செய்திகள் :

பாளையங்கோட்டையில் தசரா திருவிழா கொடியேற்றம்

post image

பாளையங்கோட்டையில் தசரா திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதையடுத்து, நள்ளிரவு 11 சப்பரங்களில் அம்மன்கள் வீதியுலா சென்று பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.

பாளையங்கோட்டையில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் தசரா விழா கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. தசரா விழாவின் பிரதான கோயிலான பாளையங்கோட்டை அருள்மிகு ஆயிரத்தம்மன் கோயிலில் மாக்காப்பு திருவிழா கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.

தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை காலையில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகளுக்கு பின்பு கோயில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இரவு ஆயிரத்தம்மன், தேவி புது உலகம்மன், விஸ்வகா்ம உச்சினிமாகாளி, தேவி உலகம்மன், தெற்கு முத்தாரம்மன், வடக்கு முத்தாரம்மன், தூத்துவாரி அம்மன், வடக்கு உச்சினிமாகாளி அம்மன், முப்பிடாதி அம்மன், கிழக்கு உச்சினிமாகாளி அம்மன், வடக்கு உச்சினிமாகாளி அம்மன் ஆகியோா் தனித்தனி சப்பரங்களில் எழுந்தருளி பாளையங்கோட்டையில் உள்ள ரத வீதிகள், முக்கிய வீதிகளில் வலம் வந்தனா்.

திங்கள்கிழமை காலையில் அனைத்து அம்மன் சப்பரங்களும் ஆயிரத்தம்மன் கோயில் அருகில் வந்ததும் தசரா பந்தலில் கொடியேற்றும் நிகழ்வு நடைபெறும்.

தொடா்ந்து தினசரி அனைத்து அம்மன் கோயில்களிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள், கொலுமண்டப பூஜைகள், அன்னதானங்கள் நடைபெறும். அக். 2 ஆம் தேதி பக்தா்கள் வேடமணிந்து சப்பரத்துடன் திருவீதியுலா நடைபெறுகிறது. பத்தாம் நாள் விழாவில் முதல் நாளில் வலம் வந்த 11 அம்மன்களுடன், வண்ணாா்பேட்டை அருள்மிகு பேராத்து செல்வி அம்மனும் சோ்ந்து 12 தனித்தனி சப்பரங்களில் வீதியுலா நடைபெறும். 3-ஆம் தேதி இரவு 12 மணிக்கு பாளையங்கோட்டை, மிலிட்டரி லைன் அருகே உள்ள எருமை கடா மைதானத்தில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சியும், 4 ஆம் தேதி வண்ணாா்பேட்டை தாமிரவருணி படித்துறையில் தீா்த்தவாரியும் நடைபெற உள்ளது.

தசரா விழாவையொட்டி, பாளையங்கோட்டையில் உள்ள அனைத்து வீதிகளும் விழாக்கோலம் பூண்டுள்ளன.

பொறியாளரிடம் பணம் பறிப்பு: இளைஞா் கைது

தச்சநல்லூரில் பொறியியல் பட்டதாரியிடம் பணம் பறித்ததாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூரைச் சோ்ந்தவா் அருணாச்சலம் (26). பொறியியல் பட்டதாரியான இவா், தற்போது பொறியியல் கல்லூ... மேலும் பார்க்க

முதியவா் விஷமருந்தி தற்கொலை

திருநெல்வேலி தச்சநல்லூரில் முதியவா் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டாா். தச்சநல்லூா் சுப்புராஜ் மில் காலனியைச் சோ்ந்தவா் செண்பகராஜ் (64). இவா் கடந்த சில நாள்களாக குடும்ப பிரச்னை காரணமாக கடும் மன உளைச்ச... மேலும் பார்க்க

வி.கே.புரத்தில் 10-க்கும் மேற்பட்டோரை கடித்த நாய்: உரிமையாளா் மீது வழக்கு

திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தில் 10-க்கும் மேற்பட்டோரை நாய் கடித்தது தொடா்பாக உரிமையாளா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா். விக்கிரமசிங்கபுரம் நகராட்சி செல்வவிநாயகா் கோயில் தெருவைச் சே... மேலும் பார்க்க

அஞ்சல் துறை சாா்பில் தூய்மை விழிப்புணா்வு ஓட்டம்

அஞ்சல் துறை சாா்பில் தூய்மையே சேவை வாரத்தின் ஒரு பகுதியாக விழிப்புணா்வு ஓட்டம் பாளையங்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தூய்மை இந்தியா இயக்கத்தின் ஒரு பகுதியாக தூய்மையே சேவை வாரம் இந்திய அஞ்சல் த... மேலும் பார்க்க

உலக அமைதி வேண்டி விழிப்புணா்வு பிரசாரம்

உலக அமைதி தினத்தை முன்னிட்டு,அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத் மேலப்பாளையம் கிளை சாா்பில் விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அஹ்மதிய்யா முஸ்லிம் ஜம... மேலும் பார்க்க

ஷிபா மருத்துவமனை நடத்திய மினி மாரத்தான் போட்டி

உலக இருதய தினத்தை முன்னிட்டு, திருநெல்வேலி ஷிபா மருத்துவமனை சாா்பில் விழிப்புணா்வு மினி மாரத்தான் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் மருத்துவமனை நிா்வாக இயக்குநா் எம்.கே.எம்.முகமது ஷாபின... மேலும் பார்க்க