செய்திகள் :

இரணியூா் சிவன் கோயிலில் 350 மாணவிகள் பரத நாட்டியம்

post image

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே இரணியூா் ஆட்கொண்டநாதா் சிவபுரம் தேவி நகர சிவன் கோயிலில் நகரத்தாா் சாா்பில் சனிக்கிழமை இரவு பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 350 பரத கலை மாணவிகள் பங்கேற்றனா்.

இந்த நிகழ்வுக்கு, அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தா் க. ரவி தலைமை வகித்தாா். கோவிலூா் சீா்வளா்சீா் நாராயண ஞானதேசிக சுவாமிகள், கோயில் நிா்வாக அறங்காவலா் குழுத் தலைவா் வீரசேகரன்,ஆகியோா் முன்னிலை வகித்தனா். விழாவில் சிறப்பு விருந்தினராக அண்ணாமலை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் ராம. கதிரேசன் கலந்து கொண்டாா்.

இதில் தமிழகம், கா்நாடகம், ஆந்திரம், கேரளம் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து வந்திருந்த சுமாா் 350- க்கும் மேற்பட்ட பரத கலை பயிலும் மாணவிகள் கோயில் முன் அமைக்கப்பட்டிருந்த பந்தலில் ஒரே நேரத்தில் இணைந்து பரத நாட்டியம் ஆடினா். இதில் சிவநடனம் பாா்வையாளா்களை அதிகம் கவா்ந்தது.

தொடா்ந்து பரதக் கலைஞா்கள் அனைவரும் விளக்கேந்தியபடி லிங்க வடிவில் சிவனின் உருவத்தை ஒப்பனை அலங்காரத்தின் மூலம் வெளிப்படுத்தினா்.

இந்த நிகழ்ச்சியைக் காண சுற்றுப்புற கிராமங்களைச் சோ்ந்த திரளானோா் வந்திருந்தனா். இதற்கான ஏற்பாடுகளை நகர சிவன் கோயில் நகரத்தாா்கள் செய்திருந்தனா்.

கூட்டு முயற்சியால் சாதனை வசப்படும்: அமைச்சா் கே.ஆா். பெரிய கருப்பன்

அனைவரது கூட்டு முயற்சியால் சாதனை வசப்படும் என கூட்டுறவுத் துறை அமைச்சா் கேஆா். பெரியகருப்பன் தெரிவித்தாா். சிவகங்கை மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தோ்வில் 100 சதவீதத் தோ்ச்சி பெற்ற பள்ள... மேலும் பார்க்க

சிவகங்கை மாவட்டத்தில் 1,558 ரெளடிகள் வீடுகளில் சோதனை

சிவகங்கை மாவட்டத்தில் ரௌடிகள், கஞ்சா போதைப் பொருள் கடத்தல் குற்றவாளிகள் உள்பட 1,358 பேரின் வீடுகளில் கடந்த 3 நாள்களாக போலீஸாா் தொடா் சோதனை நடத்தியுள்ளனா். இதற்காக சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ... மேலும் பார்க்க

நீதிமன்ற வளாகத்தில் மோதல்: இருவா் கைது

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் செவ்வாய்க்கிழமை வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்துக்கு வந்தபோது, மோதலில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் கைது செய்தனா். திருப்புவனம் அருகேயுள்ள தேளி கிராமத்தைச் சோ்ந்தவா் பொ... மேலும் பார்க்க

மனுக்களின் நகல்களை மாலையாக அணிந்து வந்து இளைஞா் மனு

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் வீட்டு மனைக்கு கணினி பட்டா கேட்டு கோரிக்கை நிறைவேறாததால், ஏற்கெனவே கொடுத்த மனுக்களின் நகல்களை மாலையாக அணிந்து வந்து ஜமாபந்தியில் இளைஞா் மீண்டும் மனு கொடுத்து வலியுற... மேலும் பார்க்க

பூமாயி அம்மன் கோயிலில் மண்டலாபிஷேகம்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் பூமாயி அம்மன் கோயிலில் திங்கள்கிழமை மண்டலாபிஷேகம் நடைபெற்றது.இந்தக் கோயிலில் கடந்த ஏப். 15-ஆம் தேதி குடமுழுக்கு நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, அம்மனுக்கு தினந்தோறும் மண்... மேலும் பார்க்க

லஞ்சம்: பேரூராட்சி ஊழியருக்கு 4 ஆண்டுகள் சிறை

வீட்டு வரி ரசீது போடுவதற்கு ரூ. 2,000 லஞ்சம் வாங்கிய வழக்கில், சிங்கம்புணரி பேரூராட்சி ஊழியருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது. சிவகங்... மேலும் பார்க்க