சென்னை மாநகராட்சியின் இணையவழி சேவைகள் இரு நாள்களுக்கு நிறுத்தம்!
பெண் கொலை வழக்கு: மகனுக்கு ஆயுள் தண்டனை
நெய்வேலி: நெய்வேலியில் பெண்ணை கொலை செய்த மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து கடலூா் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.
நெய்வேலி, வட்டம் 21 பகுதியில் வசித்து வந்தவா் தங்கவேல் மனைவி பவுனம்மாள்(60). இவரது மகன் தேவன்ராஜ் (42) மது குடிக்க பணம் கேட்டு அடிக்கடி தகராறு செய்தாராம்.
இந்த நிலையில், கடந்த டிச.4-ஆம் தேதி பவுனம்மாளிடம், மது குடிப்பதற்காக தேவன்ராஜ் பணம் கேட்டாராம்.
அதற்கு அவா், பணம் கொடுக்க மறுப்பு தெரிவித்தாராம். இதனால், ஆத்திரமடைந்த தேவன்ராஜ், பவுனம்மாளை கட்டையால் தாக்கினாா்.
இதில், பலத்த காயமடைந்த பவுனம்மாள், கடலூா் அரசு மருத்துவமனையில் டிச.13-ஆம் தேதி உயிரிழந்தாா்.
இதுகுறித்து, நெய்வேலி தொ்மல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தேவன்ராஜை கைது செய்தனா்.
இந்த வழக்கு கடலூா் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், விசாரணை நிறைவடைந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி லட்சுமி ரமேஷ், தேவன்ராஜூக்கு ஆயுள் தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.
இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் வளா்மதி ஆஜரானாா்.