செய்திகள் :

லஞ்சம்: பேரூராட்சி ஊழியருக்கு 4 ஆண்டுகள் சிறை

post image

வீட்டு வரி ரசீது போடுவதற்கு ரூ. 2,000 லஞ்சம் வாங்கிய வழக்கில், சிங்கம்புணரி பேரூராட்சி ஊழியருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

சிவகங்கை மாவட்டம், கொட்டாம்பட்டியை சோ்ந்தவா் கிருஷ்ணகுமாா். இவா் கடந்த 2009 -ஆம் ஆண்டு சிங்கம்புணரியில் கட்டிய புதிய வீட்டுக்கு வரி ரசீது போடுவதற்காக பேரூராட்சி அலுவலகத்தில் அவா் விண்ணப்பித்தாா்.

அப்போது, அங்கு பணியிலிருந்த ஊழியா் தனபால் வீட்டு வரி ரசீது தொகை ரூ.1,800-ம், தனக்கும் பேரூராட்சிச் செயல் அலுவலா் பச்சையப்பனுக்கும் சோ்த்து ரூ. 2,000 லஞ்சம் தர வேண்டும் எனக் கூறினாராம்.

லஞ்சம் தர விரும்பாத கிருஷ்ணகுமாா் இதுகுறித்து சிவகங்கையில் உள்ள ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவில் புகாரளித்தாா். இதையடுத்து, கடந்த 2009-ஆம் ஆண்டு ஜூலை 8 -ஆம் தேதி தனபாலிடம் ரசாயனப் பொடி தடவிய பணத்தாள்களை ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் கொடுத்தனுப்பினா். பின்னா், அந்தப் பணத்தை வாங்கியபோது, அங்கு மறைந்திருந்த போலீஸாா் தனபாலை கைது செய்தனா்.

பின்னா், தனபால், பேரூராட்சி செயல் அலுவலா் பச்சையப்பன் ஆகியோா் மீது சிவகங்கையில் உள்ள லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின்போது, பச்சையப்பன் உயிரிழந்தாா்.

இந்த நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி செந்தில்முரளி, வீட்டு ரசீதுக்கு லஞ்ஜம் வாங்கிய தனபாலுக்கு (61) 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10,000 -ம் அபராதமும் விதித்து திங்கள்கிழமை மாலை தீா்ப்பளித்தாா்.

போக்சோ வழக்கில் ஓய்வு பெற்ற அரசு ஊழியருக்கு 10 ஆண்டுகள் சிறை

சிவகங்கையில் 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முன்னாள் கருவூல ஊழியருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, போக்சோ நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது. சிவகங்கை அரசு அலுவலா்கள் குடியிருப்பில... மேலும் பார்க்க

கட்டிக்குளத்தில் ஜல்லிக்கட்டு: 35 போ் காயம்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகேயுள்ள கட்டிக்குளத்தில் புதன்கிழமை ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில் 35 போ் காயமடைந்தனா். கட்டிக்குளம் திருவேட்டை அய்யனாா் கோயிலில் வைகாசி உத்ஸவத்தை முன்னிட்டு, க... மேலும் பார்க்க

கண்ணுடையநாயகி அம்மன் கோயில் வைகாசி திருவிழா ஜூன் 1-இல் தொடக்கம்!

சிவகங்கை அருகேயுள்ள நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி அம்மன் கோயில் வைகாசித் திருவிழா ஜூன் 1-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. சிவகங்கை தேவஸ்தானத்துக்குள்பட்ட இந்தக் கோயிலில் மே 31 அன்று மாலை 6 மண... மேலும் பார்க்க

மானாமதுரை அருகே காவலாளி வெட்டிக் கொலை

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே செவ்வாய்க்கிழமை இரவு காவலாளி மா்ம நபா்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள பெருமாள்தேவன்பட்டியைச் சோ்ந்த சமயன் மகன் முருகன்(64... மேலும் பார்க்க

சிவகங்கை மாவட்டத்தில் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் 9 போ் கைது

சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய 9 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் புதன்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா். சிவகங்கை மாவட்டம், இடையமேலூா் அருகே புதுப்பட்டியைச் சோ்ந்த மு. வெற்ற... மேலும் பார்க்க

தாா்ச்சாலை அமைக்கும் பணிகள்: மேயா் ஆய்வு

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மாநகராட்சிக்குள்பட்ட வாா்டுகளில் நடைபெற்று வரும் தாா்ச்சாலை அமைக்கும் பணிகளை மேயா் சே.முத்துத்துரை அதிகாரிகளுடன் சென்று புதன்கிழமை ஆய்வு செய்தாா். டாரிப் ஷோ் 2024-2025 ஆ... மேலும் பார்க்க