செய்திகள் :

வேலூர்: `கலகலத்துப் போன மாநாடு' - சொதப்பிய கே.சி.வீரமணி, அப்செட் எடப்பாடி?

post image
வேலூர் கோட்டை மைதானத்தில், நேற்று (பிப்ரவரி 16) மாலை, அ.தி.மு.க-வின் இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை மண்டல மாநாடு நடைபெற்றது.

இந்த மாநாட்டில், அக்கட்சியின் பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி பங்கேற்றுப் பேசினார். முன்னதாக, வேலூர் மாநகர் மாவட்ட செயலாளரின் அலுவலகத்துக்குச் சென்ற எடப்பாடி பழனிசாமி `அம்மா இலவச மருத்துவ ஆலோசனை மையத்தை’ தொடங்கி வைத்தார். அந்தப் பகுதியில் கட்சி நிர்வாகிகள் சுமார் 50 பேர் மட்டுமே இருந்தனர். தொண்டர்கள் வருகை இல்லாமல் வெறிச்சோடியே காணப்பட்டது.

எடப்பாடி பழனிசாமி

ஆரவாரமாக வந்த அ.தி.மு.க நிர்வாகிகளை அலுவலகத்துக்குள் வர பவுன்சர்கள் அனுமதிக்கவில்லை. அதுமட்டுமல்லாமல், பத்திரிகை நிருபர்கள், ஊடகவியலாளர்களும் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

மேலும், எடப்பாடி பழனிசாமி வந்த பிறகு பத்திரிகையாளர்கள் மைக்கை நீட்டியபோது, உடன் வந்த முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி பத்திரிகையாளர்களை தள்ளிவிட்டதால் பரபரப்பு கூடியது.

அதைத் தொடர்ந்து, கோட்டை மைதானத்தில் முக்கிய நிர்வாகிகளையே உள்ளே விடாமல் பவுன்சர்கள் தடுத்து விட்டதாக கூறப்படுகிறது. அங்கு வந்த முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி `பத்திரிகையாளர்கள் வரத் தேவையில்லை. நீங்கள் போகலாம்’ என்றார். பதிலுக்கு பத்திரிகையாளர்களும் `எதற்கு அழைப்பு கொடுத்தீங்க..’ எனக் கேட்டு வீரமணியிடம் கடும் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.

இதையடுத்து மாநாட்டு பகுதிக்கு வந்த எடப்பாடி பழனிசாமி, ஏற்பாடுகள் மிக மோசமாக செய்யப்பட்டிருப்பதாக கே.சி.வீரமணி உள்ளிட்ட மாவட்டச் செயலாளர்களிடம் கடிந்துகொண்டாக கூறுகின்றனர்.

பத்திரிகையாளர்கள் மேல் கை வைத்த கே.சி.வீரமணி

அது மட்டுமல்லாமல், எடப்பாடி பேசிக்கொண்டிருந்தபோது அருகிலேயே நாற்காலி போட்டு ஏறி நின்ற இளைஞர் கிண்டலடித்துக் கொண்டிருந்தார்.

"இளைஞர்கள், இளம்பெண்கள் பாசறை மாநாடு பெயருக்கேற்ப இல்லாததும் எடப்பாடியை கோபமடையச் செய்தது. இளைஞர்கள் ஓரளவு அழைத்து வரப்பட்டிருந்தனர். ஆனால், விரல் விட்டு எண்ணும் அளவுக்கே இளம் பெண்களின் தலைகளும் தென்பட்டது. இவ்வளவு சொதப்பலால், `கலகலத்துப் போன மாநாட்டை நடத்தாமலேயே இருந்திருக்கலாம். மாநாட்டின் நோக்கமும் சிதைந்துவிட்டது’ என்று எடப்பாடி பழனிசாமியே அப்செட் ஆகி, கே.சி.வீரமணி உள்ளிட்ட மாவட்டச் செயலாளர்களை எச்சரிக்கை செய்துவிட்டுச் சென்றார்" என நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

விருதுநகர்: அரசுப் பள்ளி சத்துணவு மையத்தில் திடீர் ஆய்வு; சத்துணவு அமைப்பாளர் சஸ்பெண்ட்..!

விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஆவுடையாபுரத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் உள்ள சத்துணவு மையத்தில் விருதுநகர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) மற்றும... மேலும் பார்க்க

Kumbh Mela: ``அளவுக்கு அதிகமான டிக்கெட் விற்பனை ஏன்?" -ரயில்வேக்கு நீதிமன்றம் கேள்வி!

டெல்லி ரயில்வே நிலையத்தில் கும்பமேளாவுக்காக கூடிய கூட்டத்தால் 18 பேர் மரணித்ததை அடுத்து தொடுக்கப்பட்ட பொதுநல வழக்கில், அதிக முன்பதிவில்லாத டிக்கெட் விற்பனை செய்யப்படுவது, ஒரே பெட்டியில் அதிக நபர்கள் ஏ... மேலும் பார்க்க

`தமிழ்நாட்டில் ஒரே நாளில் 12 பாலியல் வன்கொடுமைகள்; இனியாவது ஸ்டாலின்...' - இபிஎஸ் காட்டம்!

கடந்த சில மாதங்களாகவே பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகமாக நடந்து வருகின்றன.இது குறித்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் 'தி.மு.க' தலைமையிலான தமிழ்நாடு அரசைக் ... மேலும் பார்க்க

NTK: "தமிழ்த்தேசியத்திற்கு எதிரான பாஜகவிடம் எங்களை விற்றுவிடுவீர்கள்" - சீமான் மீது தமிழரசன் காட்டம்

நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் தமிழரசன் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.இது தொடர்பாகத் தமிழரசன் வெளியிட்டுள்ள கடிதத்தில், "32 ஆண்டு காலமாகத் தமிழ்த் தேசிய அரசியலுக்கான ப... மேலும் பார்க்க

Stalin: `வடசென்னையை வளர்ந்த சென்னையாக்குவோம்; 90% வாக்குறுதிகள்..!“ - முதல்வர் மு.க.ஸ்டாலின்

இன்று (பிப்19) சென்னை புளியந்தோப்பில் 712 குடும்பங்களுக்கு புதிய குடியிருப்பு ஒதுக்கீடு ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இதையடுத்து அந்நிகழ்ச்சியில் பேசிய மு.க.ஸ்டாலின், வட சென்னையின் வளர்... மேலும் பார்க்க

Vijay: ``விஜய் தனியாக `CBSE' பள்ளி நடத்துகிறார், அதில் இந்தி...'' -பாஜக அண்ணாமலை கேள்வி

மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், 'தமிழ்நாடு அரசு புதிய கல்விக் கொள்கையை ஏற்க மறுக்கிறது.மும்மொழி கொள்கையை ஏற்றால் தான் நிதி தருவோம்' என்று பேசியது சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.மத்திய... மேலும் பார்க்க