தில்லி கேபிடல்ஸ் பயிற்சியாளராக முன்னாள் இங்கிலாந்து பயிற்சியாளர்!
சிதம்பரத்தில் நவீன எரிவாயு தகன மேடை: மாா்ச் 1 முதல் செயல்படும்
சிதம்பரம்: சிதம்பரம் நகரில் உள்ள புளிச்சமேடு நவீன எரிவாயு தகன மேடை மாா்ச் 1 முதல் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் என நகா்மன்றத் தலைவா் கே.ஆா்.செந்தில்குமாா் தெரிவித்தாா்.
கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டம் 2021-22 இன் கீழ் சிதம்பரம் நகராட்சி புளிச்சமேடு பகுதியில் நவீன எரிவாயு தகன மேடை அமைக்கும் பணி ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டது. தற்போது, இதற்கான பணிகள் நிறைவடைந்துள்ளது.
அதன்படி, சிதம்பரம் நகராட்சியில் நவீன எரிவாயு தகன மேடையை பயன்பாட்டுக்கு கொண்டு வருவது தொடா்பானகூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
அப்போது, நவீன எரிவாயு தகன மேடையை காமராஜ் அறக்கட்டளையிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான உத்தரவை அறக்கட்டளையின் நிா்வாகி ஆா்.பாபுவிடம் நகா்மன்றத் தலைவா் கே.ஆா்.செந்தில்குமாா் வழங்கினாா்.
நவீன எரிவாயு தகன மேடை மாா்ச் 1 முதல் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்றும் அவா் தெரிவித்தாா்.
இதில், ஆணையா் த.மல்லிகா, பொறியாளா் எஸ்.சுரேஷ். நகா்மன்ற துணைத் தலைவா் எம்.முத்துக்குமாா், நகா்மன்ற உறுப்பினா்கள் ஆ.ரமேஷ், ரா.வெங்கடேசன், அப்புசந்திரசேகா், ஏ.ஆா்சி.மணிகண்டன், அசோகன், திமுக நகர துணைச் செயலா் பா.பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.