செய்திகள் :

புதிய பாம்பன் தூக்கு பாலத்தைத் திறந்துவைத்து மோடி; சிறிது நேரத்தில் ஏற்பட்ட பழுது... என்ன நடந்தது?

post image

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய பிரதமர் மோடி, அங்கு சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு புதிய பாம்பன் பாலத்தைத் திறந்துவைப்பதற்காக இன்று மதியம் 12:30 மணியளவில் ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரம் வந்தார். அதையடுத்து, சரியாக மதியம் 1 மணியளவில் மோடி பச்சைக் கொடி அசைத்து புதிய பாம்பன் பாலத்தைத் திறந்து வைத்தார்.

மோடி - புதிய பாம்பன் பாலம்
மோடி - புதிய பாம்பன் பாலம்

இதையடுத்து சிறப்பு ரயில் ஒன்று புதிய பாலத்தின் மீது ராமேஸ்வரம் நோக்கிச் சென்றது. இதனைத் தொடர்ந்து புதிய மற்றும் பழைய தூக்கு பாலங்கள் திறக்கப்பட்டு அதன் வழியாகக் கடலோரக் காவல்படை கப்பல் இரு பாலங்களையும் கடந்து சென்றது.

புதிய பாம்பன் பாலம்
புதிய பாம்பன் பாலம்

ஆனால், கப்பல் கடந்து சென்ற சிறிது நேரத்தில் புதிய பாம்பன் பாலத்தின் செங்குத்து தூக்கு பாலத்தை ரயில்வே அதிகாரிகள் கீழே இறக்க முயன்றனர். ஆனால், பழுது காரணமாகத் தூக்கு பாலம் சீராக இயங்காததால் பாலம் முழுமையாகக் கீழே இறக்க முடியாத நிலை உருவானது. இருப்பினும், சிறிது நேரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் பழுது சரிசெய்யப்பட்டது.

'அதிமுகவினர் அண்ணன், தம்பி போல உள்ளோம்; இதனால்தான் செங்கோட்டையன் உள்ளே இருந்தார்' - ஓ.எஸ்.மணியன்

அதிமுகவினர் இன்று அவையில் இருந்து வெளிநடப்பு செய்தபோது, செங்கோட்டையன் மட்டும் அவையில் இருந்தது குறித்து முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் விளக்கம் அளித்திருக்கிறார். அந்த தியாகி யார்? என்ற பேட்ஜ் அணிந்த ... மேலும் பார்க்க

யார் அந்த தியாகி: "அவருக்கு பட்டம் கொடுத்த நீங்கதான் சொல்லணும்" - TASMAC வழக்கில் CM-க்கு EPS பதிலடி

தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று (ஏப்ரல் 7) நடைபெற்ற கூட்டத்தில், டாஸ்மாக் வழக்கு தொடர்பாக `யார் அந்த தியாகி?' என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வியெழுப்பினார்.ஆனால், சட்டமன்றத்தில் தொடர... மேலும் பார்க்க

Congress : `அன்று’ விழுத் தொடங்கிய காங்கிரஸ் இன்னும் எழ முடியாமல் திணறுவது ஏன்? - விரிவான அலசல்!

`முன்னொரு காலத்தில் சுதந்திரப் போராட்ட வீரர்களால் வளர்த்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் என்ற ஒரு கட்சி இருந்ததாகவும், அதைப் பல முக்கிய அரசியல் தலைவர்கள் வழிநடத்தியதாகவும் கேள்விப்பட்டிருக்கிறோம்' என மக்கள் பே... மேலும் பார்க்க

இபிஎஸ் OUT; செங்கோட்டையன் IN; `காலில் விழுந்த EPS' - `பொம்மை முதல்வர்' - சட்டசபையில் நடந்தது என்ன?

தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று (ஏப்ரல் 7) கூடியது. அவசர பொது முக்கியத்துவம் வாய்ந்த விஷயம் குறித்து கவன ஈர்ப்பு நேரத்தில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேச எழுந்ததும், சட்டப்பேரவை நேரலை ஒளிபரப... மேலும் பார்க்க

`அந்த தியாகி யார்?' - சட்டப்பேரவைக்கு பேட்ஜ் அணிந்து வந்த அதிமுக எம்.எல்.ஏ-க்கள்; காரணம் என்ன?

தமிழக அரசின் 2025-2026ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை கடந்த மாதம் 14-ம் தேதி தமிழக சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். 15-ம் தேதி வேளாண்மை பட்ஜெட்டை வேளாண்மை துறை அமைச்சர் ... மேலும் பார்க்க