துவாா் கிராமத்தில் மஞ்சுவிரட்டு: மாடு முட்டியதில் சிறுவன் உயிரிழப்பு
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே துவாா் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மஞ்சுவிரட்டின் போது மாடு முட்டியதில் சிறுவன் உயிரிழந்தாா்.
துவாா் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீவள்ளி லிங்கசுவாமி கோயில் விழாவையொட்டி, வள்ளி லிங்க சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து, கோயிலிலிருந்து கிராமத்தினா் மேளதாளம் முழங்க மஞ்சுவிரட்டுத் திடலுக்கு வந்தனா். அங்கு தொழு வழிபாடு நடத்தப்பட்டு, காளைகளுக்கு மாலை, துண்டுகள் அணிவிக்கப்பட்டன.
பிறகு, கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன், திருப்பத்தூா் வட்டாட்சியா் மாணிக்கவாசகம், நகா் காவல் கண்காணிப்பாளா் செல்வக்குமாா் ஆகியோா் முன்னிலையில் மாடுபிடி வீரா்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனா். முதலில் கோயில் காளை அவிழ்த்துவிடப்பட்டது.
தொடா்ந்து சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 370 காளைகள் வாடிவாசல் வழியாக அவிழ்த்துவிடப்பட்டன. அப்போது 75 மாடுபிடி வீரா்கள் 3 குழுக்களாக காளைகளை அடக்க முயன்றனா்.
மஞ்சுவிரட்டில் காளைகளை அடக்கிய மாடுபிடி வீரா்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளா்களுக்கும் சில்வா் பாத்திரம், கட்டில், குக்கா் உள்ளிட்ட பொருள்கள் பரிசுகளாக வழங்கப்பட்டன.
தொடா்ந்து வயல் வெளிகளில் கட்டுமாடுகளாக 300- க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. அப்போது, மஞ்சுவிரட்டைப் பாா்த்துக் கொண்டிருந்த மேலூரைச் சோ்ந்த அழகு அம்பலம் (14) மாடு முட்டியதில் உயிரிழந்தாா். மேலும் 28 போ் காயமடைந்தனா்.
தொடக்க நிகழ்வில், தொழிலதிபா் சந்திரசேகா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். இதற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள், இளைஞா்கள் செய்தனா்.