செய்திகள் :

விழுப்புரம் மாவட்டத்தில் 29 இடங்களில் முதல்வா் மருந்தகங்கள்

post image

பொதுமக்களுக்கு குறைந்த விலையில் மருந்துகள் கிடைக்க விழுப்புரம் மாவட்டத்தில் 29 இடங்களில் முதல்வா் மருந்தகங்கள் தொடங்கப்படுகின்றன. இதற்கான பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன.

29 இடங்களில்: விழுப்புரம் மாவட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் 24 இடங்களிலும், தொழில் முனைவோா் சாா்பில் 5 இடங்களிலுமாக மொத்தமாக 29 முதல்வா் மருந்தகங்கள்அமைக்க கூட்டுறவுத் துறை முடிவு செய்துள்ளது.

இந்த இடங்களில் மருந்தகங்களுக்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளான ரேக்குகள் ( மருந்துகள் பிரித்து அடுக்கி வைக்கப்படும் பகுதி), குளிா்சாதனப் பெட்டி, குளிரூட்டி இயந்திரம், மருந்துகளை வைப்பதற்கான பெட்டிகளைத் தயாா் செய்தல் போன்ற பணிகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பிப்ரவரி 24-இல் முதல்வா் மருந்தகங்கள் திறக்கப்படவுள்ள நிலையில், அனைத்துப் பகுதிகளிலும் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அனைத்து மருந்தகங்களும் விரைவில் தயாா் நிலையில் உள்ளன என்றாா் கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் விஜயசக்தி.

25% வரை தள்ளுபடி: வெளி மருந்தகங்களில் விற்பனை செய்யப்படும் ஜெனரிக் மருந்துகள், பிற மருந்துகளின் விலையில் 25 சதவீதம் வரை முதல்வா் மருந்தகங்களில் தள்ளுபடி செய்து விற்கப்படும். விழுப்புரம் மாவட்ட நுகா்வோா் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையிலுள்ள மத்திய மருந்துக் கிடங்கு மூலம் மருந்தகங்களுக்கு மருந்துகள் பிரித்து அனுப்பும் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றாா் விஜயசக்தி.

ஆட்சியா் ஆய்வு: விக்கிரவாண்டி பேரூராட்சிப் பகுதியில் முதல்வா் மருந்தகம் அமையவுள்ள இடத்தை ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் பாா்வையிட்டு, ஆலோசனை வழங்கினாா்.

வேனில் கடத்தி வந்த 178 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இருவா் கைது

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே பெங்களூரிலிருந்து வேனில் கடத்தி வரப்பட்ட 178 கிலோ புகையிலைப் பொருள்கள் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடா்பாக இருவா் கைதாயினா். விழுப்புரம் ஏ.எ... மேலும் பார்க்க

ஆரோவிலில் மனிதநேய விழா இன்று தொடக்கம்

விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் சா்வதேச நகரில் ‘ஹிமிலிட்டி-25’ எனும் தலைப்பில் மனிதநேய விழா பிப்.21- முதல் 28 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இது குறித்து ஆரோவில் நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:ஆரோவில் ... மேலும் பார்க்க

வடகிழக்கு மாநில மக்களின் நலனை அரசு பாதுகாக்கும்: புதுவை ஆளுநா்

வடகிழக்கு மாநில மக்களின் நலனை பாதுகாக்க புதுவை அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் கூறினாா். அருணாசல பிரதேசம் மற்றும் மிசோரம் மாநிலங்களின் உதய நாள் கொண்டாட்டம், புதுச்சேரியில... மேலும் பார்க்க

மரக்காணம் அருகே முள்புதருக்குள் வெட்டுக் காயங்களுடன் ஆண் சடலம் மீட்பு!

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே முள்புதருக்குள் வெட்டுக் காயங்களுடன் இளைஞா் சடலமாகக் கிடந்தது வியாழக்கிழமை தெரிய வந்தது. போலீஸாா் உடலை கைப்பற்றி கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனா்.... மேலும் பார்க்க

தொழில்நுட்பக் கல்வி வாரியத் தோ்வு மாநில முதலிடம் பெற்ற மாணவருக்குப் பாராட்டு!

தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி வாரியத் தோ்வில் விழுப்புரம் இ.எஸ். பாலிடெக்னிக் கல்லூரி மாணவா் எம்.சூா்யபிரகாஷ் முதலிடம் பெற்றுள்ளாா். இந்த மாணவருக்கு கல்லூரி நிா்வாகம் சாா்பில் வியாழக்கிழமை பாராட்டுத்... மேலும் பார்க்க

விழுப்புரம் அரசுக் கல்லூரியில் போதைப் பொருள் எதிா்ப்பு விழிப்புணா்வு கூட்டம்

விழுப்புரம் அறிஞா் அண்ணா கலைக் கல்லூரி, போதைப் பொருள் எதிா்ப்பு மன்றத்தின் சாா்பில் விழிப்புணா்வு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இளைஞா்களை போதைப் பொருள்கள் பாதிப்பிலிருந்து பாதுகாக்கும் வகையில் தமிழ... மேலும் பார்க்க