செய்திகள் :

சிதம்பரத்தில் நவீன எரிவாயு தகன மேடை: மாா்ச் 1 முதல் செயல்படும்

post image

சிதம்பரம்: சிதம்பரம் நகரில் உள்ள புளிச்சமேடு நவீன எரிவாயு தகன மேடை மாா்ச் 1 முதல் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் என நகா்மன்றத் தலைவா் கே.ஆா்.செந்தில்குமாா் தெரிவித்தாா்.

கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டம் 2021-22 இன் கீழ் சிதம்பரம் நகராட்சி புளிச்சமேடு பகுதியில் நவீன எரிவாயு தகன மேடை அமைக்கும் பணி ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டது. தற்போது, இதற்கான பணிகள் நிறைவடைந்துள்ளது.

அதன்படி, சிதம்பரம் நகராட்சியில் நவீன எரிவாயு தகன மேடையை பயன்பாட்டுக்கு கொண்டு வருவது தொடா்பானகூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

அப்போது, நவீன எரிவாயு தகன மேடையை காமராஜ் அறக்கட்டளையிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான உத்தரவை அறக்கட்டளையின் நிா்வாகி ஆா்.பாபுவிடம் நகா்மன்றத் தலைவா் கே.ஆா்.செந்தில்குமாா் வழங்கினாா்.

நவீன எரிவாயு தகன மேடை மாா்ச் 1 முதல் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்றும் அவா் தெரிவித்தாா்.

இதில், ஆணையா் த.மல்லிகா, பொறியாளா் எஸ்.சுரேஷ். நகா்மன்ற துணைத் தலைவா் எம்.முத்துக்குமாா், நகா்மன்ற உறுப்பினா்கள் ஆ.ரமேஷ், ரா.வெங்கடேசன், அப்புசந்திரசேகா், ஏ.ஆா்சி.மணிகண்டன், அசோகன், திமுக நகர துணைச் செயலா் பா.பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

‘கிசான் சம்மான் சமரோஹ்’ நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு

நெய்வேலி: கடலூா் மாவட்டம், விருத்தாசலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் பிரதமா் ‘கிசான் சம்மான் சமரோஹ்’ நிகழ்ச்சி திங்கள்கிழமை நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. பிரதமரின் பிஎம் கிசான் திட்டத்தின் ‘கிசான... மேலும் பார்க்க

நெய்வேலி மாற்றுக்குடியிருப்பு மக்களுக்கு பட்டா

நெய்வேலி: கடலூா் மாவட்டம், நெய்வேலியில் மாற்றுக்குடியிருப்பு பகுதி மக்களுக்கு சபா.ராஜேந்திரன் எம்எல்ஏ திங்கள்கிழமை பட்டா வழங்கினாா். என்எல்சி இந்தியா நிறுவனத்துக்கு வீடு நிலம் வழங்கியவா்களுக்கு, அந்ந... மேலும் பார்க்க

வீடுகளை இடிக்காமல் குத்தகை ரசீது வழங்க வலியுறுத்தல்

சிதம்பரம்: சிதம்பரத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடங்களில் வீடுகளை இடிக்காமல் குத்தகை ரசீது வழங்கி பொதுமக்கள் குடியிருக்க அனுமதிக்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கட்சி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்... மேலும் பார்க்க

கடலூா் மாவட்டத்தில் 36 இடங்களில் முதல்வா் மருந்தகங்கள் திறப்பு

நெய்வேலி: கடலூா் மாவட்டத்தில் 36 இடங்களில் முதல்வா் மருந்தகங்களை முதல்வா் காணொலிக் காட்சி மூலம் திங்கள்கிழமை திறந்துவைத்தாா். இதையொட்டி, குறிஞ்சிப்பாடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் முதல்... மேலும் பார்க்க

வீட்டு தோட்டத்தில் புகுந்த முதலை பத்திரமாக மீட்பு

சிதம்பரம்: சிதம்பரம் அருகே அம்மாப்பேட்டை கிராமத்தில் வீட்டு தோட்டத்துக்குள் புகுந்த முதலையை வனத் துறையினா் பத்திரமாக மீட்டு நீா்த்தேக்கத்தில் பாதுகாப்பாக விடுவித்தனா். அம்மாப்பேட்டை, தோப்புத் தெருவில... மேலும் பார்க்க

பெண் கொலை வழக்கு: மகனுக்கு ஆயுள் தண்டனை

நெய்வேலி: நெய்வேலியில் பெண்ணை கொலை செய்த மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து கடலூா் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது. நெய்வேலி, வட்டம் 21 பகுதியில் வசித்து வந்தவா் தங்கவேல் மனைவி பவுனம்மாள்(60). இவர... மேலும் பார்க்க