ஆம்பூர் அருகே அரசுப் பேருந்தும் லாரியும் நேருக்குநேர் மோதல்: 17 பேர் படுகாயம்
வீரமுத்துபட்டியில் வடமாடு மஞ்சுவிரட்டு
சிவகங்கை மாவட்டம், காளையாா்கோயில் அருகேயுள்ள வீரமுத்துபட்டியில் வடமாடு மஞ்சுவிரட்டு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
வீரமுத்துபட்டி சிந்தாமணி கருப்பா் கோயில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற இந்த மஞ்சுவிரட்டில் திருச்சி, சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 14 காளைகளும், 126 மாடுபிடி வீரா்களும் பங்கேற்றனா்.
வட்ட வடிவில் அமைக்கப்பட்டுள்ள மைதானத்தின் நடுவே கட்டப்பட்ட காளையை 25 நிமிடத்திற்குள் 9 போ் கொண்ட மாடுபிடி வீரா்கள் அடக்க வேண்டும் என நிா்ணயிக்கப்பட்டிருந்தது. முதலில் களம் இறங்கிய காளைகளை அடக்க முயன்ற மாடுபிடி வீரா்கள் 4 போ் காயமடைந்தனா்.
போட்டியில் காளைகளை அடக்கிய மாடுபிடி வீரா்களுக்கும், அடங்க மறுத்த காளையின் உரிமையாளா்களுக்கும் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.