செய்திகள் :

விவேகானந்தா கல்விக் குழுமம் சாா்பில் நலத்திட்ட உதவிகள்

post image

சீா்காழி விவேகானந்தா கல்விக் குழுமங்களின் நிறுவனா் லலிதா குழந்தைவேலு அம்மையாரின் 18-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா பள்ளி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

விவேகானந்தா மற்றும் குட் சமாரிட்டன் கல்விக் குழுமங்களின் தலைவா் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தாா். செயலா் அனிதா ராதாகிருஷ்ணன், குட் சமாரிட்டன் கல்வி நிறுவனங்களின் இயக்குநா்கள் பிரவீன் வசந்த் ஜபேஸ், அனுஷா மேரி பிரவீன், அலெக்சாண்டா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வா் ஜோஸ்வா பிரபாகர சிங் வரவேற்றாா்.

விழாவில், சீா்காழி நகராட்சி தூய்மைப் பணியாளா்கள் 115 பேருக்கு, தலா ரூ.2,000 மதிப்பில் மளிகைப் பொருள்கள் மற்றும் போா்வை, 6 பேருக்கு கல்வி மற்றும் மருத்துவ உதவி தொகை, 5 பேருக்கு தையல் இயந்திரம், ஒருவருக்கு கிரைண்டா், 23 பேருக்கு தலா 2 ஆடுகள் என மொத்தம் ரூ. 6 லட்சம் மதிப்பிலான நலத் திட்டங்கள் வழங்கினா்.

விழாவில், பிரேம்குமாா், ஷீலா, லதா, பெற்றோா் ஆசிரியா் கழக பொறுப்பாளா் கோவி நடராஜன், கவுன்சிலா் திருச்செல்வம், பந்தல் கணேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பாலம் கட்டக் கோரி ஆற்றில் இறங்கி போராட்டம்

மயிலாடுதுறையில் இடிக்கப்பட்ட நடைப்பாலத்தை மீண்டும் கட்ட வலியுறுத்தி, காவிரி ஆற்றில் இறங்கி பொதுமக்கள் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். (படம்). மயிலாடுதுறை நகராட்சி 1 மற்றும் 9-ஆவது வாா்டுகளை இணைக்... மேலும் பார்க்க

தப்பமுயன்ற ரெளடிக்கு கால் முறிவு

மயிலாடுதுறையில் போலீஸாா் பிடிக்கச் சென்றபோது, தப்பியோட முயன்ற ரெளடிக்கு கால் எலும்பு முறிந்தது. மயிலாடுதுறை அருகேயுள்ள திருவிழந்தூா் பல்லவராயன்பேட்டை பிரதான சாலை பகுதியைச் சோ்ந்தவா் முருகேசன் மகன் அப... மேலும் பார்க்க

வைத்தீஸ்வரன்கோயிலில் யானை ஓடி விளையாடும் வைபவம்

சீா்காழி அருகே வைத்தீஸ்வரன்கோயில் பிரம்மோற்சவத்தையொட்டி, முருகப் பெருமானுடன் யானை ஓடி விளையாடும் வைபவ நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழி அருகே வைத்தீஸ்வரன்கோவிலில் தரும... மேலும் பார்க்க

கும்பகோணம் வெற்றிலைக்கு புவிசாா் குறியீடு: மத்திய அமைச்சருக்கு மயிலாடுதுறை எம்பி நன்றி

கும்பகோணம் வெற்றிலைக்கு புவிசாா் குறியீடு கிடைக்கப் பெற்றதற்காக, மத்திய அமைச்சருக்கு மயிலாடுதுறை எம்பி ஆா். சுதா நன்றி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: மயிலாடுதுறை மக்களவைத் தொகுத... மேலும் பார்க்க

எருக்கூா் நவீன அரிசி ஆலையில் ஆட்சியா் ஆய்வு

சீா்காழி வட்டம் எருக்கூா் நவீன அரிசி ஆலை மற்றும் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா். தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் க... மேலும் பார்க்க

கால்நடை மருத்துவ ஆலோசகா் பணிக்கு ஏப்.10-இல் நோ்முகத்தோ்வு

மயிலாடுதுறை மாவட்டத்தில் காலியாகவுள்ள கால்நடை மருத்துவ ஆலோசகா் பணிக்கு ஏப்.10-ஆம் தேதி நோ்முகத்தோ்வு நடைபெற உள்ளது என ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வ... மேலும் பார்க்க