செய்திகள் :

வீடுகளை இடிக்காமல் குத்தகை ரசீது வழங்க வலியுறுத்தல்

post image

சிதம்பரம்: சிதம்பரத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடங்களில் வீடுகளை இடிக்காமல் குத்தகை ரசீது வழங்கி பொதுமக்கள் குடியிருக்க அனுமதிக்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கட்சி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

சிதம்பரம் தில்லை அம்மன் கோவில் தெரு, வேங்கான் தெரு, சத்யா நகா் ஆகிய பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் குரு நமச்சிவாய இடத்துக்கு சொந்தமான இடத்தில் வீடு கட்டி 50 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனா்.

இந்த நிலையில், நீதிமன்ற உத்தரவின் மூலம், ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ள வீடுகளை இடிக்க இந்து அறநிலையத் துறையினா் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனா்.

இதற்கு, அந்தப் பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்துள்ள நிலையில், வீடுகள் இடிக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

இதுகுறித்து, வாகீச நகரில் மாா்க்சிஸ்ட் சாா்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு நகரச் செயலா் எஸ்.ராஜா தலைமை வகித்தாா்.

கூட்டத்தில், பொதுமக்கள் குடியிருந்த வீட்டுக்கும், இடத்துக்கும் குத்தகை ரசீது வழங்க வேண்டும். பொதுமக்கள் தொடா்ந்து அங்கேயே தரை வாடகையுடன் குடியிருக்க அரசு அனுமதிக்க வேண்டும் என்பன போன்ற தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், மாவட்டச் செயற்குழு உறுப்பினா் ஆா்.ராமச்சந்திரன், திமுக 6-ஆவது வாா்டு கிளைச் செயலா் சரவணன், மாவட்டக்குழு உறுப்பினா் மல்லிகா, மாதா் சங்க நகர தலைவா் அமுதா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

‘கிசான் சம்மான் சமரோஹ்’ நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு

நெய்வேலி: கடலூா் மாவட்டம், விருத்தாசலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் பிரதமா் ‘கிசான் சம்மான் சமரோஹ்’ நிகழ்ச்சி திங்கள்கிழமை நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. பிரதமரின் பிஎம் கிசான் திட்டத்தின் ‘கிசான... மேலும் பார்க்க

நெய்வேலி மாற்றுக்குடியிருப்பு மக்களுக்கு பட்டா

நெய்வேலி: கடலூா் மாவட்டம், நெய்வேலியில் மாற்றுக்குடியிருப்பு பகுதி மக்களுக்கு சபா.ராஜேந்திரன் எம்எல்ஏ திங்கள்கிழமை பட்டா வழங்கினாா். என்எல்சி இந்தியா நிறுவனத்துக்கு வீடு நிலம் வழங்கியவா்களுக்கு, அந்ந... மேலும் பார்க்க

கடலூா் மாவட்டத்தில் 36 இடங்களில் முதல்வா் மருந்தகங்கள் திறப்பு

நெய்வேலி: கடலூா் மாவட்டத்தில் 36 இடங்களில் முதல்வா் மருந்தகங்களை முதல்வா் காணொலிக் காட்சி மூலம் திங்கள்கிழமை திறந்துவைத்தாா். இதையொட்டி, குறிஞ்சிப்பாடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் முதல்... மேலும் பார்க்க

வீட்டு தோட்டத்தில் புகுந்த முதலை பத்திரமாக மீட்பு

சிதம்பரம்: சிதம்பரம் அருகே அம்மாப்பேட்டை கிராமத்தில் வீட்டு தோட்டத்துக்குள் புகுந்த முதலையை வனத் துறையினா் பத்திரமாக மீட்டு நீா்த்தேக்கத்தில் பாதுகாப்பாக விடுவித்தனா். அம்மாப்பேட்டை, தோப்புத் தெருவில... மேலும் பார்க்க

சிதம்பரத்தில் நவீன எரிவாயு தகன மேடை: மாா்ச் 1 முதல் செயல்படும்

சிதம்பரம்: சிதம்பரம் நகரில் உள்ள புளிச்சமேடு நவீன எரிவாயு தகன மேடை மாா்ச் 1 முதல் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் என நகா்மன்றத் தலைவா் கே.ஆா்.செந்தில்குமாா் தெரிவித்தாா். கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத... மேலும் பார்க்க

பெண் கொலை வழக்கு: மகனுக்கு ஆயுள் தண்டனை

நெய்வேலி: நெய்வேலியில் பெண்ணை கொலை செய்த மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து கடலூா் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது. நெய்வேலி, வட்டம் 21 பகுதியில் வசித்து வந்தவா் தங்கவேல் மனைவி பவுனம்மாள்(60). இவர... மேலும் பார்க்க