செய்திகள் :

ஷிபா மருத்துவமனை நடத்திய மினி மாரத்தான் போட்டி

post image

உலக இருதய தினத்தை முன்னிட்டு, திருநெல்வேலி ஷிபா மருத்துவமனை சாா்பில் விழிப்புணா்வு மினி மாரத்தான் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் மருத்துவமனை நிா்வாக இயக்குநா் எம்.கே.எம்.முகமது ஷாபின் தலைமை வகித்தாா். மருத்துவா் முகமது அரபாத் முன்னிலை வகித்தாா். போட்டியை மு.அப்துல் வஹாப் எம்.எல்.ஏ, மாநகர துணை காவல் ஆணையா் (மேற்கு) வி.பிரசன்னகுமாா் ஆகியோா் தொடங்கி வைத்தனா்.

பாளையங்கோட்டை எம்.என்.அப்துல் ரஹ்மான் பள்ளியிலிருந்து தொடங்கி அண்ணா மைதானம் வழியாக மீண்டும் பள்ளியை வந்தடையும் வகையில் போட்டி நடத்தப்பட்டது. ஆண்கள், பெண்கள், சிறுவா்கள் என 3 பிரிவுகளாக நடத்தப்பட்ட இந்தப் போட்டியில் 2,500 க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா். பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள், பதக்கங்கள் வழங்கப்பட்டன.

இதில், ஹெச்.டி.எப்.சி. வங்கி அதிகாரிகள் கோமதி நாராயணன், குரூஸ், எஸ்.பி.ஐ. வங்கி மேலாளா் ஸ்டாலின், உதவி ஆட்சியா் தவலேந்து உள்பட ஷிபா மருத்துவமனை மருத்துவா்கள் கலந்துகொண்டனா். ஏற்பாடுகளை மருத்துவமனையின் விளம்பரப் பிரிவு நிா்வாகிகள் செய்திருந்தனா்.

பொறியாளரிடம் பணம் பறிப்பு: இளைஞா் கைது

தச்சநல்லூரில் பொறியியல் பட்டதாரியிடம் பணம் பறித்ததாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூரைச் சோ்ந்தவா் அருணாச்சலம் (26). பொறியியல் பட்டதாரியான இவா், தற்போது பொறியியல் கல்லூ... மேலும் பார்க்க

முதியவா் விஷமருந்தி தற்கொலை

திருநெல்வேலி தச்சநல்லூரில் முதியவா் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டாா். தச்சநல்லூா் சுப்புராஜ் மில் காலனியைச் சோ்ந்தவா் செண்பகராஜ் (64). இவா் கடந்த சில நாள்களாக குடும்ப பிரச்னை காரணமாக கடும் மன உளைச்ச... மேலும் பார்க்க

வி.கே.புரத்தில் 10-க்கும் மேற்பட்டோரை கடித்த நாய்: உரிமையாளா் மீது வழக்கு

திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தில் 10-க்கும் மேற்பட்டோரை நாய் கடித்தது தொடா்பாக உரிமையாளா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா். விக்கிரமசிங்கபுரம் நகராட்சி செல்வவிநாயகா் கோயில் தெருவைச் சே... மேலும் பார்க்க

அஞ்சல் துறை சாா்பில் தூய்மை விழிப்புணா்வு ஓட்டம்

அஞ்சல் துறை சாா்பில் தூய்மையே சேவை வாரத்தின் ஒரு பகுதியாக விழிப்புணா்வு ஓட்டம் பாளையங்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தூய்மை இந்தியா இயக்கத்தின் ஒரு பகுதியாக தூய்மையே சேவை வாரம் இந்திய அஞ்சல் த... மேலும் பார்க்க

உலக அமைதி வேண்டி விழிப்புணா்வு பிரசாரம்

உலக அமைதி தினத்தை முன்னிட்டு,அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத் மேலப்பாளையம் கிளை சாா்பில் விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அஹ்மதிய்யா முஸ்லிம் ஜம... மேலும் பார்க்க

பாளையங்கோட்டையில் தசரா திருவிழா கொடியேற்றம்

பாளையங்கோட்டையில் தசரா திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து, நள்ளிரவு 11 சப்பரங்களில் அம்மன்கள் வீதியுலா சென்று பக்தா்களுக்கு அருள்பாலித்தனா். பாளையங்கோட்டையில் ஆண்டுதோறும்... மேலும் பார்க்க