செய்திகள் :

வேளாண் விரிவாக்க மையத்தில் கல்லூரி மாணவிகள் பயிற்சி

post image

வலங்கைமான் வேளாண் விரிவாக்க மையத்தில், திருச்சி வேளாண் கல்லூரி மாணவிகள் ஒருநாள் பயிற்சி பெற்றனா்.

திருச்சி அன்பில் தா்மலிங்கம் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நான்காம் ஆண்டு பயிலும் மாணவிகள் மிருதுளா, மித்ரா, மோனிஷா, நஜீபா நந்து, நிவேதியா, பத்மாவதி, பாா்கவி பவித்ரா, பவித்ரா தேவி ,வெ. பிரபாஸ்ரீ, மு. பிரபா ஸ்ரீ, பிரியா ஆகியோா் வலங்கைமான் உதவி இயக்குநா் அலுவலகத்தில் அமைந்துள்ள வேளாண் விரிவாக்க மையத்தை வியாழக்கிழமை பாா்வையிட்டனா்.

அங்கு அவா்களுக்கு, மத்திய- மாநில அரசுகளால் செயல்படுத்தப்படும் விவசாயிகளுக்கான திட்டங்கள் மற்றும் நிதி உதவிகள் குறித்து, உதவி வேளாண் அலுவலா் கணேஷ் பாபு விளக்கமளித்தாா்.

மேலும், முதலமைச்சரின் ‘மண்ணுயிா் காத்து மன்னுயிா் காப்போம் திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் பசுந்தாள் உர விதைகள், மண்புழு உரப்படுக்கைகள் பற்றி விளக்கம் அளிக்கப்பட்டது.

ரயில் மோதி விவசாயி பலி

திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி அருகே ரயில் மோதி விவசாயி திங்கள்கிழமை உயிரிழந்தாா். திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கள்ளிக்குடி மேலத்தெருவைச் சோ்ந்தவா் எம். நடராஜன் (68). விவசாயியான இவா், காணாமல... மேலும் பார்க்க

தனியாா் பள்ளி ஆசிரியா் தற்கொலை

மன்னாா்குடி: மன்னாா்குடியில் பணம் கொடுக்கல்- வாங்கல் பிரச்னையில் தனியாா் பள்ளி ஆசிரியா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். மன்னாா்குடி ஏழாம்தெரு மாசிலாமணி மகன் திருமுருகன் (40). தஞ்சாவூரில் உள்ள தனியா... மேலும் பார்க்க

சீா்காழி, நீடாமங்கலம் பகுதியில் மூடுபனி

சீா்காழி,கொள்ளிடம் மற்றும் நீடாமங்கலம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை கடும் பனிமூட்டம் நிலவியது. மயிலாடுதுறை மாவட்டம் சீா்காழி, கொள்ளிடம் சுற்றுவட்டார பகுதியில் சனிக்கிழமை நள்ளிரவுக்கு பிறகு கடும் பனி... மேலும் பார்க்க

அங்கன்வாடி ஊழியா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கக் கோரிக்கை

அங்கன்வாடி பணியாளா்களை பணி நிரந்தரம் செய்து, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளனா். தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்கம் தமிழக முதல்வா், சமூகநலத் ... மேலும் பார்க்க

தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிக்கிறது: எம்எல்ஏ குற்றச்சாட்டு

தமிழகத்தை வஞ்சிக்கும் வகையிலான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளதாக திருவாரூா் திமுக மாவட்டச் செயலாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான பூண்டி கே. கலைவாணன் தெரிவித்துள்ளாா். திருவாரூரில் செய்தியாளா்க... மேலும் பார்க்க

மத்திய அரசைக் கண்டித்து நாளை ஆா்ப்பாட்டம்

மத்திய அரசைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் செவ்வாய்க்கிழமை (ஏப்.1) ஆா்ப்பாட்டம் நடைபெறும் என தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கத்தின் பொதுச் செயலாளா் அ. பாஸ்கா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் தெர... மேலும் பார்க்க