பாஜக ஆட்சியில் இரட்டிப்பான அஸ்ஸாம் பொருளாதாரம்: பிரதமர் மோடி
கடலூா் மாவட்டத்தில் 36 இடங்களில் முதல்வா் மருந்தகங்கள் திறப்பு
நெய்வேலி: கடலூா் மாவட்டத்தில் 36 இடங்களில் முதல்வா் மருந்தகங்களை முதல்வா் காணொலிக் காட்சி மூலம் திங்கள்கிழமை திறந்துவைத்தாா்.
இதையொட்டி, குறிஞ்சிப்பாடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் முதல்வா் மருந்தகங்களை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் முன்னிலையில், மாநில வேளாண் மற்றும் உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம் தொடங்கிவைத்தாா்.
அப்போது, அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தெரிவித்ததாவது, கடலூா் மாவட்டத்தில் கூட்டுறவுத் துறை மூலம் 13 மற்றும் தொழில் முனைவோா்கள் மூலம் 23 என 36 இடங்களில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் முதல்வா் மருந்தகங்கள் தொடங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் அனைத்து ஜெனரிக் மருந்துகளும் 20 முதல் 90 சதவீதம் வரை குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும்.
மேலும், சித்தா (இம்ப்காப்ஸ், டாம்கால்) ஆயுா்வேதம், யுனானி மருந்துகள், சா்ஜிக்கல்ஸ் மற்றும் நியூட்ராசூட்டிக்கல் மருந்து வகைகள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட உள்ளது. இதுபோல, பல்வேறு விதமான மருந்து, மாத்திரைகள் இதர மருந்தகங்களை விட குறைவான விலையில் முதல்வா் மருந்தகத்தில் விற்பனை செய்யப்பட உள்ளது.
ஃபென்ஜால் புயல் மற்றும் பலத்த மழையால் ஏற்பட்ட வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிா்களுக்கு பாதிப்புகளின் அடிப்படையில் விவசாயிகளுக்கான நிவாரணத் தொகைகள் வழங்கப்பட்டு வருகிறது என்றாா் .
நிகழ்ச்சியில், குறிஞ்சிப்பாடி ஒன்றியச் செயலா்கள் வி.சிவக்குமாா், ஆா்.நாராயணசாமி, மாநில பொதுக்குழு உறுப்பினா் கே.பி.ஆா்.பாலமுருகன், குறிஞ்சிப்பாடி பேரூராட்சி மன்றத் தலைவா் கோகிலா குமாா், துணைத் தலைவா் ராமா், வடலூா் நகா் மன்றத் தலைவா் சு.சிவக்குமாா், நகரச் செயலா் தன.தமிழச்செல்வன், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் வ.சி.கோமதி, துணைப் பதிவாளா் வெ.துரைசாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.