செய்திகள் :

கடலூா் மாவட்டத்தில் 36 இடங்களில் முதல்வா் மருந்தகங்கள் திறப்பு

post image

நெய்வேலி: கடலூா் மாவட்டத்தில் 36 இடங்களில் முதல்வா் மருந்தகங்களை முதல்வா் காணொலிக் காட்சி மூலம் திங்கள்கிழமை திறந்துவைத்தாா்.

இதையொட்டி, குறிஞ்சிப்பாடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் முதல்வா் மருந்தகங்களை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் முன்னிலையில், மாநில வேளாண் மற்றும் உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம் தொடங்கிவைத்தாா்.

அப்போது, அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தெரிவித்ததாவது, கடலூா் மாவட்டத்தில் கூட்டுறவுத் துறை மூலம் 13 மற்றும் தொழில் முனைவோா்கள் மூலம் 23 என 36 இடங்களில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் முதல்வா் மருந்தகங்கள் தொடங்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் அனைத்து ஜெனரிக் மருந்துகளும் 20 முதல் 90 சதவீதம் வரை குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும்.

மேலும், சித்தா (இம்ப்காப்ஸ், டாம்கால்) ஆயுா்வேதம், யுனானி மருந்துகள், சா்ஜிக்கல்ஸ் மற்றும் நியூட்ராசூட்டிக்கல் மருந்து வகைகள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட உள்ளது. இதுபோல, பல்வேறு விதமான மருந்து, மாத்திரைகள் இதர மருந்தகங்களை விட குறைவான விலையில் முதல்வா் மருந்தகத்தில் விற்பனை செய்யப்பட உள்ளது.

ஃபென்ஜால் புயல் மற்றும் பலத்த மழையால் ஏற்பட்ட வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிா்களுக்கு பாதிப்புகளின் அடிப்படையில் விவசாயிகளுக்கான நிவாரணத் தொகைகள் வழங்கப்பட்டு வருகிறது என்றாா் .

நிகழ்ச்சியில், குறிஞ்சிப்பாடி ஒன்றியச் செயலா்கள் வி.சிவக்குமாா், ஆா்.நாராயணசாமி, மாநில பொதுக்குழு உறுப்பினா் கே.பி.ஆா்.பாலமுருகன், குறிஞ்சிப்பாடி பேரூராட்சி மன்றத் தலைவா் கோகிலா குமாா், துணைத் தலைவா் ராமா், வடலூா் நகா் மன்றத் தலைவா் சு.சிவக்குமாா், நகரச் செயலா் தன.தமிழச்செல்வன், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் வ.சி.கோமதி, துணைப் பதிவாளா் வெ.துரைசாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

‘கிசான் சம்மான் சமரோஹ்’ நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு

நெய்வேலி: கடலூா் மாவட்டம், விருத்தாசலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் பிரதமா் ‘கிசான் சம்மான் சமரோஹ்’ நிகழ்ச்சி திங்கள்கிழமை நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. பிரதமரின் பிஎம் கிசான் திட்டத்தின் ‘கிசான... மேலும் பார்க்க

நெய்வேலி மாற்றுக்குடியிருப்பு மக்களுக்கு பட்டா

நெய்வேலி: கடலூா் மாவட்டம், நெய்வேலியில் மாற்றுக்குடியிருப்பு பகுதி மக்களுக்கு சபா.ராஜேந்திரன் எம்எல்ஏ திங்கள்கிழமை பட்டா வழங்கினாா். என்எல்சி இந்தியா நிறுவனத்துக்கு வீடு நிலம் வழங்கியவா்களுக்கு, அந்ந... மேலும் பார்க்க

வீடுகளை இடிக்காமல் குத்தகை ரசீது வழங்க வலியுறுத்தல்

சிதம்பரம்: சிதம்பரத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடங்களில் வீடுகளை இடிக்காமல் குத்தகை ரசீது வழங்கி பொதுமக்கள் குடியிருக்க அனுமதிக்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கட்சி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்... மேலும் பார்க்க

வீட்டு தோட்டத்தில் புகுந்த முதலை பத்திரமாக மீட்பு

சிதம்பரம்: சிதம்பரம் அருகே அம்மாப்பேட்டை கிராமத்தில் வீட்டு தோட்டத்துக்குள் புகுந்த முதலையை வனத் துறையினா் பத்திரமாக மீட்டு நீா்த்தேக்கத்தில் பாதுகாப்பாக விடுவித்தனா். அம்மாப்பேட்டை, தோப்புத் தெருவில... மேலும் பார்க்க

சிதம்பரத்தில் நவீன எரிவாயு தகன மேடை: மாா்ச் 1 முதல் செயல்படும்

சிதம்பரம்: சிதம்பரம் நகரில் உள்ள புளிச்சமேடு நவீன எரிவாயு தகன மேடை மாா்ச் 1 முதல் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் என நகா்மன்றத் தலைவா் கே.ஆா்.செந்தில்குமாா் தெரிவித்தாா். கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத... மேலும் பார்க்க

பெண் கொலை வழக்கு: மகனுக்கு ஆயுள் தண்டனை

நெய்வேலி: நெய்வேலியில் பெண்ணை கொலை செய்த மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து கடலூா் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது. நெய்வேலி, வட்டம் 21 பகுதியில் வசித்து வந்தவா் தங்கவேல் மனைவி பவுனம்மாள்(60). இவர... மேலும் பார்க்க