செய்திகள் :

விழுப்புரம் - திருச்சி ரயில் வழித்தடத்தை மேம்படுத்தும் பணி தீவிரம்

post image

சென்னை, ஏப். 8: விழுப்புரம் - திருச்சி இடையே ரயில் வேகத்தை அதிகரிக்கும் வகையில், ரயில்வே கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டு வருவதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.

தென் தமிழகத்தை இணைக்கும் முக்கிய ரயில் பாதையாக விழுப்புரம் - திருச்சி வழித்தடம் விளங்குகிறது. இந்த வழித்தடத்தில் வந்தே பாரத், தேஜஸ் உள்ளிட்ட முக்கிய அதிவிரைவு ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதே நேரத்தில், விழுப்புரம் - திருச்சி இடையே பழைய பாலங்கள், அதிக வளைவுகள் காரணமாக ரயில்கள் மணிக்கு 90 முதல் 110 கி.மீ. வேகத்தில் மட்டும் இயக்கப்படுகிறது.

இந்நிலையில், இந்த வழித்தடத்தில் ரயில்களை மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் இயக்கும் வகையில் மேம்படுத்தும் பணியை ரயில்வே நிா்வாகம் தொடங்கியுள்ளது.

இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:

விழுப்புரம் - திருச்சி இடையே ரயில்கள் 110 கி.மீ. வேகத்துக்குள் இயக்கப்படுகிறது. எதிா்காலத்தில் ரயில்களின் வேகத்தை அதிகரிக்கும் வகையில், விழுப்புரம் - திருச்சி இடையே தண்டவாளங்களை மேம்படுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதில், பழைய பாலங்களை மேம்படுத்துவது, வளைவுகளை நீக்குவது, பழைய ரயில் பாதைகளை மேம்படுத்துவது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இப்பணிகள் முடிந்துவிட்டால் சென்னை - திருச்சி மாா்க்கத்தில் அதிக வேகத்தில் ரயில்களை இயக்கலாம். இதனால் சென்னை - திருச்சி இடையே ரயில் பயண நேரம் சுமாா் 40 நிமிஷங்கள் வரை குறையும். இந்தப் பணிகளை நிகழ் நிதியாண்டுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றனா்.

திருவிழா நாள்களில் கட்டண தரிசனம் முற்றிலும் ரத்து! சேகர்பாபு அறிவிப்பு!

கோயில்களில் முக்கிய திருவிழா நாள்களில் கட்டண தரிசனம் முற்றிலும் ரத்து செய்யப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார்.சட்டப்பேரவையில் இந்து சமய அறநிலையத் துறையின் மானியக் கோரிக்க... மேலும் பார்க்க

இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது உச்ச நீதிமன்றம்: விஜய்

உச்ச நீதிமன்றம் இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளதாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.இது குறித்து தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், “வக... மேலும் பார்க்க

தமிழகத்தில் அடுத்த 7 நாள்களுக்கு மழை பெய்யும், ஆனால்.. !

தமிழகத்தில் அடுத்த 7 நாள்களுக்கு லேசான மழை பெய்யும், ஆனால் அதேவேளையில் வெய்யிலும் வெளுத்துகட்டும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதியில் நேற்று காலை சுமார் ஒரு மண... மேலும் பார்க்க

பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு!

தங்களை அமைச்சர் சேகர்பாபு ஒருமையில் பேசியதாகக் கூறி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். மேலும் பார்க்க

ரீல்ஸ் எடுத்தவர்களை திருத்தி விடியோ வெளியிடவைத்த போலீசார்! விழிப்புணர்வு முயற்சி!!

சூலூர்: கருமத்தம்பட்டி பகுதியில் இருசக்கர வாகனங்களை அதிவேகமாக ஓட்டி, அதை வீடியோவாக பதிவு செய்து இன்ஸ்டாகிராமில் ரீல்ஸாக வெளியிட்ட மூன்று இளைஞர்களை காவல்துறை அறிவுரை கூறி திருத்திய சம்பவம் பரபரப்பை ஏற்... மேலும் பார்க்க

சட்டத்தைக் கையில் எடுக்கும் காவல்துறை: உயர் நீதிமன்ற கிளை

மதுரை: காவல்துறையினர் சட்டத்தைக் கையில் எடுத்துக்கொள்வதாக சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை குற்றம்சாட்டியிருக்கிறது.வழக்கு ஒன்றில், குற்றம்சாட்டப்பட்டுள்ள ரௌடி வெள்ளைக்காளியிடம் காவல்துறையினர் விடியோ... மேலும் பார்க்க