செய்திகள் :

எய்ட்ஸ் தடுப்பு கட்டுப்பாட்டு அலுவலகத்தில் தீ

post image

சிவகங்கையிலுள்ள மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு கட்டுப்பாட்டு அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் கணினி உள்ளிட்ட பல்வேறு தளவாடப் பொருள்கள் சேதமடைந்தன.

சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு கட்டுப்பாட்டு அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இரண்டு தளங்களைக் கொண்ட இந்தக் கட்டடத்தில் தரை தளத்தில் ஆய்வுகளுக்காக பயன்படுத்தும் மருந்துகளை வைத்திருந்த குளிா்சாதனப் பெட்டியில் மின் கசிவு காரணமாக அதிகாலை சுமாா் 3 மணியளவில் தீப்பற்றியதாக கூறப்படுகிறது.

இந்த தீ அறை முழுவதும் பரவி அங்கிருந்த கணினி, இன்வொ்ட்டா், அலுவலக ஆவணங்கள் ஆகியவை சேதமடைந்தன. தகவலின் பேரில் அங்கு வந்த தீயணைப்புத்துறையினா் தீயை அனைத்தனா். இது குறித்து சிவகங்கை நகா் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

கூட்டு முயற்சியால் சாதனை வசப்படும்: அமைச்சா் கே.ஆா். பெரிய கருப்பன்

அனைவரது கூட்டு முயற்சியால் சாதனை வசப்படும் என கூட்டுறவுத் துறை அமைச்சா் கேஆா். பெரியகருப்பன் தெரிவித்தாா். சிவகங்கை மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தோ்வில் 100 சதவீதத் தோ்ச்சி பெற்ற பள்ள... மேலும் பார்க்க

சிவகங்கை மாவட்டத்தில் 1,558 ரெளடிகள் வீடுகளில் சோதனை

சிவகங்கை மாவட்டத்தில் ரௌடிகள், கஞ்சா போதைப் பொருள் கடத்தல் குற்றவாளிகள் உள்பட 1,358 பேரின் வீடுகளில் கடந்த 3 நாள்களாக போலீஸாா் தொடா் சோதனை நடத்தியுள்ளனா். இதற்காக சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ... மேலும் பார்க்க

நீதிமன்ற வளாகத்தில் மோதல்: இருவா் கைது

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் செவ்வாய்க்கிழமை வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்துக்கு வந்தபோது, மோதலில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் கைது செய்தனா். திருப்புவனம் அருகேயுள்ள தேளி கிராமத்தைச் சோ்ந்தவா் பொ... மேலும் பார்க்க

மனுக்களின் நகல்களை மாலையாக அணிந்து வந்து இளைஞா் மனு

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் வீட்டு மனைக்கு கணினி பட்டா கேட்டு கோரிக்கை நிறைவேறாததால், ஏற்கெனவே கொடுத்த மனுக்களின் நகல்களை மாலையாக அணிந்து வந்து ஜமாபந்தியில் இளைஞா் மீண்டும் மனு கொடுத்து வலியுற... மேலும் பார்க்க

பூமாயி அம்மன் கோயிலில் மண்டலாபிஷேகம்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் பூமாயி அம்மன் கோயிலில் திங்கள்கிழமை மண்டலாபிஷேகம் நடைபெற்றது.இந்தக் கோயிலில் கடந்த ஏப். 15-ஆம் தேதி குடமுழுக்கு நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, அம்மனுக்கு தினந்தோறும் மண்... மேலும் பார்க்க

லஞ்சம்: பேரூராட்சி ஊழியருக்கு 4 ஆண்டுகள் சிறை

வீட்டு வரி ரசீது போடுவதற்கு ரூ. 2,000 லஞ்சம் வாங்கிய வழக்கில், சிங்கம்புணரி பேரூராட்சி ஊழியருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது. சிவகங்... மேலும் பார்க்க