செய்திகள் :

வெற்றிப் பாதைக்கு திரும்ப ராஜஸ்தான் ராயல்ஸ் செய்ய வேண்டியதென்ன? ராபின் உத்தப்பா பதில்!

post image

ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தொடர்ச்சியாக இரண்டு தோல்விகளை சந்தித்துள்ளது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா பேசியுள்ளார்.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் ஆரம்ப போட்டிகள் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு சிறப்பானதாக அமையவில்லை. ஹைதராபாதில் நடைபெற்ற முதல் போட்டியில் சன்ரைசர்ஸ் அணியிடம் 44 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. குவாஹாட்டியில் நேற்று நடைபெற்ற கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் தோல்வியைத் தழுவியது.

ராபின் உத்தப்பா சொல்வதென்ன?

நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் தோல்வியைத் தழுவிய நிலையில், ஐபிஎல் மெகா ஏலத்தில் பயன்படுத்திய யுக்தியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் போட்டிகளின்போது பயன்படுத்த வேண்டும் என ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அவர் ஜியோஹாட்ஸ்டாரில் பேசியதாவது: ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் ஐபிஎல் மெகா ஏலத்தின்போது பயன்படுத்திய யுக்தியை போட்டிகளின்போதும் செயல்படுத்த வேண்டும். போட்டிகளின்போது என்ன தவறு செய்கிறார்கள் என்பதை அவர்கள் ஆராய வேண்டும். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பந்துவீச்சு வரிசை சற்று பலவீனமாக உள்ளது.

இதையும் படிக்க: சன்ரைசர்ஸ் அணி 300 ரன்கள் குவித்து வரலாறு படைக்குமா?

அவர்களின் பந்துவீச்சு வரிசை சந்தீப் சர்மா மற்றும் ஜோஃப்ரா ஆர்ச்சரை மட்டுமே அதிகப்படியாக நம்பியிருக்கிறது. ஜோஃப்ரா ஆர்ச்சர் பல்வேறு காயங்களுக்குப் பிறகு மீண்டும் அணியில் இணைந்துள்ளார். காயங்களால் பாதிக்கப்படுவது அவரது தன்னம்பிக்கையை குறைக்கும்.

கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் பொறுப்பாக விளையாடி ரன்கள் குவித்திருக்க வேண்டும். பேட்டிங் செய்வதற்கு ஆடுகளம் கடினமாக இருந்ததால், நன்றாக பேட்டிங் செய்துகொண்டிருந்த அவர் பெரிய அளவில் ரன்கள் குவித்திருக்க வேண்டும். துரதிருஷ்டவசமாக, அவர் அதனை செய்யவில்லை என்றார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் நட்சத்திர வீரர்களான சஞ்சு சாம்சன், யஷஸ்வி ஜெய்ஸ்வால், துருவ் ஜுரெல், ரியான் பராக் பேட்டிங்குக்கு வலிமை சேர்த்தாலும், பந்துவீச்சில் அந்த அணி பலவீனமாகவே உள்ளது.

இதையும் படிக்க: சேப்பாக்கம் சிஎஸ்கேவின் கோட்டை: ஷேன் வாட்சன்

ஹைதராபாதுக்கு எதிரான போட்டியில் 4 ஓவர்கள் வீசிய ஜோஃப்ரா ஆர்ச்சர் 76 ரன்கள் வாரி வழங்கி மோசமான சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

ராஜஸ்தானுக்கு எதிராக சிஎஸ்கே பந்துவீச்சு; அணியில் இரண்டு மாற்றங்கள்!

ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.ஐபிஎல் தொடரில் குவாஹாட்டியில் நடைபெறும் இன்றையப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ... மேலும் பார்க்க

குஜராத் டைட்டன்ஸ் அணியில் மிடில் ஆர்டர் பிரச்னையா? ஷுப்மன் கில் பதில்!

குஜராத் டைட்டன்ஸ் அணியின் மிடில் ஆர்டர் குறித்து அந்த அணியின் கேப்டன் ஷுப்மன் கில் பேசியுள்ளார்.ஐபிஎல் தொடரில் அகமதாபாத் திடலில் நேற்று (மார்ச் 29) நடைபெற்ற போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை... மேலும் பார்க்க

மிட்செல் ஸ்டார்க் 5 விக்கெட்டுகள்; 163 ரன்களுக்கு ஆட்டமிழந்த ஹைதராபாத்!

தில்லி கேபிடல்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 163 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.ஐபிஎல் தொடரில் விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வரும் இன்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்ற... மேலும் பார்க்க

சுனில் நரைனிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டேன்: குல்தீப் யாதவ்

சுனில் நரைனிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டதாக இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார்.இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர்களில் ஒருவரான குல்தீப் யாதவ், நடப்பு ஐபிஎல் த... மேலும் பார்க்க

ஐபிஎல் தொடரில் மிட்செல் ஸ்டார்க்கின் ஆதிக்கம்: ஹெட், கிஷன், நிதீஷ் ஆட்டமிழப்பு!

தில்லி கேபிடல்ஸ் அணி வீரர் மிட்செல் ஸ்டார்க் 3 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். முதல் ஓவரில் ஸ்டார்க் ஓவரில் அபிஷேக் சர்மா ரன் அவுட்டானார். 3ஆவது ஓவரில் 1, 3ஆவது பந்துகளில் முறையே இஷான் க... மேலும் பார்க்க

முதல் ஓவரிலேயே ரன் அவுட்டான அபிஷேக் சர்மா..! 25/3 ரன்களுடன் சன்ரைசர்ஸ் தடுமாற்றம்!

தில்லிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் அணியின் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா ரன் அவுட்டானார். இந்த ஐபிஎல் சீசனின் 10ஆவது போட்டியில் தில்லை எதிர்த்து தனது போட்டியில் சன்ரைசர்ஸ் தனது சொந்த மண்ணில் விளையாட... மேலும் பார்க்க