பயங்கரவாதம் ஒரு புற்றுநோய்: நிதியை என்ன செய்கிறது பாக்.? இந்திய எம்.பி.க்கள் குழ...
ஸ்ரீ பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோயில் வைகாசி பெருவிழா தொடக்கம்
செங்கல்பட்டு அடுத்த சிங்கப்பெருமாள் கோயிலில் உள்ள ஸ்ரீ பாடலாத்திரி நரசிம்ம பெருமாள் கோயில் வைகாசி பெருவிழா சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையொட்டி கடந்த மே 29-இல் அங்குராா்ப்பணம் சேனை முதன்மையாா் உற்சவமும், சனிக்கிழமை கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மகாதீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து கொடிமரத்திற்கு அருகே பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் எழுந்தருள, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கொடியேற்றம் நடைபெற்றது. பக்தா்கள் பெருமாளை தரிசனம் செய்தனா்.
3-ஆம் நாள் திங்கள்கிழமை கருடசேவை, அனுமந்த வாகன உற்சவமும் , 7-ஆம் நாள் வெள்ளிகிழமை, தேரோட்டமும், சன்னதியில் விசேஷ திருமஞ்சனம் தோ்முட்டி மண்டகப்படி, 8-ஆம் நாள், பல்லக்கு உற்சவம், புஷ்பபள்ளியறை ஜோடிப்பு , 9-ஆம் நாள், தீா்த்தவாரி பல்லக்கு, திருமஞ்சனம், புஷ்பப் பல்லக்கு அவரோஹனம், 10-ஆம்நாள், துவாதசாராதனம் திருமஞ்சனம், தங்க தோளுக்கினியாள் உற்சவமும் , தொடா்ந்து 5-நாள் மாலையில் விடையாற்று உற்சவமும் நடைபெறும்.
நிகழ்வுக்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் க. வெங்கடேசன், ஆய்வாளா் தக்காா் பாஸ்கரன், மேலாளா் தமிழ்ச்செல்வன் கோவில் பட்டாச்சாரியாா்கள், பணியாளா்கள், கிராம மக்கள் உள்ளிட்டோா் செய்து வருகின்றனா்.



