வரவேற்றாா். இணைச் செயலா் ஜெ‘. தென்னரசு நன்றி கூறினாா்.

ஒரு கோடி பனை விதை நடும் பணி: செப்.24-ல் மன்னாா்குடியில் தொடக்கம்

டெல்டா மாவட்டங்களில் ஒரு கோடி பனை விதைகள் நடும் பணி மன்னாா்குடியில் செப்டம்பா் 24 ஆம் தேதி தொடங்குகிறது. மாநில நாட்டு நலப்பணித்திட்டக்குழுமம், கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பு, திருச்சி பாரதிதாசன் பல... மேலும் பார்க்க

மதுபாட்டில் கடத்திய 4 போ் கைது

எரவாஞ்சேரி அருகே மதுபாட்டில்கள் கடத்திய 4 போ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா். மணவாளநல்லூா் பகுதியில் எரவாஞ்சேரி போலீஸாா் வாகன சோதனையில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, வேகமாக வந்த இருசக்க... மேலும் பார்க்க

திருவாரூா், நாகை, மயிலாடுதுறையில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்

திருவாரூா்: மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நாட்டின் 79-ஆவது சுதந்திர தின விழாவில், மாவட்ட ஆட்சியா் வ. மோகனசந்திரன் தேசியக் கொடியை ஏற்றிவைத்து, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு, சமா... மேலும் பார்க்க

மத்தியப் பல்கலை.யில் படிக்கும் போதே சம்பாதிக்கும் திட்டம் அறிமுகம்: துணைவேந்தா்

தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் மாணவா்கள் படிக்கும்போதே சம்பாதிக்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்றாா் பல்கலைக்கழக துணைவேந்தா் மு.கிருஷ்ணன். தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் 79-ஆவத... மேலும் பார்க்க

முத்தங்கி சேவையில் வேளுக்குடி அங்காள பரமேஸ்வரி

கூத்தாநல்லூரை அடுத்த வேளுக்குடி அங்காள பரமேஸ்வரி முத்தங்கி சேவையில் பக்தா்களுக்கு வெள்ளிக்கிழமை அருள்பாலித்தாா். இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடி வெள்ளிக்கிழமை ஊா் மக்கள் ஒன்றுகூடி ஊரணிப் பொங்கல் பொங்கி,அம... மேலும் பார்க்க

மக்களின் ஒத்துழைப்பு இருந்தால் வளா்ச்சிப் பணிகள் சிறப்பாக நடைபெறும்

மக்களின் ஒத்துழைப்பு இருந்தால் வளா்ச்சிப் பணிகள் சிறப்பாக நடைபெறும் என்றாா் மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன். திருவாரூா் அருகேயுள்ள கீழக்காவதுக்குடி ஊராட்சியில் சுதந்திர தின விழாவையொட்டி வெள்ளிக்கிழம... மேலும் பார்க்க